Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கட்டணம் செலுத்தாததால் 250 மாணவர்களுக்கு கொடூர தண்டனை வழங்கிய பள்ளி நிர்வாகம்!

Go down

கட்டணம் செலுத்தாததால் 250 மாணவர்களுக்கு கொடூர தண்டனை வழங்கிய பள்ளி நிர்வாகம்! Empty கட்டணம் செலுத்தாததால் 250 மாணவர்களுக்கு கொடூர தண்டனை வழங்கிய பள்ளி நிர்வாகம்!

Post by oviya Thu Feb 05, 2015 1:06 pm

கேரளாவில் பள்ளிக்கட்டணம் செலுத்தாத 250 மாணவர்களை வகுப்பறைக்குள் பூட்டி வைத்து, பள்ளி நிர்வாகம் தண்டனை வழங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மனருல் ஹுதா அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் பள்ளியின், அங்கீகாரம் கடந்த மார்ச் மாதமே முடிந்து விட்டது. அதை இன்னும் புதுப்பிக்கவில்லை என்பதால், பெற்றோர்கள் கட்டணம் செலுத்த தாமதித்துள்ளனர்.

கட்டணம் செலுத்தாத மாணவர்கள் கடந்த திங்கள்கிழமை வகுப்பறைக்கு வெளியே ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டிருந்தனர். அதுதொடர்பாக விசாரிக்க, சில பெற்றோர்கள் பள்ளிக்கு சென்றுள்ளனர்.

அப்போது, மாணவர்கள் வகுப்பறையில் இருப்பதாக பள்ளி முதல்வர் தெரிவித்துள்ளார், ஆனால் மாணவர்கள் அனைவரும் கருத்தரங்கக் கூடத்தில் அடைக்கப்பட்டிருந்தனர்.

கருத்தரங்கக் கூடத்தில் அடைக்கப்பட்டதால் மயக்கமடைந்த 8 வயது மாணவி இஷா பாத்திமா கூறுகையில், எங்களை அடைத்து வைத்திருந்த அறைக்குள் கடும் வெப்பம் நிலவியது. எங்களுக்கு குடிக்க நீர் தர மறுத்துவிட்டனர், உட்காரவும் இடமில்லை.

அது தொடர்பாகக் கேட்டபோது, ஒருவர் மடி மீது மற்றவர் அமருங்கள் எனக் கூறிவிட்டனர் என்று கூறியுள்ளார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டை பள்ளி நிர்வாகம் மறுத்துள்ளது. இது குறித்து கருத்து கூறியுள்ள பள்ளியின் இயக்குநர் டி.எம். அபுபக்கர், கட்டணம் செலுத்தாத மாணவர்களை கருத்தரங்கக் கூடத்தில் ஒன்று கூடச் சொன்னோம்.

அவர்களிடம் பள்ளி முதல்வர், கட்டணம் செலுத்துவதற்கான இறுதிநாள் குறித்து பேசவிருந்தார். அப்போது, சில பெற்றோர்கள் பள்ளி மூடப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அந்த கருத்தரங்க அறையின் கதவு ஜன்னல்களை அடைத்து போராட்டம் நடத்தத் தொடங்கினர் என்று கூறியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்தில், பள்ளி முதல்வர் பி.அப்துல் ரஹ்மான், துணை முதல்வர் கிரிஜா சுரேந்திரன் கணக்காளர் ஷாஜ கான் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum