Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சிங்கம் என்று மார்தட்டிக் கொள்ள வேண்டாம்: சீறிப் பாயும் தமிழிசை

Go down

சிங்கம் என்று மார்தட்டிக் கொள்ள வேண்டாம்: சீறிப் பாயும் தமிழிசை Empty சிங்கம் என்று மார்தட்டிக் கொள்ள வேண்டாம்: சீறிப் பாயும் தமிழிசை

Post by oviya Mon Jan 05, 2015 2:05 pm

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜனும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குஷ்புவும் வார்த்தைகளால் மோதிக் கொள்ள ஆரம்பித்துள்ளனர்.
பூந்தமல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை பற்றி குஷ்பு கடும் விமர்சனம் செய்தார்.

இது பற்றி தமிழிசை கூறியதாவது, இந்தியா முழுவதும் காங்கிரசை விட பலம் பொருந்திய கட்சியாக பா.ஜனதா மாறி வருகிறது. தமிழகத்திலும் தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் உறுப்பினர்களாக சேர்ந்து வருகிறார்கள்.

இத்தனை ஆண்டு கால காங்கிரசின் பிடியில் சிக்கி சீரழிந்த நாட்டை மீட்டு உலக அரங்கில் தலை நிமிர வைத்தவர் மோடி.

தனிப்பட்ட தமிழிசையை பற்றி பேசினால் கோபப்படமாட்டேன். உலகமே வியக்கும் ஒரு மாபெரும் தலைவரை பற்றி மாபெரும் கட்சியை பற்றி டெல்லியிலே உட்கார்ந்து கொண்டு தமிழகத்தில் எங்கே இருக்கிறது பா.ஜனதா? என்று கேட்டார்.

அதனால் தான் கோப்பட்டேன். அவர் போய் சேர்ந்து இருக்கும் காங்கிரசுக்கு தமிழகத்தில் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. ஆனால் எங்கள் கட்சி இரண்டு இடங்களை பெற்றது.

உள்ளாட்சி தேர்தலில் 22 சதவீத வாக்குகளை பெற்றது என்பதை தான் சொன்னேன். ஆனால் குஷ்புவை யாருக்கு தெரியும்? என்று நான் சொல்லவில்லை.

அவர் ஒரு திரை நட்சத்திரம் என்பதும், தி.மு.க.வில் பிரசார பீரங்கியாக இருந்தவர் என்பதும் எல்லோருக்கும் தெரிந்தது தானே, எனக்கு மட்டும் தெரியாதா?

நான் பேசாததை இழுத்து போட்டு பேசி இருக்கிறார். அவ்வாறு அவர் பேசியதற்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

அந்த அளவுக்கு அவரை ஒரு தலைவராக நான் எடுத்துக்கொள்ளவும் இல்லை. இருந்தாலும் பலர் கேட்பதால் பதில் சொல்ல வேண்டியதுள்ளது.

காமராஜரின் புகழை ஓங்கி சொல்ல வேண்டிய காங்கிரஸ் குஷ்புவை நம்பி கட்சி நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு சென்று விட்டதே என்ற ஆதங்கத்தைதான் வெளியிட்டேன். இதில் என்ன தவறு இருக்கிறது?

நான் திரைப்பட கலைஞர்களை குறைத்து மதிப்பிடுவதில்லை. அவர்கள் அந்த துறையில் ஜொலிப்பவர்கள். சமூகத்துக்கு அவர்களின் பங்களிப்பு அதிகம் உண்டு.

நாட்டு மக்களை, எல்லா துறையை சார்ந்தவர்களையும் மோடி மதிக்கிறார். எனவேதான் மோடி ரஜினியை நேரில் சென்று சந்தித்தார்.

மோடி ரஜினியை தேடி சென்று சந்தித்தாரே என்று இளக்காரமாக குஷ்பு பேசுகிறார். அப்படியானால் ரஜினிக்கு அந்த தகுதி இல்லை என்று சொல்கிறாரா? ரஜினியை சந்தித்ததை தவறு என்கிறாரா? அல்லது ரஜினியை குறைத்து மதிப்பிடுகிறாரா?

பாரதீய ஜனதா தலைவர்கள் பாவமன்னிப்பு கேட்டு நாடாளுமன்றத்தை தேவாலயமாக மாற்றி வருகிறார்கள் என்கிறார். மன்னிப்பு கேட்பது என்பது மிகப்பெரிய பண்பு.

அந்த பண்பு எங்கள் தலைவர்களிடம் உள்ளது. அதையும் வழிபாட்டு தலத்தையும் ஒப்பிட்டு கொச்சைப்படுத்துவது அழகல்ல.

நாட்டுப்பற்றுள்ள கட்சி–நாட்டு மக்கள் நலனை பேணுகிற கட்சி எங்கள் கட்சி. எனவே அதை சார்ந்துதான் எங்கள் பேச்சும், செயலும் இருக்கும்.

பெண் சிங்கம் என்றெல்லாம் மார்தட்டி கொள்ள எதுவும் இல்லை. திரைப்படத்தை பார்த்து ரசித்து கைதட்டி, செல்வதை போல் குஷ்புவின் பேச்சை கேட்டும் கைதட்டி செல்வார்கள், அவ்வளவுதான் என்று கூறியுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum