Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


காந்தியவாதி சசிபெருமாள் உடல் அவரது சொந்த ஊரில் நல்லடக்கம்: ஏராளமான மக்கள் இறுதி அஞ்சலி

Go down

காந்தியவாதி சசிபெருமாள் உடல் அவரது சொந்த ஊரில் நல்லடக்கம்: ஏராளமான மக்கள் இறுதி அஞ்சலி Empty காந்தியவாதி சசிபெருமாள் உடல் அவரது சொந்த ஊரில் நல்லடக்கம்: ஏராளமான மக்கள் இறுதி அஞ்சலி

Post by oviya Fri Aug 07, 2015 4:16 pm

மதுவிலக்கு கோரி போராடிய காந்தியவாதி சசிபெருமாள் உடல் அவரது சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கன்னியாகுமரி அருகே உண்ணாமலைக்கடையில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக் கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட காந்தியவாதி சசிபெருமாள் உயிரிழந்தார்.

இதையடுத்து பூரண மதுவிலக்கை அமல்படுத்தினால் மட்டுமே அவரது உடலை வாங்குவோம் எனக் கூறி சசிபெருமாளின் குடும்பத்தினர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர்.

பின்னர் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் சசிபெருமாளின் உடலை பெற்று அடக்கம் செய்யுமாறு கேட்டுக் கொண்டதால் அவரது குடும்பத்தினர் சசிபெருமாளின் உடலைப் பெற சம்மதம் தெரிவித்தனர்.

இதையடுத்து அவரது உடல் நாகர்கோவிலில் இருந்து, சேலத்திற்கு கொண்டு வரப்பட்டு முக்கிய வீதிகளில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அப்போது சசிபெருமாள் உடலுக்கு ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் அவரது சொந்த ஊரான இ.மேட்டுக்காட்டில், அவரது வீட்டுக்கு முன்பாக சசிபெருமாள் உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டபோது, பல்வேறு அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

சசிபெருமாளின் மூத்த மகன் விவேக் இறுதி சடங்கு செய்ய, சசிபெருமாள் உடல் அவர் வீட்டுக்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மேலும், அதே இடத்தில் சசிபெருமாள் நினைவு மண்டபம் கட்ட ஏற்பாடுகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.


oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum