Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சவுதி அரேபியாவில் கை துண்டிக்கப்பட்ட கஸ்தூரிக்கு 10 லட்சம் நிதியுதவி: முதல்வர் ஜெயலலிதா

Go down

சவுதி அரேபியாவில் கை துண்டிக்கப்பட்ட கஸ்தூரிக்கு 10 லட்சம் நிதியுதவி: முதல்வர் ஜெயலலிதா Empty சவுதி அரேபியாவில் கை துண்டிக்கப்பட்ட கஸ்தூரிக்கு 10 லட்சம் நிதியுதவி: முதல்வர் ஜெயலலிதா

Post by oviya Sat Nov 07, 2015 1:39 pm

சவுதி அரேபியாவில் கை துண்டிக்கப்பட்ட கஸ்தூரிக்கு 10 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா இது தொடர்பாக இன்று வெளியிட்ட அறிக்கையில், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கஸ்தூரி முனிரத்தினம் என்ற ஏழைப் பெண் சவுதி அரேபியாவில் வீட்டு வேலைப் பணியில் இருந்த போது அந்த வீட்டின் உரிமையாளர் கஸ்தூரியை கொடூரமாக தாக்கியதால் அவரது கை துண்டிக்கப்பட்டது.

இந்த கொடூர சம்பவம் பற்றி தெரிய வந்ததும், எனது உத்தரவின் பேரில் தமிழக அரசு இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரங்களுக்கான அமைச்சகம் ஆகியவற்றை தொடர்பு கொண்டு கஸ்தூரிக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கும் இந்தியாவிற்கு அழைத்து வருவதற்கும், அவர் பணி புரிந்த வீட்டு உரிமையாளரிடமிருந்து இழப்பீடு பெற்று தரவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டது.

இது தொடர்பாக 23.10.2015 அன்று பிரதமர் மோடிக்கு நான் ஒரு கடிதம் எழுதினேன்.

அந்த கடிதத்தில், கஸ்தூரிக்கு உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்கவும், பத்திரமாக நாடு திரும்பவும், தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும், சவுதி அரேபியாவில் அவர் தங்கியிருக்கும் வரை அவருக்கு போதிய பாதுகாப்பு வழங்கிடவும், உரிய இழப்பீடு பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தேன்.

தமிழக அரசு அதிகாரிகள் இது குறித்து தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.

கஸ்தூரி இன்று (7.11.2015) மதியம் விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

தமிழக அரசு அதிகாரிகள் விமான நிலையத்திற்குச் சென்று கஸ்தூரியை வரவேற்று, தேவையான உயர் மருத்துவ சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

கஸ்தூரியின் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்திற்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இந்த நிதி தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டு அதிலிருந்து பெறப்படும் மாத வட்டியான 8,330 ரூபாய் கஸ்தூரிக்கு மாதந்தோறும் அவரது வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை:

கஸ்தூரி சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ராஜீவ் காந்தி மருத்துவமனையின் ஆர்.எம்.ஓ. இளங்கோவன் இது குறித்து கூறுகையில், கஸ்தூரியின் உடல் நலம் குறித்துத் தீவிர பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

அவருக்கு, மருத்துவர் இஸ்மாயில் தலைமையில் 6 பேரைக் கொண்ட மருத்துவர்கள் குழுவினர் சிகிச்சை அளிக்கவுள்ளனர்.

ஆரம்பக் கட்ட சிகிச்சைகளை கஸ்தூரிக்கு முன்னரே கொடுத்துள்ளதால் அடுத்த கட்ட சிகிச்சை மேற்கொள்ளப்படும்.

அபாயகரமான சூழ்நிலையில் கஸ்தூரி இல்லை. அவருடன் தங்குவதற்கு அவருடைய கணவர்,மகன் சகோதரி அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.

சவுதியில் கை துண்டிக்கப்பட்ட பெண் இன்று சென்னை திரும்புகிறார்

சவுதியில் வீட்டு உரிமையாளரால் கை துண்டிக்கப்பட்ட பெண் இன்று சென்னை திரும்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காட்பாடியை சேர்ந்த கஸ்தூரி (58) என்ற பெண்மணி, கடந்த யூலை மாதம் வீட்டு வேலை செய்வதற்காக சவுதி அரேபியாவுக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் அவரது கை துண்டிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் கை துண்டானதற்கு சரியான காரணங்கள் தெரியாத நிலையில் அதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.

கஸ்தூரியின் உறவினர்கள் கூறுகையில், அவரது வீட்டு உரிமையாளர் தான் அவர்து கையை துண்டித்து, அவரை மாடியில் இருந்து தூக்கி வீசியதாக சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளனர்.

ஆனால் இதனை மறுத்துள்ள அந்த வீட்டு உரிமையாளர், கஸ்தூரி வீட்டை விட்டு தப்பிக்க முயன்று 3வது மாடியில் இருந்து தப்பிக்க முயன்ற போது தவறி விழுந்ததில் கை துண்டானதாக தெரிவித்துள்ளார்.

சவுதி பொலிசார் அளித்த விளக்கத்திலும் இதனையே தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், கஸ்தூரியை மீட்டுக் கொடுக்கும்படி அவரது உறவினர்கள் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் கடந்த மாதம் மனு அளித்துள்ளனர்.

இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் விசாரணை நடத்தி, அவரை இந்தியாவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சவுதியில் இருந்து அவர் இன்று (சனிக்கிழமை) விமானம் மூலம் சென்னை வருகிறார் என்றும், அவருக்கு சென்னையில் சிகிச்சை அளிக்க உறவினர்கள் ஏற்பாடு செய்துள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

கஸ்தூரியின் மகன் மோகன் கூறுகையில், அம்மாவுக்கு சென்னையில் சிகிச்சை அளிக்க முடிவு செய்திருக்கிறோம்.

எங்களுக்கு போதிய வருமானம் இல்லை. எனவே, மருத்துவ செலவுகளை இலவசமாக அளிக்க முதலமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum