Top posting users this month
No user |
Similar topics
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் விடுதலை எதிரொலி: லோக்சபா, ராஜ்யசபாவில் கடும் அமளி
Page 1 of 1
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் விடுதலை எதிரொலி: லோக்சபா, ராஜ்யசபாவில் கடும் அமளி
ஜம்மு காஷ்மீர் பிரிவினைவாத இயக்க தலைவர் மஸ்ரத் ஆலம் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் லோக்சபாவில் கோஷங்கள் எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டுள்ளன.
ஜம்மு காஷ்மீர் மாநில அரசு, பிரிவினைவாத இயக்கத் தலைவர் மஸ்ரத் ஆலமை விடுதலை செய்தது.
அரசியல் உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்திற்கு காஷ்மீர் அரசில் இடம்பெற்றுள்ள பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் காஷ்மீர் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், உள்துறை அமைச்சகமும் மாநில அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.
இந்நிலையில் இன்று லோக்சபாவில், காங்கிரஸ் எம்.பி.க்கள் பலர் மஸ்ரத் ஆலம் விடுதலை குறித்து மத்திய அரசு மௌனம் காப்பது ஏன் என்று கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.
இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.
நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு பேசுகையில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிப்பார் என்றும் ஆலம் விடுதலை குறித்து காஷ்மீர் அரசு மத்திய அரசுடன் எந்த ஒரு ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், ராஜ்யசபாவிலும் இந்த பிரச்சனை எழுந்தபோது பேசிய மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, தேசப் பாதுகாப்பில் மத்திய அரசு ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது என்று தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநில அரசு, பிரிவினைவாத இயக்கத் தலைவர் மஸ்ரத் ஆலமை விடுதலை செய்தது.
அரசியல் உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்திற்கு காஷ்மீர் அரசில் இடம்பெற்றுள்ள பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் காஷ்மீர் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், உள்துறை அமைச்சகமும் மாநில அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.
இந்நிலையில் இன்று லோக்சபாவில், காங்கிரஸ் எம்.பி.க்கள் பலர் மஸ்ரத் ஆலம் விடுதலை குறித்து மத்திய அரசு மௌனம் காப்பது ஏன் என்று கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.
இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.
நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு பேசுகையில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிப்பார் என்றும் ஆலம் விடுதலை குறித்து காஷ்மீர் அரசு மத்திய அரசுடன் எந்த ஒரு ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், ராஜ்யசபாவிலும் இந்த பிரச்சனை எழுந்தபோது பேசிய மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, தேசப் பாதுகாப்பில் மத்திய அரசு ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது என்று தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தொடர் கனமழையின் எதிரொலி: காய்கறிகளின் விலை கடும் உயர்வு
» எதிர் கட்சிகளின் கடும் ரகளையால் போர்க்களமான சட்டசபை: ஆளுநர் கடும் கண்டனம்
» பிரான்ஸ் தாக்குதலின் எதிரொலி அரசியல் தஞ்சம் கோருவோரை தாக்குமா...?
» எதிர் கட்சிகளின் கடும் ரகளையால் போர்க்களமான சட்டசபை: ஆளுநர் கடும் கண்டனம்
» பிரான்ஸ் தாக்குதலின் எதிரொலி அரசியல் தஞ்சம் கோருவோரை தாக்குமா...?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum