Top posting users this month
No user |
தேசிய ஔடத கொள்கை சட்டமூலத்தின் 3வது வாசிப்பு மீதான விவாதம் நாளை
Page 1 of 1
தேசிய ஔடத கொள்கை சட்டமூலத்தின் 3வது வாசிப்பு மீதான விவாதம் நாளை
தேசிய ஔடதங்களை ஒழுங்குபடுத்தும் அதிகார சபை சட்டமூலம் தொடர்பான மூன்றாவது வாசிப்பு மீதான விவாதம் நாளை பாராளுமன்றத்தில் இடம்பெறும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இச்சட்டமூலத்தை மறைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு மருந்து நிறுவனங்களினால் கடந்த காலங்களில் இலஞ்சம் வழங்கப்பட்டதாக ஜனாதிபதி நேற்று தெரிவித்தார்.
ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் இவ்விவாதத்தில் கலந்து கொண்டதுடன் 2ம் வாசிப்பு அவையில் நிறைவேற்றப்பட்டது.
எனினும் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க மற்றும் சுயேட்சை உறுப்பினர் அஜித் குமார ஆகியோர் சட்டமூலம் குறித்து ஆராய்வதற்கு கால அவகாசம் வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்தே மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவினால் நாளை வரை பிற்போடப்பட்டுள்ளது.
இதேவேளை தேசிய வைத்தியசாலை மற்றும் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை ஆகியவற்றில் மெராபெனும் நோய் எதிர்ப்புசக்தி ஊசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாத காலமாக குறித்த மருந்து வைத்தியசாலையின் கையிருப்பில் இல்லை எனவும், நோயாளர்கள் அவற்றை வெளியிலிருந்து கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் குறித்த மருந்து வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்துள்ள போதிலும், இதுவரை வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கப்படவில்லை என வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இச்சட்டமூலத்தை மறைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு மருந்து நிறுவனங்களினால் கடந்த காலங்களில் இலஞ்சம் வழங்கப்பட்டதாக ஜனாதிபதி நேற்று தெரிவித்தார்.
ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் இவ்விவாதத்தில் கலந்து கொண்டதுடன் 2ம் வாசிப்பு அவையில் நிறைவேற்றப்பட்டது.
எனினும் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க மற்றும் சுயேட்சை உறுப்பினர் அஜித் குமார ஆகியோர் சட்டமூலம் குறித்து ஆராய்வதற்கு கால அவகாசம் வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்தே மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவினால் நாளை வரை பிற்போடப்பட்டுள்ளது.
இதேவேளை தேசிய வைத்தியசாலை மற்றும் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை ஆகியவற்றில் மெராபெனும் நோய் எதிர்ப்புசக்தி ஊசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாத காலமாக குறித்த மருந்து வைத்தியசாலையின் கையிருப்பில் இல்லை எனவும், நோயாளர்கள் அவற்றை வெளியிலிருந்து கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் குறித்த மருந்து வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்துள்ள போதிலும், இதுவரை வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கப்படவில்லை என வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum