Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


என் கடைசி மூச்சு வரை காதலனுடன் சேர்ந்து வாழ போராடுவேன்: தற்கொலைக்கு முயன்ற காதலி

Go down

என் கடைசி மூச்சு வரை காதலனுடன் சேர்ந்து வாழ போராடுவேன்: தற்கொலைக்கு முயன்ற காதலி Empty என் கடைசி மூச்சு வரை காதலனுடன் சேர்ந்து வாழ போராடுவேன்: தற்கொலைக்கு முயன்ற காதலி

Post by oviya Wed Jun 10, 2015 2:38 pm

சேலம் மாவட்டத்தில் தற்கொலைக்கு முயன்ற பெண் ஒருவர், கடைசி மூச்சு இருக்கும் வரை காதலனுடன் சேர்ந்து வாழ போராடுவேன் என்று தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்த சரஸ்வதி என்ற 26 வயது பெண் சேலம் அன்னதானப்பட்டி பொலிசில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அந்த புகார் மனுவில், நானும், சேலம் தாதகாப்பட்டி பெருமாள் கோவில்மேடு முதல் தெருவை சேர்ந்த சுகுமார் (26) என்பவரும் சேலம் அரசு கலைக் கல்லூரியில் ஒன்றாக படித்த போது இருவரும் காதலித்து வந்தோம்.

பின்னர் சுகுமார் ஐதராபாத்திற்கு வேலைக்கு சென்று விட்டார். இதையடுத்து நான் அங்கு சென்று அவரை திருமணம் செய்து கொண்டேன்.

ஆனால் இப்போது அவர் தன்னிடம் பேசுவது இல்லை என்றும் வேறு திருமணம் செய்ய முயற்சிக்கிறார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து பொலிசார் சுகுமாரை திருமணம் செய்ய இருந்த பெண் வீட்டிற்கு சென்று சுகுமார் குறித்து தெரிவித்துள்ளனர்.

இதை கேட்ட பெண் வீட்டாரும், பெண்ணும் திருமணத்தை நிறுத்த கூறியதை, அந்த பெண்ணுக்கும் வேறு ஒரு வாலிபருக்கும் திருமணம் நடந்துள்ளது.

இதனை அறிந்த சுகுமார் தலைமறைவாகி விட்டதால் பொலிசார் அவரை தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில் சரஸ்வதி நேற்று மாலை சுகுமார் வீட்டு முன் அமர்ந்து தர்ணா செய்தார்.

ஆனால் சுகுமாரோ அவரது உறவினர்களோ அங்கு வராததால் கோபமடைந்த சரஸ்வதி, தனது இடது கை மணிக்கட்டை அறுத்து கொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் சரஸ்வதியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து சரஸ்வதி கூறுகையில், நானும், சுகுமாரும் உயிருக்கு உயிராக காதலித்தோம்.

அவரை நம்பித்தான் நான் ஐதராபாத்திற்கு சென்றேன். அங்கு 2 மாத காலம் இருவரும் சேர்ந்து இருந்தபோது அவர் எனக்கு தாலி கட்டிவிட்டார்.

இந்த தாலி கயிறு இன்னும் என் கழுத்தில் உள்ளது. பின்னர் நான் ஊர் திரும்பி விட்டேன்.

ஆனால் அவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முயற்சிப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்து புகார் அளித்தேன்.

என்னிடம் பலர் செல்போனில் தொடர்புகொண்டு சுகுமாரை விட்டு சென்று விடுமாறும், எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறோம் என தெரிவித்து வருகின்றனர்.

எனக்கு பணம் காசு ஒன்றும் வேண்டாம், அவர் என்னுடன் இருந்தால் அது போதும் என்றும் என் கடைசி மூச்சு இருக்கும் வரை சுகுமாரை கைப்பிடிக்க போராடுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.

சரஸ்வதியின் காதலன் சுகுமார் இதுபற்றி பொலிசாரிடம் கூறுகையில், நாங்கள் இருவரும் நண்பர்களாகத் தான் பழகினோம்.

நான் சரஸ்வதியை திருமணம் செய்து கொள்ளவில்லை. அவர் பொய் கூறுகிறார் என தெரிவித்துள்ளார்.

மேலும் இருவரில் யார் கூறுவது உண்மை என்பதை கண்டறிய பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum