Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


உலகின் செல்வாக்கு மிகுந்த பெண்கள் பட்டியலில் இடம்பிடித்த இந்திராணியின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்!

Go down

உலகின் செல்வாக்கு மிகுந்த பெண்கள் பட்டியலில் இடம்பிடித்த இந்திராணியின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்! Empty உலகின் செல்வாக்கு மிகுந்த பெண்கள் பட்டியலில் இடம்பிடித்த இந்திராணியின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்!

Post by oviya Mon Aug 31, 2015 3:33 pm

உலகின் செல்வாக்கு மிகுந்த 50 பெண்களின் பட்டியலில் இடம்பிடித்து தற்போது மகளை கொன்ற வழக்கில் சிறையில் இருக்கும் இந்திராணி பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
அசாம் மாநிலத்தின் அரசு பொறியாளரின் மகளாக பிறந்த இந்திராணி, கவுகாத்தியில் படிப்பை முடித்தார்.

பின்னர் சித்தார்த் தாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஷீனா போரா, மைக்கேல் போரா என்ற குழந்தைகளை பெற்றெடுத்தார்.

மேல்படிப்புக்காக குடும்பத்தை விட்டுவிட்டு கொல்கத்தா சென்ற இந்திராணி, அங்கு சஞ்சீவ் கண்ணா என்பவரை திருமணம் செய்து கொண்டு ஒரு மகளை பெற்றுள்ளார்.

இந்நிலையில் ஸ்டார் டிவியில் அவருக்கு வேலை கிடைத்ததால், சஞ்சீவ் கன்னாவை பிரிந்து மகளுடன் மும்பையில் குடியேறியுள்ளார்.

இதையடுத்து 2 திருமணங்கள், குழந்தைகள் பற்றி பீட்டரிடம் தெளிவாக மறைத்து விட்டு, அங்கு தலைமை செயல் அதிகாரியாக இருந்த பீட்டர் முகர்ஜியை 3-வது திருமணம் செய்து கொண்டுள்ளார்.

குழந்தைகளின் புகைப்படங்களை காட்டி அவர்கள் தனது தங்கை, தம்பி என்று கூறியதை பீட்டர் முகர்ஜியும் நம்பி உள்ளார்.

மீடியாவில் செல்வாக்குள்ள ஒருவரை திருமணம் செய்ததன் மூலம் இந்திராணி பிரபலமானதுடன், குறைந்த காலகட்டத்தில் பணம், செல்வாக்கு என்று வாழ்க்கையே மாறியது.

இந்நிலையில், பீட்டரின் முதல் மனைவிக்குப் பிறந்த ராகுல், ஷீனாவை காதலித்ததால், இந்திராணி அதிர்ச்சி அடைந்தார்.

ஷீனாவை கடுமையாக கண்டித்தும், பலன் இல்லாததால் கடந்த 2012-ம் ஆண்டு, ஷீனாவை கொலை செய்து உடலை எரித்து புதைத்துவிட்டார். தற்போது 3 ஆண்டுகள் கழிந்த நிலையில் இந்திராணி சிக்கி உள்ளார்.

கடந்த 2002-ம் ஆண்டு பீட்டர் முகர்ஜி, இந்திரானி இருவரும் சேர்ந்து ஐஎன்எக்ஸ் சர்வீஸஸ் என்ற பெயரில் கொல்கத்தாவில் தனியாக நிறுவனம் தொடங்கினர்.

ஐஎன்எக்ஸ் சர்வீஸஸ் என்ற பெயரில் தொடங்கப்பட்ட சிறிய நிறுவனம், படிப்படியாக வளர்ச்சி அடைந்து பல நிறுவனங்களை தன்னுடன் இணைத்து கொண்டது.

இன்று ‘ஐஎன்எக்ஸ் எக்ஸ்சிகியூட்டிவ் அண்ட் செலக் ஷன்’ என்ற அளவில் பிரம்மாண்ட வளர்ச்சியுடன் உள்ளது.

அதன் இணையதளத்தில் தான், உலகின் மிகச் செல்வாக்கு மிகுந்த 50 பெண்களில் ஒருவர் ஐஎன்எக்ஸ் நிறுவனர் இந்திராணி என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால், இந்த கொலை வழக்கு இந்திராணியின் அசுர வளர்ச்சியை தலைகீழாக புரட்டிப் போட்டுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஷீனாவின் சடலத்தை பாதி எரிந்த நிலையில் கைப்பற்றிய பொலிஸார், கொலை அல்லது விபத்து மரணம் என வழக்கு பதிவு செய்யாதது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ராய்கட் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஷீனாவின் உடல் பாகங்கள் தடயவியல் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் முடிவு இந்த வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கும் என்று விசாரணைக்குழு நம்புகிறது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum