Top posting users this month
No user |
Similar topics
பேச்சுவார்த்தையில் உடன்பாடு: போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் வாபஸ்!
Page 1 of 1
பேச்சுவார்த்தையில் உடன்பாடு: போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் வாபஸ்!
தமிழகத்தின் போக்குவரத்துத்துறை அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், போராட்டத்தை வாபஸ் பெறுவதாக பேருந்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்கள், ஊதிய ஒப்பந்தம், பணி நிரந்தரம் மற்றும் நிலுவைத் தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 28ம் திகதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் சென்னையில் முத்தரப்பு பேச்சு வார்த்தை நடைபெற்றுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியுடன், தொழி்ற்சங்கத்தினர் இன்று காலை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது, நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சி.ஐ.டி.யு. தலைவர் அ.சௌந்திரராஜன், போராட்டத்தில் ஈடுபட்டு கைதானவர்களை விடுவிக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்தது என்றும், கோரிக்கைகள் குறித்து பேச குழு அமைக்கப்படும் என அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.
மேலும் பிரதான கோரிக்கைகள் குறித்து பேசலாம் என அமைச்சர் உறுதி அளித்துள்ளார் என்று தெரிவித்து செளந்திரராஜன், இதனால் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்கள், ஊதிய ஒப்பந்தம், பணி நிரந்தரம் மற்றும் நிலுவைத் தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 28ம் திகதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் சென்னையில் முத்தரப்பு பேச்சு வார்த்தை நடைபெற்றுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியுடன், தொழி்ற்சங்கத்தினர் இன்று காலை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது, நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சி.ஐ.டி.யு. தலைவர் அ.சௌந்திரராஜன், போராட்டத்தில் ஈடுபட்டு கைதானவர்களை விடுவிக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்தது என்றும், கோரிக்கைகள் குறித்து பேச குழு அமைக்கப்படும் என அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.
மேலும் பிரதான கோரிக்கைகள் குறித்து பேசலாம் என அமைச்சர் உறுதி அளித்துள்ளார் என்று தெரிவித்து செளந்திரராஜன், இதனால் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சம்பள உயர்வு வழங்கப்படாவிட்டால் வேலை நிறுத்தம்: அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்
» கொரியாவில் வேலை வாய்ப்பு! மோசடிக்காரர்களிடம் ஏமாற வேண்டாம்: வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம்
» பைக்கை தடுத்துநிறுத்திய போக்குவரத்து காவலர்..வாலிபர் குடல் சரிந்து பலி: சென்னையில் பரபரப்பு
» கொரியாவில் வேலை வாய்ப்பு! மோசடிக்காரர்களிடம் ஏமாற வேண்டாம்: வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம்
» பைக்கை தடுத்துநிறுத்திய போக்குவரத்து காவலர்..வாலிபர் குடல் சரிந்து பலி: சென்னையில் பரபரப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum