Top posting users this month
No user |
Similar topics
உதவித்தொகை கோரல்: முதியவர்களை பிடித்து கீழே தள்ளிய பொலிஸ்
Page 1 of 1
உதவித்தொகை கோரல்: முதியவர்களை பிடித்து கீழே தள்ளிய பொலிஸ்
மதுரை மாவட்டத்தில் உதவித்தொகை கேட்டு மனு அளிக்க சென்ற மூதாட்டிகளை பிடித்து பொலிசார் தள்ளியதால் 10 பேர் காயமடைந்துள்ளனர்.
முதியோர், விதவை, கணவரால் கைவிடப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளி ஆகியோருக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மாதாந்திர உதவித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் பேசிய அகில இந்திய மாதர் சங்க துணைத்தலைவர் வாசுகி, முதியோருக்கு வழங்கப்பட்ட ஆயிரம் ரூபாய் உதவித்தொகையை தமிழக அரசு திடீரென நிறுத்தியது.
இதனால் தமிழகத்தில் மட்டும் 20 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்படைந்துள்ளனர் என்று கூறியுள்ளார்.
ஆர்ப்பாட்டம் முடிந்தவுடன் வாசுகி தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க முதியோர் உள்பட அனைவரும் சென்ற போது, பாதுகாப்பு பணியில் இருந்த பொலிசார் அலுவலக நுழைவாயில் கேட்டை மூடினர்.
பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து கேட்டை திறந்து உள்ளே செல்ல முயன்ற போது பொலிசாருக்கும், பெண்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதில் பெண் பொலிசார் தள்ளியதில் கீழே விழுந்து 10க்கும் மேற்பட்ட மூதாட்டிகள் காயமடைந்தனர்.
இதையடுத்து பொலிசாருக்கு எதிராக பெண்கள் கோஷம் போட்டனர். தகவலறிந்து பொலிஸ் உதவி கமிஷனர்கள் காந்திமதிநாதன், சக்திவேல் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
மூதாட்டிகளை கீழே தள்ளி காயப்படுத்தியதால் பொலிசார் மன்னிப்பு கேட்கவேண்டும் என்ற கோரிக்கை வைத்ததையடுத்து பொலிசார் மன்னிப்பு கேட்டனர்.
பின்பு அனைவரையும் அலுவலகத்திற்குள் அழைத்து சென்ற பின்னர், சமூக பாதுகாப்புத்துறை தாசில்தார் முதியோர்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டனர்.
முதியோர், விதவை, கணவரால் கைவிடப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளி ஆகியோருக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மாதாந்திர உதவித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் பேசிய அகில இந்திய மாதர் சங்க துணைத்தலைவர் வாசுகி, முதியோருக்கு வழங்கப்பட்ட ஆயிரம் ரூபாய் உதவித்தொகையை தமிழக அரசு திடீரென நிறுத்தியது.
இதனால் தமிழகத்தில் மட்டும் 20 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்படைந்துள்ளனர் என்று கூறியுள்ளார்.
ஆர்ப்பாட்டம் முடிந்தவுடன் வாசுகி தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க முதியோர் உள்பட அனைவரும் சென்ற போது, பாதுகாப்பு பணியில் இருந்த பொலிசார் அலுவலக நுழைவாயில் கேட்டை மூடினர்.
பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து கேட்டை திறந்து உள்ளே செல்ல முயன்ற போது பொலிசாருக்கும், பெண்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதில் பெண் பொலிசார் தள்ளியதில் கீழே விழுந்து 10க்கும் மேற்பட்ட மூதாட்டிகள் காயமடைந்தனர்.
இதையடுத்து பொலிசாருக்கு எதிராக பெண்கள் கோஷம் போட்டனர். தகவலறிந்து பொலிஸ் உதவி கமிஷனர்கள் காந்திமதிநாதன், சக்திவேல் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
மூதாட்டிகளை கீழே தள்ளி காயப்படுத்தியதால் பொலிசார் மன்னிப்பு கேட்கவேண்டும் என்ற கோரிக்கை வைத்ததையடுத்து பொலிசார் மன்னிப்பு கேட்டனர்.
பின்பு அனைவரையும் அலுவலகத்திற்குள் அழைத்து சென்ற பின்னர், சமூக பாதுகாப்புத்துறை தாசில்தார் முதியோர்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» காதலித்துவிட்டாயே: நடுரோட்டில் மகளின் தலைமுடியை பிடித்து உதைத்த பொலிஸ்
» முதியவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இந்திய வம்சாவளிப் பெண்: தண்டனை அதிகரிப்பு
» விளக்கின் கீழே விதை
» முதியவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இந்திய வம்சாவளிப் பெண்: தண்டனை அதிகரிப்பு
» விளக்கின் கீழே விதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum