Top posting users this month
No user |
Similar topics
அதிமுக பிரமுகரை கத்தியால் குத்திய திமுக மகளிர் அணியினர்: ஸ்ரீரங்கத்தில் பரபரப்பு
Page 1 of 1
அதிமுக பிரமுகரை கத்தியால் குத்திய திமுக மகளிர் அணியினர்: ஸ்ரீரங்கத்தில் பரபரப்பு
ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுகவினரை, திமுக மகளிர் அணி நிர்வாகிகள் கத்தியால் குத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் நேற்று மாலை இறுதிக்கட்டத்தை நெருங்கியபோது, மேலூர் சாலையில் அதிமுகவினர் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் இருந்தனர்.
அப்போது மூலத்தோப்பு பகுதியில் திமுக மகளிர் அணியினர் வீடு, வீடாக வேட்டி- சேலை வழங்குவதாக கேள்விப்பட்ட அவர்கள், ஒன்றுதிரண்டு சென்று வேட்டி- சேலை வழங்கிய திமுகவினரை பிடிக்க முயன்றுள்ளனர்.
அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில், அதிமுகவை சேர்ந்த திருவாரூர் மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் கண்ணதாசன், அஞ்சம்மாள், மணிகண்டன் ஆகியோரை திமுகவை சேர்ந்த 2 பெண்கள் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது, இதில் 3 பேரும் காயமடைந்தனர்.
தகவல் அறிந்து விரைந்து சென்ற பொலிசார் அதிமுகவினரை கத்தியால் குத்திய கிருஷ்ணகிரி மாவட்ட திமுக மகளிர் அணி தலைவி அமுதவள்ளி, தொண்டர் அணி அமைப்பாளர் அமுதா ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.
மேலும் திமுகவினர் போட்டுவிட்டுச் சென்ற சேலைகளை அதிமுகவினர் கைப்பற்றி காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் நேற்று மாலை இறுதிக்கட்டத்தை நெருங்கியபோது, மேலூர் சாலையில் அதிமுகவினர் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் இருந்தனர்.
அப்போது மூலத்தோப்பு பகுதியில் திமுக மகளிர் அணியினர் வீடு, வீடாக வேட்டி- சேலை வழங்குவதாக கேள்விப்பட்ட அவர்கள், ஒன்றுதிரண்டு சென்று வேட்டி- சேலை வழங்கிய திமுகவினரை பிடிக்க முயன்றுள்ளனர்.
அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில், அதிமுகவை சேர்ந்த திருவாரூர் மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் கண்ணதாசன், அஞ்சம்மாள், மணிகண்டன் ஆகியோரை திமுகவை சேர்ந்த 2 பெண்கள் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது, இதில் 3 பேரும் காயமடைந்தனர்.
தகவல் அறிந்து விரைந்து சென்ற பொலிசார் அதிமுகவினரை கத்தியால் குத்திய கிருஷ்ணகிரி மாவட்ட திமுக மகளிர் அணி தலைவி அமுதவள்ளி, தொண்டர் அணி அமைப்பாளர் அமுதா ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.
மேலும் திமுகவினர் போட்டுவிட்டுச் சென்ற சேலைகளை அதிமுகவினர் கைப்பற்றி காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வேண்டாமென்ற மனைவி: காவல் நிலையத்திலேயே கத்தியால் குத்திய காவலர்
» காதலி கண் முன் தன்னைத்தானே கத்தியால் குத்திக்கொண்ட வாலிபரால் பரபரப்பு
» ஜெயலலிதாவின் உடல்நலம் பற்றி பேசினால் நாக்கை வெட்டுவேன்: அதிமுக எம்.பி அதிரடி
» காதலி கண் முன் தன்னைத்தானே கத்தியால் குத்திக்கொண்ட வாலிபரால் பரபரப்பு
» ஜெயலலிதாவின் உடல்நலம் பற்றி பேசினால் நாக்கை வெட்டுவேன்: அதிமுக எம்.பி அதிரடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum