Top posting users this month
No user |
பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர் 4 மர்ம நபர்களால் சுட்டுக் கொலை
Page 1 of 1
பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர் 4 மர்ம நபர்களால் சுட்டுக் கொலை
உத்தர பிரதேசத்தின் அலிகர் முஸ்லீம் பல்கலைகழகத்தின் மாணவர் அதன் வளாகத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
சஹரான்பூரை சேர்ந்த ஆலம்கீர், அலிகர் முஸ்லீம் பல்கலைகழகத்தில் இறுதி ஆண்டு பி.ஏ பட்டப்படிப்பு பயின்று வருகிறார்.
பல்கலையின் விடுதியில் தங்கியிருந்த இவரை, வளாகத்தில் நேற்று மாலை 4.00 மணியளவில், எங்கிருந்தோ திடீர் என இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர் துப்பாக்கிகளால் சராமரியாக சுட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.
இதில் ஐந்து இடங்களில் குண்டுபட்டு இரத்த வெள்ளத்தில் விழுந்த அவரை, வளாகத்தில் ஜவகர்லால் நேரு மருத்துவக் கல்லூரியின் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிர் இறந்துள்ளார்.
இது குறித்து காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையிலும் இன்னும் யாரும் கைது செய்யப்படவில்லை.
அங்கு நிலவும் பதட்டத்தை தணிக்க இன்று அனைத்து வகுப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டதாக நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆலம்கீர் சுட்டுக் கொல்லப்பட்டதால் பல்கலைகழக மாணவர்களால் கோபத்தில் எதுவும் அசாம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க, வளாகத்தில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சஹரான்பூரை சேர்ந்த ஆலம்கீர், அலிகர் முஸ்லீம் பல்கலைகழகத்தில் இறுதி ஆண்டு பி.ஏ பட்டப்படிப்பு பயின்று வருகிறார்.
பல்கலையின் விடுதியில் தங்கியிருந்த இவரை, வளாகத்தில் நேற்று மாலை 4.00 மணியளவில், எங்கிருந்தோ திடீர் என இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர் துப்பாக்கிகளால் சராமரியாக சுட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.
இதில் ஐந்து இடங்களில் குண்டுபட்டு இரத்த வெள்ளத்தில் விழுந்த அவரை, வளாகத்தில் ஜவகர்லால் நேரு மருத்துவக் கல்லூரியின் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிர் இறந்துள்ளார்.
இது குறித்து காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையிலும் இன்னும் யாரும் கைது செய்யப்படவில்லை.
அங்கு நிலவும் பதட்டத்தை தணிக்க இன்று அனைத்து வகுப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டதாக நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆலம்கீர் சுட்டுக் கொல்லப்பட்டதால் பல்கலைகழக மாணவர்களால் கோபத்தில் எதுவும் அசாம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க, வளாகத்தில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum