Top posting users this month
No user |
Similar topics
மும்பையில் கள்ளச் சாராய பலி 33 ஆக உயர்வு!
Page 1 of 1
மும்பையில் கள்ளச் சாராய பலி 33 ஆக உயர்வு!
மும்பையில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரண்டாம் இணைப்பு:
மும்பை அருகே மலாட் என்ற குடிசைப் பகுதியில் விஷச் சாராயம் அருந்தி உயரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 9 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முதலாம் இணைப்பு:
மும்பை அருகே, மால்வானி பகுதியில் உள்ள ரத்தோடி கிராமத்தில் நேற்று முன்தினம் மது அருந்தியவர்களில் பலருக்கு நேற்று காலை முதல் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
மலாட் மற்றும் கண்டிவாலியில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்ட அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி நேற்று ஒரே நாளில் மட்டும் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இன்று மேலும் 12 பேர் சிகிச்சை பலன் அளிக்காமல் பலியானதாகவும், இன்னும் 10 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த மும்பை காவல் ஆணையர் ராகேஷ் மரியா, மாநில குற்றப்பிரிவு பொலிசாருக்கு இவ்வழக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து 2 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் உத்தரவிட்டுள்ளார்.
கள்ளச்சாராயம் விற்றது தொடர்பாக இதுவரை ராஜூ ஹன்மந்த பஸ்கார் (50), டொனால்ட் ராபர்ட் படேல் (47) மற்றும் கவுதம் ஹரே (30) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் மீது கிரிமினல் தண்டனைச் சட்டப் பிரிவுகள் 304, 328, 34 ஆகியனவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், கள்ளச் சாராயம் எங்கு காய்ச்சப்பட்டது? அதை எத்தனை பேர் குடித்தனர்? என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இரண்டாம் இணைப்பு:
மும்பை அருகே மலாட் என்ற குடிசைப் பகுதியில் விஷச் சாராயம் அருந்தி உயரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 9 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முதலாம் இணைப்பு:
மும்பை அருகே, மால்வானி பகுதியில் உள்ள ரத்தோடி கிராமத்தில் நேற்று முன்தினம் மது அருந்தியவர்களில் பலருக்கு நேற்று காலை முதல் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
மலாட் மற்றும் கண்டிவாலியில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்ட அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி நேற்று ஒரே நாளில் மட்டும் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இன்று மேலும் 12 பேர் சிகிச்சை பலன் அளிக்காமல் பலியானதாகவும், இன்னும் 10 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த மும்பை காவல் ஆணையர் ராகேஷ் மரியா, மாநில குற்றப்பிரிவு பொலிசாருக்கு இவ்வழக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து 2 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் உத்தரவிட்டுள்ளார்.
கள்ளச்சாராயம் விற்றது தொடர்பாக இதுவரை ராஜூ ஹன்மந்த பஸ்கார் (50), டொனால்ட் ராபர்ட் படேல் (47) மற்றும் கவுதம் ஹரே (30) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் மீது கிரிமினல் தண்டனைச் சட்டப் பிரிவுகள் 304, 328, 34 ஆகியனவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், கள்ளச் சாராயம் எங்கு காய்ச்சப்பட்டது? அதை எத்தனை பேர் குடித்தனர்? என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இந்தியர்களுக்கு அனுமதி இல்லை: மும்பையில் செயல்பட்டு வரும் போர்ச்சுகல் கிளப்
» மும்பையில் பிரபல மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து: 50 கடைகள் எரிந்து நாசம்
» மெக்கா கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 101 ஆக உயர்வு
» மும்பையில் பிரபல மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து: 50 கடைகள் எரிந்து நாசம்
» மெக்கா கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 101 ஆக உயர்வு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum