Top posting users this month
No user |
Similar topics
சதி என்கிறார் ஜெயலலிதா…சதியல்ல, விதியல்ல என்கிறார் கருணாநிதி: ஸ்ரீரங்க தேர்தல்
Page 1 of 1
சதி என்கிறார் ஜெயலலிதா…சதியல்ல, விதியல்ல என்கிறார் கருணாநிதி: ஸ்ரீரங்க தேர்தல்
சொத்துகுவிப்பு வழக்கின் தீர்ப்பை சதி என்று கூறியுள்ள ஜெயலலிதாவுக்கு, திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஸ்ரீரங்கம் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு ஜெயலலிதா எழுதிய கடிதத்தில், என் மீது போடப்பட்ட வழக்கின் தீர்ப்பின் காரணமாக ஏற்படுத்தப்பட்ட இடைத் தேர்தல்.
சதியும், விதியும் இணைந்து செய்த சதிராட்டத்தால் விளைந்திட்ட இடைத் தேர்தல் என்று ஜெயலலிதா கூறியிருக்கிறார்.
நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்பைத்தான் ஜெயலலிதா இவ்வாறு சதியென்று விமர்சித்திருக்கிறார் என்பதை நீதிமன்றங்கள்தான் கவனிக்க வேண்டும்.
அவருக்குக் கிடைத்த தண்டனை விதியோ, சதியோ அல்ல அவரே தன்னிச்சையாக தேடிக் கொண்டதே தவிர வேறல்ல.
ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுக சார்பில் எந்த அளவுக்கு ஆக்கபூர்வமாக ஆர்வத்தோடு பணியாற்றுகிறார்கள் என்பதை அன்றாடம் நான் அறிந்து வருகிறேன்.
ஆளும் கட்சியின் அமைச்சர்கள் அங்கே படையெடுத்து தாங்கள் தவறான வழியில் சம்பாதித்துக் குவித்திருக்கும் ஊழல் பணத்தை வாரி இறைத்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள் என்று செய்தி வந்துள்ளது.
அமைச்சர்கள் ஸ்ரீரங்கத்தில் முகாமிட்டிருக்கின்ற காரணத்தால் தலைமைச் செயலகத்தில் எந்தப் பணிகளும் நடைபெறாமல் முடங்கிக் கிடக்கின்றன என்று செய்திகள் வந்துள்ளன.
அண்ணா நினைவு நாளையொட்டி, அண்ணா நினைவிடத்திற்கு முதல்வரைத் தவிர வேறு எந்த அமைச்சர்களும் வரவில்லை. அந்த நாளில் ஆண்டுதோறும் கோவில்களில் நடைபெறும் சமபந்தி போஜனமும் இந்த ஆண்டு நடைபெறவில்லை.
இன்னும் இடையில் உள்ள இந்த 5, 6 நாட்களில் ஆளும் கட்சியினரும், அமைச்சர்களும் என்னென்ன வன்முறை சேட்டைகளில் அங்கே ஈடுபடுவார்களோ?
அமைச்சர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டிருப்பதால், அந்த அமைச்சர்களின் கீழ் பணியாற்றும் அரசு அதிகாரிகள் ஆளும் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்கள்.
ஜனநாயக முறைக்கு எதிராக இந்த ஆட்சியினர் தொடர்ந்து நடத்தி வரும் அராஜகங்களுக்கு ஓர் எச்சரிக்கை, அறிவுறுத்தல் செய்யப்பட வேண்டாமா? அதற்காகத்தான் இந்த இடைத் தேர்தல்.
இந்தத் தேர்தலிலும் அவர்களையே வெற்றி பெறச் செய்து விட்டால், தங்களை எதிர்க்க யாருமே இல்லை என்ற அகம்பாவத்தோடும், ஆணவத்தோடும் மேலும் மேலும் மக்கள் விரோத ஜனநாயக விரோதச் செயல்களில் ஆளும் கட்சியினர் ஈடுபட்டு ஆட்டம் போட நேரிடும்.
குற்றங்கள் அதிகரித்து தமிழகமே பாதுகாப்பற்ற பூமியாக மாறி வரும் இந்த லட்சணத்தில்தான் தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
புதிதாகப் பொறுப்பேற்ற முதல்வர் என்ன செய்கிறார் என்றே தெரியவில்லை பாவம், அவர் முதல்வராகப் பொறுப்பேற்று 125 நாட்கள் ஆன போதும், இன்னமும் முதல்வர் அறைக்குச் செல்லவே முடியவில்லை, ஏற்கனவே இருந்த நிதித்துறை அமைச்சர் அறையில்தான் தங்கியிருக்கிறார்.
கேவலம், இந்த ஆட்சியினரால் வெளியிடப்பட்டுள்ள காலண்டரில் கூட முறைப்படி முதல்வர் என்று அவருடைய புகைப்படத்தை வெளியிட முடியவில்லை.
அனைத்து அரசு அறிவிப்புகளும் மக்கள் முதல்வர் அம்மா பெயரில்தானே வெளிவருகின்றன. குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற அனைத்து வாகனங்களிலும், தண்டனை பெற்ற குற்றவாளியின் படங்கள்தான் பெரிதாகப் போடப்பட்டிருந்ததே தவிர, இன்றைய முதல்வரின் படம் ஒன்று கூடக் காணப்படவில்லை.
அண்ணா நினைவு நாள் அஞ்சலி செலுத்தக்கூட, ஒரு அமைச்சர்கூட உடன் வராமல், தனியாக முதல்வர் மட்டும் செல்வது புகைப்படமாக வெளிவந்துள்ளது.
முதல்வரே இல்லாத மாநிலமாகத் தான் தமிழகம் காட்சியளிக்கிறது. அதுபற்றி இதழ்கள் முதல்வர் பற்றியும், இந்த அரசினரைப் பற்றியும் விமர்சித்து எழுதிய போதிலும், ஆளும் கட்சியினர் அதனைக் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை சிறிதும் கவலையோ, நாணமோ கொள்ளவில்லை.
இவற்றுக்கெல்லாம் ஜனநாயக ரீதியாகப் பாடம் கற்பிக்க வேண்டாமா? அதற்கொரு நல்வாய்ப்பாக அமைந்திருப்பது தான் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்.
எனவே வரும் 13ம் திகதி நடைபெறும் ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் தமிழக ஆளும் கட்சியான அதிமுகவிற்குத் தக்க பாடம் கற்பிக்க, அவர்களும் திருந்தி மிச்ச நாட்களிலாவது மக்களைப் பற்றி அக்கறையோடு நடந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பினை வழங்கிட, திமுக வேட்பாளர் ஆனந்துக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றியினைத் தேடித்தர வேண்டுமென்று ஸ்ரீரங்கம் தொகுதி வாக்காளர்களை கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஸ்ரீரங்கம் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு ஜெயலலிதா எழுதிய கடிதத்தில், என் மீது போடப்பட்ட வழக்கின் தீர்ப்பின் காரணமாக ஏற்படுத்தப்பட்ட இடைத் தேர்தல்.
சதியும், விதியும் இணைந்து செய்த சதிராட்டத்தால் விளைந்திட்ட இடைத் தேர்தல் என்று ஜெயலலிதா கூறியிருக்கிறார்.
நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்பைத்தான் ஜெயலலிதா இவ்வாறு சதியென்று விமர்சித்திருக்கிறார் என்பதை நீதிமன்றங்கள்தான் கவனிக்க வேண்டும்.
அவருக்குக் கிடைத்த தண்டனை விதியோ, சதியோ அல்ல அவரே தன்னிச்சையாக தேடிக் கொண்டதே தவிர வேறல்ல.
ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுக சார்பில் எந்த அளவுக்கு ஆக்கபூர்வமாக ஆர்வத்தோடு பணியாற்றுகிறார்கள் என்பதை அன்றாடம் நான் அறிந்து வருகிறேன்.
ஆளும் கட்சியின் அமைச்சர்கள் அங்கே படையெடுத்து தாங்கள் தவறான வழியில் சம்பாதித்துக் குவித்திருக்கும் ஊழல் பணத்தை வாரி இறைத்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள் என்று செய்தி வந்துள்ளது.
அமைச்சர்கள் ஸ்ரீரங்கத்தில் முகாமிட்டிருக்கின்ற காரணத்தால் தலைமைச் செயலகத்தில் எந்தப் பணிகளும் நடைபெறாமல் முடங்கிக் கிடக்கின்றன என்று செய்திகள் வந்துள்ளன.
அண்ணா நினைவு நாளையொட்டி, அண்ணா நினைவிடத்திற்கு முதல்வரைத் தவிர வேறு எந்த அமைச்சர்களும் வரவில்லை. அந்த நாளில் ஆண்டுதோறும் கோவில்களில் நடைபெறும் சமபந்தி போஜனமும் இந்த ஆண்டு நடைபெறவில்லை.
இன்னும் இடையில் உள்ள இந்த 5, 6 நாட்களில் ஆளும் கட்சியினரும், அமைச்சர்களும் என்னென்ன வன்முறை சேட்டைகளில் அங்கே ஈடுபடுவார்களோ?
அமைச்சர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டிருப்பதால், அந்த அமைச்சர்களின் கீழ் பணியாற்றும் அரசு அதிகாரிகள் ஆளும் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்கள்.
ஜனநாயக முறைக்கு எதிராக இந்த ஆட்சியினர் தொடர்ந்து நடத்தி வரும் அராஜகங்களுக்கு ஓர் எச்சரிக்கை, அறிவுறுத்தல் செய்யப்பட வேண்டாமா? அதற்காகத்தான் இந்த இடைத் தேர்தல்.
இந்தத் தேர்தலிலும் அவர்களையே வெற்றி பெறச் செய்து விட்டால், தங்களை எதிர்க்க யாருமே இல்லை என்ற அகம்பாவத்தோடும், ஆணவத்தோடும் மேலும் மேலும் மக்கள் விரோத ஜனநாயக விரோதச் செயல்களில் ஆளும் கட்சியினர் ஈடுபட்டு ஆட்டம் போட நேரிடும்.
குற்றங்கள் அதிகரித்து தமிழகமே பாதுகாப்பற்ற பூமியாக மாறி வரும் இந்த லட்சணத்தில்தான் தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
புதிதாகப் பொறுப்பேற்ற முதல்வர் என்ன செய்கிறார் என்றே தெரியவில்லை பாவம், அவர் முதல்வராகப் பொறுப்பேற்று 125 நாட்கள் ஆன போதும், இன்னமும் முதல்வர் அறைக்குச் செல்லவே முடியவில்லை, ஏற்கனவே இருந்த நிதித்துறை அமைச்சர் அறையில்தான் தங்கியிருக்கிறார்.
கேவலம், இந்த ஆட்சியினரால் வெளியிடப்பட்டுள்ள காலண்டரில் கூட முறைப்படி முதல்வர் என்று அவருடைய புகைப்படத்தை வெளியிட முடியவில்லை.
அனைத்து அரசு அறிவிப்புகளும் மக்கள் முதல்வர் அம்மா பெயரில்தானே வெளிவருகின்றன. குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற அனைத்து வாகனங்களிலும், தண்டனை பெற்ற குற்றவாளியின் படங்கள்தான் பெரிதாகப் போடப்பட்டிருந்ததே தவிர, இன்றைய முதல்வரின் படம் ஒன்று கூடக் காணப்படவில்லை.
அண்ணா நினைவு நாள் அஞ்சலி செலுத்தக்கூட, ஒரு அமைச்சர்கூட உடன் வராமல், தனியாக முதல்வர் மட்டும் செல்வது புகைப்படமாக வெளிவந்துள்ளது.
முதல்வரே இல்லாத மாநிலமாகத் தான் தமிழகம் காட்சியளிக்கிறது. அதுபற்றி இதழ்கள் முதல்வர் பற்றியும், இந்த அரசினரைப் பற்றியும் விமர்சித்து எழுதிய போதிலும், ஆளும் கட்சியினர் அதனைக் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை சிறிதும் கவலையோ, நாணமோ கொள்ளவில்லை.
இவற்றுக்கெல்லாம் ஜனநாயக ரீதியாகப் பாடம் கற்பிக்க வேண்டாமா? அதற்கொரு நல்வாய்ப்பாக அமைந்திருப்பது தான் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்.
எனவே வரும் 13ம் திகதி நடைபெறும் ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் தமிழக ஆளும் கட்சியான அதிமுகவிற்குத் தக்க பாடம் கற்பிக்க, அவர்களும் திருந்தி மிச்ச நாட்களிலாவது மக்களைப் பற்றி அக்கறையோடு நடந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பினை வழங்கிட, திமுக வேட்பாளர் ஆனந்துக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றியினைத் தேடித்தர வேண்டுமென்று ஸ்ரீரங்கம் தொகுதி வாக்காளர்களை கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஜெயலலிதா விடுதலை: சுப்ரமணியன் சுவாமி கடும் அதிர்ச்சி! இறுதி தீர்ப்பு இதுவல்ல என்கிறார் கருணாநிதி!
» ஜெயலலிதா விடுதலைக்காக நடத்தப்படும் பூஜைகளில் கலந்து கொள்வதா? கருணாநிதி எச்சரிக்கை
» ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு செய்வது மகிழ்ச்சியான செய்தி: கருணாநிதி
» ஜெயலலிதா விடுதலைக்காக நடத்தப்படும் பூஜைகளில் கலந்து கொள்வதா? கருணாநிதி எச்சரிக்கை
» ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு செய்வது மகிழ்ச்சியான செய்தி: கருணாநிதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum