Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஜெயலலிதா சிறையில் இருக்கும் போது எப்படி சோதனை நடத்தலாம்: நீதிபதி குமாரசாமி

Go down

ஜெயலலிதா சிறையில் இருக்கும் போது எப்படி சோதனை நடத்தலாம்: நீதிபதி குமாரசாமி Empty ஜெயலலிதா சிறையில் இருக்கும் போது எப்படி சோதனை நடத்தலாம்: நீதிபதி குமாரசாமி

Post by oviya Wed Jan 21, 2015 1:57 pm

ஜெயலலிதா சிறையில் இருந்தபோது அவரது வீட்டில் எவ்வாறு சோதனை செய்யலாம் என்று அரசு வழக்கறிஞர் பவானி சிங்கிடம் உயர்நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதி குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை 10ஆம் நாளாக நடைபெற்றது.

அதில், ஜெயலலிதா தரப்பில் ஆஜராகி வாதிட்ட வழக்கறிஞர் நாகேஸ்வரராவ், ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது, அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்தனர்.

குற்றம்சாட்டப்பட்ட ஒருவர், வீட்டில் இல்லாத போது அவரின் வீட்டில் எப்படி சோதனை நடத்த முடியும்? சம்பந்தப்பட்டவர் வீட்டில் இருக்கும் போது தான் சோதனை நடத்த வேண்டும் என்று கூறினார்.

இதனை குறித்துக் கொண்ட நீதிபதி குமாரசாமி, சம்பந்தப்பட்ட நபர் வீட்டில் இல்லாத போது, எவ்வாறு சோதனை நடத்தப்பட்டது? குற்றம் சாட்டப்பட்டவரை வைத்துக் கொண்டுதான் வீட்டில் சோதனை நடத்தப்பட வேண்டும் என்று பல்வேறு தீர்ப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளதே என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங், லஞ்ச ஒழிப்புத் துறையினரின் சோதனை குறித்து ஜெயலலிதாவுக்கு தெரிவிக்கப்பட்டது.

ஜெயலலிதாவின் ஒப்புதலைப் பெற்ற பிறகே, அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. சோதனை நடத்திய போது, ஜெயலலிதா தரப்பில் பாஸ்கர் என்பவர் வீட்டில் இருந்தார் என்று விளக்கம் அளித்தார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum