Top posting users this month
No user |
Similar topics
திடீர் உடல் நலக்குறைவு: உயிரை பணயம் வைத்து ரயிலை இயக்கிய ஓட்டுனர்!
Page 1 of 1
திடீர் உடல் நலக்குறைவு: உயிரை பணயம் வைத்து ரயிலை இயக்கிய ஓட்டுனர்!
கேரளாவில் இருந்து தன்பாத் வரை செல்லும் ரயிலை இயக்கிய ஓட்டுனருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்ட போதும், அவர் தனது உயிரை பணயம் வைத்து ரயிலை இயக்கியுள்ளார்.
கேரள மாநிலம் ஆலப்புழையில் இருந்து நேற்று அதிகாலை 6 மணிக்கு புறப்பட்ட தன்பாத் ரயிலை, ஈரோட்டை சேர்ந்த ஸ்ரீதர் (56) ஓட்டி வந்துள்ளார்.
நேற்று மாலை 6.30 மணிக்கு காட்பாடி ரயில் நிலையத்துக்கு வந்தடைந்த போது சிக்னலில் ரயில் நின்றது.
அப்போது ஸ்ரீதர் தனது கேபினிலேயே மயங்கி விழுந்துள்ளார். அப்போது உடனிருந்த உதவியாளர் அதை பார்த்து அதிர்ச்சி அடைந்தபடி நின்றார்.
இதனால் சிக்னல் கிடைத்த பின்னரும் ரயில் புறப்படாமல் நின்றதால், சரக்கு ரயில் ஓட்டுனர் சந்தேகமடைந்ததால், அவர் சரக்கு ரெயிலில் இருந்து இறங்கி தன்பாத் ரயில் என்ஜின் பக்கம் சென்று பார்த்துள்ளார்.
அப்போது ஓட்டுனர் ஸ்ரீதர் மயக்கமடைந்தது தெரியவந்ததால், ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து ஸ்ரீதருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அவசர ஊர்தி மூலம் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
பின்னர் சரக்கு ரயில் ஓட்டுனர் மூலம் தன்பாத் ரயிலை சென்னை வரை இயக்க அனுமதி பெறப்பட்டது.
லத்தேரியில் இருந்து காட்பாடி நோக்கி வரும்போதே ஸ்ரீதருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
எனினும் அவர் தனது உயிரை பணயம் வைத்து ரயிலை காட்பாடி ரயில் நிலைய அவுட்டர் சிக்னல் வரை இயக்கி வந்துள்ளது தெரியவந்துள்ளது.
கேரள மாநிலம் ஆலப்புழையில் இருந்து நேற்று அதிகாலை 6 மணிக்கு புறப்பட்ட தன்பாத் ரயிலை, ஈரோட்டை சேர்ந்த ஸ்ரீதர் (56) ஓட்டி வந்துள்ளார்.
நேற்று மாலை 6.30 மணிக்கு காட்பாடி ரயில் நிலையத்துக்கு வந்தடைந்த போது சிக்னலில் ரயில் நின்றது.
அப்போது ஸ்ரீதர் தனது கேபினிலேயே மயங்கி விழுந்துள்ளார். அப்போது உடனிருந்த உதவியாளர் அதை பார்த்து அதிர்ச்சி அடைந்தபடி நின்றார்.
இதனால் சிக்னல் கிடைத்த பின்னரும் ரயில் புறப்படாமல் நின்றதால், சரக்கு ரயில் ஓட்டுனர் சந்தேகமடைந்ததால், அவர் சரக்கு ரெயிலில் இருந்து இறங்கி தன்பாத் ரயில் என்ஜின் பக்கம் சென்று பார்த்துள்ளார்.
அப்போது ஓட்டுனர் ஸ்ரீதர் மயக்கமடைந்தது தெரியவந்ததால், ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து ஸ்ரீதருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அவசர ஊர்தி மூலம் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
பின்னர் சரக்கு ரயில் ஓட்டுனர் மூலம் தன்பாத் ரயிலை சென்னை வரை இயக்க அனுமதி பெறப்பட்டது.
லத்தேரியில் இருந்து காட்பாடி நோக்கி வரும்போதே ஸ்ரீதருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
எனினும் அவர் தனது உயிரை பணயம் வைத்து ரயிலை காட்பாடி ரயில் நிலைய அவுட்டர் சிக்னல் வரை இயக்கி வந்துள்ளது தெரியவந்துள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஓடும் ரயிலை ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து நிறுத்திய கொள்ளையர்கள்!
» சென்னையில் தொடங்கப்பட்ட முதல் மெட்ரோ ரயிலை ஓட்டி சாதனை படைத்த பெண்மணி
» டெல்லி பலாத்காரம்: ”உபேர் டாக்ஸி” ஓட்டுனர் குற்றவாளி என நிரூபணம்
» சென்னையில் தொடங்கப்பட்ட முதல் மெட்ரோ ரயிலை ஓட்டி சாதனை படைத்த பெண்மணி
» டெல்லி பலாத்காரம்: ”உபேர் டாக்ஸி” ஓட்டுனர் குற்றவாளி என நிரூபணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum