Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


8 மாத கர்ப்பிணியை கொன்று தற்கொலைக்கு முயன்ற காதல் கணவர்: திருப்பூரில் பரபரப்பு

Go down

8 மாத கர்ப்பிணியை கொன்று தற்கொலைக்கு முயன்ற காதல் கணவர்: திருப்பூரில் பரபரப்பு Empty 8 மாத கர்ப்பிணியை கொன்று தற்கொலைக்கு முயன்ற காதல் கணவர்: திருப்பூரில் பரபரப்பு

Post by oviya Wed Jul 15, 2015 3:02 pm

திருப்பூரில் 8 மாத கர்ப்பிணியை கொன்று கணவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை ஜீவாநகர் 2–வது வீதியை சேர்ந்த ஆகாஷ்ராஜ் (24) பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார்.

இவர் கடந்த ஓராண்டுக்கு முன் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி அதே பகுதியை சேர்ந்த முகமது நாசரின் 2–வது மகள் கஜிதாபேகத்தை (18) காதல் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்னர் ஆகாஷ்ராஜ் தனது மனைவி மற்றும் மனைவியின் பெற்றோருடன் கூட்டுக்குடும்பமாக வசித்துள்ளார்.

ஆகாஷ்ராஜிக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததால், தினமும் மதுகுடித்து விட்டு மனைவி கஜிதா பேகத்திடம் தகராறு செய்துள்ளார்.

தற்போது கஜிதா பேகம் 8 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், நேற்று வழக்கம் போல் கஜிதாவின் பெற்றோர் முகமது நாசரும், அவருடைய மனைவி சகிலா பேகமும் வேலைக்கு சென்றுள்ளனர்.

அப்போது வீட்டில் ஆகாஷ்ராஜியும், கஜிதா பேகமும் இருந்தனர். பின்னர் மாலையில் வேலை முடிந்து சகிலா பேகம் வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்துள்ளது.

சகிலாபேகம் தனது மகள் பெயரை பலமுறை சொல்லி அழைத்தும் கதவு திறக்கப்படாததால், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஏணி மூலம் ஓட்டை பிரித்து உள்ளே பார்த்துள்ளனர்.

அங்கு கஜிதா பேகமும், ஆகாஷ்ராஜியும் ரத்தவெள்ளத்தில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார், கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது அங்கு கஜிதா பேகம் இறந்து கிடந்தார்.

ஆகாஷ்ராஜின் 2 கைகளிலும், பிளேடால் அறுத்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.

உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

கஜிதா பேகத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில் கணவன்–மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில், ஆத்திரம் அடைந்த ஆகாஷ்ராஜ், கர்ப்பிணி என்றும் பாராமல் கஜிதா பேகத்தை சுவற்றில் மோதவைத்துள்ளார்.

அப்போது நிலைகுலைந்து போன கஜிதாபேகம் மயங்கி கீழே விழுந்து உயிர் இழந்துள்ளார்.

இதையடுத்து கர்ப்பிணி மனைவியை கொன்ற பயத்தில் ஆகாஷ்ராஜ் தனது இரண்டு கைகளிலும் பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனால் மனைவி உடல் அருகேயே ஆகாஷ் ராஜ் மயங்கி கிடந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஆகாஷ்ராஜ் சுயநினைவு திரும்பினால்தான், கொலைக்கான முழுகாரணம் தெரியவரும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum