Top posting users this month
No user |
இந்தியர்களுக்கு அனுமதி இல்லை: மும்பையில் செயல்பட்டு வரும் போர்ச்சுகல் கிளப்
Page 1 of 1
இந்தியர்களுக்கு அனுமதி இல்லை: மும்பையில் செயல்பட்டு வரும் போர்ச்சுகல் கிளப்
மும்பையில் செயல்பட்டு வரும் போர்ச்சுகல் கிளப்பில் இந்தியர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
மும்பை ஜுகு பகுதியில் 'சீ பிரின்சஸ்' என்ற ஹொட்டல் செயல்பட்டு வருகிறது.
அங்குள்ள இரவு விடுதிக்கு நேற்று அதிகாலை 2.30 மணியளவில் பாந்திரா பகுதியை சேர்ந்த ஷானு மாலிக் தனது பிறந்த நாளை கொண்டாட அவரது காதலி ஜெனிஃபர் சவானுடன் சென்றுள்ளார்.
அப்போது கிளப் வரவேற்பாளர் அவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்ததோடு, கிளப்பின் மேலாளரை வரவழைத்துள்ளார்.
போர்ச்சுகலை சேர்ந்த நடஷா டி சவுசா என்ற கிளப் மேலாளர், ஜெனிபர் சவானிடம், இந்தியர்களை உள்ளே அனுமதிக்க மாட்டோம். இந்த கிளப்புக்கு வருவதற்கு இந்தியர்களுக்கு தகுதி இல்லை என்று தடுத்துள்ளார்.
இதனால் அங்கு பெரும் தகராறு ஏற்பட்ட தை அடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த ஜுகு பொலிசார் சென்றுள்ளனர்.
பொலிசாரிடம் ஜெனிபர் அளித்த புகாரின் பேரில், ஹொட்டல் மேலாளர் நடாஷா டி சவுசா மீது எப்.ஐ.ஆர். போடப்பட்டது.
ஜெனிபர் கூறுகையில், அந்த மேலாளர் இந்தியர்களை உள்ளே அனுமதிக்க மாட்டோம் என்ற போது நாம் இந்தியாவில் இருக்கிறோமா அல்லது வேறு நாட்டில் இருக்கிறோமா? என்ற கேள்வி எனக்குள் எழுந்தது என்று கூறியுள்ளார்.
கிளப் நிர்வாகம் அளித்துள்ள விளக்கத்தில், அந்த தம்பதிகள் மிகவும் தாமதமாக வந்ததால்தான் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை.
மேலும், எங்கள் கிளப்பிற்கு ஏராளமான இந்தியர்கள் வருகின்றனர், அவர்களை நாங்கள் தடுப்பதில்லை என தெரிவித்துள்ளது.
மும்பை ஜுகு பகுதியில் 'சீ பிரின்சஸ்' என்ற ஹொட்டல் செயல்பட்டு வருகிறது.
அங்குள்ள இரவு விடுதிக்கு நேற்று அதிகாலை 2.30 மணியளவில் பாந்திரா பகுதியை சேர்ந்த ஷானு மாலிக் தனது பிறந்த நாளை கொண்டாட அவரது காதலி ஜெனிஃபர் சவானுடன் சென்றுள்ளார்.
அப்போது கிளப் வரவேற்பாளர் அவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்ததோடு, கிளப்பின் மேலாளரை வரவழைத்துள்ளார்.
போர்ச்சுகலை சேர்ந்த நடஷா டி சவுசா என்ற கிளப் மேலாளர், ஜெனிபர் சவானிடம், இந்தியர்களை உள்ளே அனுமதிக்க மாட்டோம். இந்த கிளப்புக்கு வருவதற்கு இந்தியர்களுக்கு தகுதி இல்லை என்று தடுத்துள்ளார்.
இதனால் அங்கு பெரும் தகராறு ஏற்பட்ட தை அடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த ஜுகு பொலிசார் சென்றுள்ளனர்.
பொலிசாரிடம் ஜெனிபர் அளித்த புகாரின் பேரில், ஹொட்டல் மேலாளர் நடாஷா டி சவுசா மீது எப்.ஐ.ஆர். போடப்பட்டது.
ஜெனிபர் கூறுகையில், அந்த மேலாளர் இந்தியர்களை உள்ளே அனுமதிக்க மாட்டோம் என்ற போது நாம் இந்தியாவில் இருக்கிறோமா அல்லது வேறு நாட்டில் இருக்கிறோமா? என்ற கேள்வி எனக்குள் எழுந்தது என்று கூறியுள்ளார்.
கிளப் நிர்வாகம் அளித்துள்ள விளக்கத்தில், அந்த தம்பதிகள் மிகவும் தாமதமாக வந்ததால்தான் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை.
மேலும், எங்கள் கிளப்பிற்கு ஏராளமான இந்தியர்கள் வருகின்றனர், அவர்களை நாங்கள் தடுப்பதில்லை என தெரிவித்துள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum