Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஷீனா போராவை கொலை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார் இந்திராணி?

Go down

ஷீனா போராவை கொலை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார் இந்திராணி? Empty ஷீனா போராவை கொலை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார் இந்திராணி?

Post by oviya Sat Sep 05, 2015 1:35 pm

ஷீனா போராவை கொலை செய்த குற்றத்தை இந்திராணி ஒப்புக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இந்திராணி, ஸ்டார் இந்தியா நிறுவன முன்னாள் தலைமை செயல் அதிகாரி பீட்டர் முகர்ஜியை 3-வது திருமணம் செய்தார்.

இந்திராணி ஏற்கெனவே 2 பேரை திருமணம் செய்தவர். முதல் கணவர் சித்தார்த் தாஸ் மூலம் பிறந்தவர்கள் ஷீனா போரா, மைக்கேல்.

இரண்டாவது கணவர் சஞ்சீவ் கண்ணா மூலம் பிறந்தவர் வித்தி. இந்த விவரங்களை பீட்டரிடம் இந்திராணி மறைத்து விட்டார்.

இந்நிலையில் கடந்த 2012ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் திகதி ஷீனா கொலை செய்யப்பட்டுள்ளார். அதன்பின் ஷீனா அமெரிக்கா சென்றுவிட்டதாக பொய் சொல்லி மற்றவர்களை இந்திராணி ஏமாற்றி உள்ளார்.

இந்த வழக்கில் கார் ஓட்டுநர் ஷியாம் ராய் அளித்த தகவலால் ஷீனா கொலை செய்யப்பட்டது 3 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியில் வந்தது. இந்த வழக்கில் இந்திராணி, 2-வது கணவர் சஞ்சீவ், ஷியாம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் இறுதியில் இந்திராணியை பொலிசார் கைது செய்ததில் இருந்து அவர், “ஷீனா உயிரோடுதான் இருக்கிறார், அமெரிக்காவில் வசிக்கிறார்” என்று தொடர்ந்து கூறி வந்தார்.

மும்பை பொலிசார் தீவிர விசாரணை நடத்திய போது கூட, தனக்கு எதுவும் தெரியாது என்றார் இந்திராணி. இந்நிலையில் அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டதாக பொலிசார் உறுதியாக தெரிவித்தனர்.

இதற்கிடையில், பீட்டர் முகர்ஜிக்கு சட்ட ஆலோசனைகள் வழங்கி வரும் மூத்த வழக்கறிஞர் மகேஷ் ஜெத்மலானி, ‘‘கொலை குற்றத்தை இந்திராணி ஒப்புக் கொண்டது பற்றி பீட்டருக்கு எதுவும் தெரியாது.

சில ஊடகங்கள்தான் அவ்வாறு செய்திகளை பரபரப்பாக வெளியிட்டுள்ளன என்று கூறியுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum