Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


18 ஆண்டுகால வருமானவரி வழக்கு: ஜெயலலிதாவுக்கு விடுதலை

Go down

18 ஆண்டுகால வருமானவரி வழக்கு: ஜெயலலிதாவுக்கு விடுதலை Empty 18 ஆண்டுகால வருமானவரி வழக்கு: ஜெயலலிதாவுக்கு விடுதலை

Post by oviya Fri Jan 09, 2015 1:27 pm

சென்னையில் நடைபெற்று வந்த வருமான வரி வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டுள்ளார்.
வருமானவரி கணக்கு தாக்கல் செய்யாததால், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா நடராஜன் ஆகியோர் மீது வருமானவரித்துறையினர் சென்னை எழும்பூர் 1-வது பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் 4 வழக்குகளை தொடர்ந்தனர்.

இந்த வழக்குகள் கடந்த 1996-ம் ஆண்டு தொடரப்பட்டது. கடந்த 18 ஆண்டு காலமாக நடந்து வரும் இந்த வழக்கை விரைவாக முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கில் சமரச தீர்வு மனு ஒன்றை வருமானவரித்துறையிடம், ஜெயலலிதாவும், சசிகலா நடராஜனும் தாக்கல் செய்தனர்.

ஜெயலலிதா, சசிகலா நடராஜன் ஆகியோரின் சமரச தீர்வு மனுக்கள் மீது வருமானவரித்துறையின் சமரசதீர்வு கமிட்டி விசாரணை நடத்தியது.

விசாரணையில் சமரச மனுக்களை, வருமானவரித்துறையின் கமிட்டி ஏற்றுக்கொண்டது. மேலும் வழக்கை சமரசமாக தீர்த்துக்கொள்ள 4 வழக்குகளிலும் சேர்த்து ரூ.1.99 கோடி செலுத்தவும், ஜெயலலிதா, சசிகலா நடராஜன் ஆகியோருக்கு நோட்டீசு கொடுக்கப்பட்டது.

ஜெயலலிதா, சசிகலா நடராஜன் சார்பில் இந்த தொகை செலுத்தப்பட்டுவிட்டது.

இதனால் ஜெயலலிதா, சசிகலா நடராஜன் ஆகியோர் மீதான வழக்கை வருமான வரித்துறை வாபஸ் பெற்றுக்கொள்கிறது என்று தெரிவித்து இருந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவுடன், வருமானவரித்துறை இயக்குனர் ஜெனரல் பிறப்பித்த இறுதி உத்தரவு நகலையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

மனுவை பெற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட்டு தட்சிணாமூர்த்தி தனது தீர்ப்பை நேற்று மாலை 3 மணிக்கு வழங்கினார்.

வருமானவரித்துறையினர் தொடர்ந்துள்ள வழக்கை வாபஸ் பெற்றுக்கொண்டதால், ஜெயலலிதா, சசிகலா நடராஜன் ஆகியோர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள் என்று மாஜிஸ்திரேட்டு தட்சிணாமூர்த்தி தனது தீர்ப்பில் தெரிவித்தார்.

எனவே ஜெயலலிதா, சசிகலா நடராஜன் ஆகியோர் வருமானவரி வழக்கில் இருந்து விடுதலை பெற்றனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum