Top posting users this month
No user |
Similar topics
அகுரி நலா அருவி: விழுதொடர் செறிந்த நீர்வீழ்ச்சி, பசுந்தொடர் காடுகளும் சேர்ந்த பெருங்கவர்ச்சி
Page 1 of 1
அகுரி நலா அருவி: விழுதொடர் செறிந்த நீர்வீழ்ச்சி, பசுந்தொடர் காடுகளும் சேர்ந்த பெருங்கவர்ச்சி
அகுரி நலா ஒரு சிறிய அருவி, அப்பகுதியே பல அருவிகளின் தொகுப்பு, பாறைகளால் சுற்றிவளைக்கப்பட்ட வனப்பு, விழுமிய விழுதொடர் செறிந்த நீர்வீழ்ச்சி, பசுந்தொடர் காடுகளும் சேர்ந்த பெருங்கவர்ச்சி.
இந்த இயற்கை எழில் சூழ்ந்த சுற்றுலா தலம், இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சட்டீஸ்கர் மாநிலத்தில் கொரியா நகரத்தில் பனிஸ்பூர் கிராமத்தில் அமைந்துள்ளது.
அகுரி நலா உள்ள நகரமான கொரியா, மலைகள், குன்றுகள், ஆறுகள், காடுகள் நிறைந்த இயற்கை அழகுதான், கேமராக்கள் அள்ளிக்கொள்ள தகுதியான, நேர்த்தியான நில மற்றும் பாறை அமைப்புகளும் கொண்ட பகுதிதான்.
ஆயிரக்கணக்கானோர் வருடந்தோறும் கொரியாவுக்கு சுற்றுலா பயணிகளாக வருகின்றனர். அங்கு வருபவர்களின் முக்கிய ரசனைக்கு உரியதாக அகுரி நலா உள்ளது.
சுத்தமான காற்று மற்றும் நீர்நிலையால் அங்குள்ள மக்களுக்கு விடுமுறை நாட்களில் வந்து செல்லும் ஆர்வத்தை தூண்டுகிறது. இது சட்டீஸ்கரின் முக்கிய நகரங்களில் ஒன்றான பாய்குந்த்பூரிலிருந்து 65 கி.மீ. தூரத்தில் உள்ளது.
அகுரி நலா அருவி இரண்டு பக்கமும் பாறைகள் இருப்பதால் மறைபொருளாக இருந்து, நெருங்கிய பிறகு கம்பீரமாக வெளிப்படுகிறது. அருவியின் கீழ் குளிப்பதற்கு ஏதுவான அமைப்புகள் இருப்பதால், வரும் பயணிகள் இங்கு குளித்தும் மகிழ்கின்றனர். அகுரி நலா அருவியை சுற்றிலும் நிறைய சிறுசிறு அருவிகள் அழகூட்டுகிறது.
கோடைகாலத்தில் இங்கு பயணிப்பது மிகவும் நல்லது. கோடை வெயிலுக்கு இதமாக, மெல்லிய தூறலாக ஆக்கிரமித்திருக்கும் அருவி சார்ந்த சாரலும் அதன் கர்ஜனை இசையும் மெய், காதுகளுக்கு விருந்தாக அமைகிறது.
இதனால், அகுரி நலா அருவி ’கொரியாவின் காற்றுச்சீரமைப்பி’ (AC) என்று அழைக்கப்படுகிறது.
இந்த அருவியை சுற்றிலும் காடுகள் பாறைகளோடு கலந்திருப்பதல் நண்பர்களோடும் குடும்பத்தினரோடும் சென்று ரசிக்க வேண்டிய வினோத இடங்கள் ஏராளமாக உள்ளன.
அகுரி நலாவுக்கு அருகாமையில், அம்ரித் தாரா அருவி, ராம்தாஹா அருவி, காவர் காட் அருவி போன்றவையும் மக்களால் அதிகமாக சென்று ரசிக்கும் அருவிகளாக விளங்குகிறது.
அருவி மற்றும் அப்பகுதியின் இயற்கை அழகை தவிர்த்து, அந்த கிராமங்களில் வாழும் பழங்குடியினரின் வாழ்க்கைமுறையும் உடை மற்றும் அலங்காரங்களும் வினோதமானது. அது அங்குவரும் பயணிகளுக்கு ஈர்ப்பையும் புதிய அனுபவத்தை ஏற்படுத்துகிறது.
அதனால், அந்த மக்களும் சுற்றுலா தலத்தின் சிறப்பு அம்சங்களில் ஒன்றாக உள்ளனர். பழங்குடியினரின் கைவினைப் பொருள்களில் உள்ள கலைதிறன் பயணிகளால் விரும்பப்படுகிறது. அவைகள் பயன்பாட்டிற்காகவும் நினைவுப் பொருளாகவும் வாங்கப்படுகிறது.
அகுரி நலாவை அடைய விமான, பஸ், ரயில், கார், ஆட்டோ என சகல வசதிகளும் முக்கிய நகரங்களின் வழியாக செல்ல உண்டு. பாய்குந்த்பூரிலிருந்து கொரியா செல்வது வசதியானது.
இதுபோல, முரட்டுத்தனமான இயற்கை அழகை நெருங்கி ரசிக்க வழிசெய்து கொடுக்கும் சுற்றுலாதுறைக்கும் பயணிகள் நன்றி சொல்லலாம்.
இந்த இயற்கை எழில் சூழ்ந்த சுற்றுலா தலம், இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சட்டீஸ்கர் மாநிலத்தில் கொரியா நகரத்தில் பனிஸ்பூர் கிராமத்தில் அமைந்துள்ளது.
அகுரி நலா உள்ள நகரமான கொரியா, மலைகள், குன்றுகள், ஆறுகள், காடுகள் நிறைந்த இயற்கை அழகுதான், கேமராக்கள் அள்ளிக்கொள்ள தகுதியான, நேர்த்தியான நில மற்றும் பாறை அமைப்புகளும் கொண்ட பகுதிதான்.
ஆயிரக்கணக்கானோர் வருடந்தோறும் கொரியாவுக்கு சுற்றுலா பயணிகளாக வருகின்றனர். அங்கு வருபவர்களின் முக்கிய ரசனைக்கு உரியதாக அகுரி நலா உள்ளது.
சுத்தமான காற்று மற்றும் நீர்நிலையால் அங்குள்ள மக்களுக்கு விடுமுறை நாட்களில் வந்து செல்லும் ஆர்வத்தை தூண்டுகிறது. இது சட்டீஸ்கரின் முக்கிய நகரங்களில் ஒன்றான பாய்குந்த்பூரிலிருந்து 65 கி.மீ. தூரத்தில் உள்ளது.
அகுரி நலா அருவி இரண்டு பக்கமும் பாறைகள் இருப்பதால் மறைபொருளாக இருந்து, நெருங்கிய பிறகு கம்பீரமாக வெளிப்படுகிறது. அருவியின் கீழ் குளிப்பதற்கு ஏதுவான அமைப்புகள் இருப்பதால், வரும் பயணிகள் இங்கு குளித்தும் மகிழ்கின்றனர். அகுரி நலா அருவியை சுற்றிலும் நிறைய சிறுசிறு அருவிகள் அழகூட்டுகிறது.
கோடைகாலத்தில் இங்கு பயணிப்பது மிகவும் நல்லது. கோடை வெயிலுக்கு இதமாக, மெல்லிய தூறலாக ஆக்கிரமித்திருக்கும் அருவி சார்ந்த சாரலும் அதன் கர்ஜனை இசையும் மெய், காதுகளுக்கு விருந்தாக அமைகிறது.
இதனால், அகுரி நலா அருவி ’கொரியாவின் காற்றுச்சீரமைப்பி’ (AC) என்று அழைக்கப்படுகிறது.
இந்த அருவியை சுற்றிலும் காடுகள் பாறைகளோடு கலந்திருப்பதல் நண்பர்களோடும் குடும்பத்தினரோடும் சென்று ரசிக்க வேண்டிய வினோத இடங்கள் ஏராளமாக உள்ளன.
அகுரி நலாவுக்கு அருகாமையில், அம்ரித் தாரா அருவி, ராம்தாஹா அருவி, காவர் காட் அருவி போன்றவையும் மக்களால் அதிகமாக சென்று ரசிக்கும் அருவிகளாக விளங்குகிறது.
அருவி மற்றும் அப்பகுதியின் இயற்கை அழகை தவிர்த்து, அந்த கிராமங்களில் வாழும் பழங்குடியினரின் வாழ்க்கைமுறையும் உடை மற்றும் அலங்காரங்களும் வினோதமானது. அது அங்குவரும் பயணிகளுக்கு ஈர்ப்பையும் புதிய அனுபவத்தை ஏற்படுத்துகிறது.
அதனால், அந்த மக்களும் சுற்றுலா தலத்தின் சிறப்பு அம்சங்களில் ஒன்றாக உள்ளனர். பழங்குடியினரின் கைவினைப் பொருள்களில் உள்ள கலைதிறன் பயணிகளால் விரும்பப்படுகிறது. அவைகள் பயன்பாட்டிற்காகவும் நினைவுப் பொருளாகவும் வாங்கப்படுகிறது.
அகுரி நலாவை அடைய விமான, பஸ், ரயில், கார், ஆட்டோ என சகல வசதிகளும் முக்கிய நகரங்களின் வழியாக செல்ல உண்டு. பாய்குந்த்பூரிலிருந்து கொரியா செல்வது வசதியானது.
இதுபோல, முரட்டுத்தனமான இயற்கை அழகை நெருங்கி ரசிக்க வழிசெய்து கொடுக்கும் சுற்றுலாதுறைக்கும் பயணிகள் நன்றி சொல்லலாம்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இந்திய வம்சாவளியை சேர்ந்த மருத்துவர் அமெரிக்காவில் கைது
» அகண்டாகார அருணாசல அருவி
» சுதந்திரக் கட்சியை சேர்ந்த சிலர் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர்
» அகண்டாகார அருணாசல அருவி
» சுதந்திரக் கட்சியை சேர்ந்த சிலர் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum