Top posting users this month
No user |
Similar topics
எதுக்கு கல்யாணத்தை நிறுத்துறீங்க? அதிகாரிகளுடன் சண்டையிட்ட மணப்பெண்
Page 1 of 1
எதுக்கு கல்யாணத்தை நிறுத்துறீங்க? அதிகாரிகளுடன் சண்டையிட்ட மணப்பெண்
சென்னையைச் சேர்ந்த 18 வயது நிரம்பாத மாணவிக்கு வத்தலகுண்டில் நடக்கவிருந்த திருமணத்தை சமூகநலத்துறை அதிகாரிகள் தடுத்தபோது ஆவேசமடைந்த அந்த மாணவி அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், வத்தலகுண்டு அருகே தும்மலப்பட்டியை சேர்ந்த இளைஞருக்கும், நேற்று காலை வத்தலகுண்டு மண்டபத்தில் திருமணம் நடக்க இருந்துள்ளது.
இந்நிலையில் இதனையறிந்த சமூக நலத்துறை அதிகாரி நாகபிரபா, பொலிசாருடன் நேற்று முன் தினம் இரவு மண்டபத்துக்குச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது, மணமகளுக்கு 18 வயது ஆகிவிட்டதாக உறவினர்கள் தெரிவித்தபோது அதை நம்ப மறுத்த அதிகாரிகள் மணமகளிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
விசாரணையின் போது, அந்த பெண்ணும் தனக்கு 18 வயது நிரம்பிவிட்டதாகத் தெரிவித்ததால், திருமண வயதை உறுதிசெய்ய படிப்புச் சான்றிதழைக் காட்டும்படி அதிகாரிகள் கேட்டுள்ளனர்.
அதற்கு மணமகள், நான் பள்ளி பக்கமே சென்றயதில்லை என்று தெரிவித்துள்ளார். வயதை நிரூபிக்காமல் திருமணம் நடத்த அனுமதிக்க முடியாது எனக் கண்டிப்புடன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒருகட்டத்தில் ஆவேசமடைந்த மணப்பெண், தான் படிக்கவேயில்லை எனக் கூறியதை மறந்துவிட்டு ஆங்கிலத்தில் கோபமாக அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், படிக்காத மணமகள் ஆங்கிலத்தில் உரையாடுவது எப்படி எனக் கேள்வி எழுப்பியதால் பெண் வீட்டார் வேறு வழியின்றி மணமகளுக்கு 17 வயது தொடங்குவதை ஒப்புக் கொண்டுள்ளனர். இதையடுத்து திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், வத்தலகுண்டு அருகே தும்மலப்பட்டியை சேர்ந்த இளைஞருக்கும், நேற்று காலை வத்தலகுண்டு மண்டபத்தில் திருமணம் நடக்க இருந்துள்ளது.
இந்நிலையில் இதனையறிந்த சமூக நலத்துறை அதிகாரி நாகபிரபா, பொலிசாருடன் நேற்று முன் தினம் இரவு மண்டபத்துக்குச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது, மணமகளுக்கு 18 வயது ஆகிவிட்டதாக உறவினர்கள் தெரிவித்தபோது அதை நம்ப மறுத்த அதிகாரிகள் மணமகளிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
விசாரணையின் போது, அந்த பெண்ணும் தனக்கு 18 வயது நிரம்பிவிட்டதாகத் தெரிவித்ததால், திருமண வயதை உறுதிசெய்ய படிப்புச் சான்றிதழைக் காட்டும்படி அதிகாரிகள் கேட்டுள்ளனர்.
அதற்கு மணமகள், நான் பள்ளி பக்கமே சென்றயதில்லை என்று தெரிவித்துள்ளார். வயதை நிரூபிக்காமல் திருமணம் நடத்த அனுமதிக்க முடியாது எனக் கண்டிப்புடன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒருகட்டத்தில் ஆவேசமடைந்த மணப்பெண், தான் படிக்கவேயில்லை எனக் கூறியதை மறந்துவிட்டு ஆங்கிலத்தில் கோபமாக அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், படிக்காத மணமகள் ஆங்கிலத்தில் உரையாடுவது எப்படி எனக் கேள்வி எழுப்பியதால் பெண் வீட்டார் வேறு வழியின்றி மணமகளுக்கு 17 வயது தொடங்குவதை ஒப்புக் கொண்டுள்ளனர். இதையடுத்து திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» லட்டுக்காக ஆண் காவலருடன் கட்டி புரண்டு சண்டையிட்ட பெண் காவலரால் பரபரப்பு
» அடிக்கடி சண்டையிட்ட மாமியார்: கோபத்தில் மூக்கை அறுத்த மருமகள்
» மாப்பிள்ளை கொலை செய்யப்பட்டதால் விரக்தியில் மணப்பெண் தற்கொலை
» அடிக்கடி சண்டையிட்ட மாமியார்: கோபத்தில் மூக்கை அறுத்த மருமகள்
» மாப்பிள்ளை கொலை செய்யப்பட்டதால் விரக்தியில் மணப்பெண் தற்கொலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum