Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மரத்தின் பழ வகை

Go down

மரத்தின் பழ வகை            Empty மரத்தின் பழ வகை

Post by oviya Sat Aug 29, 2015 12:10 pm


விளாம் பழம்:
சுவாசம், காச நோய், கபம், பித்த தாகம் ஆகியவற்றை விலக்கும். உடலுக்கு சுகமும் பசியும் உண்டாகும்.
இலந்தை பழம்:
பித்த மூர்ச்சை, அரோசகம், திரி தோஷம், வாந்தி , வலிவாதம் இவை போகும். பசியில் இதை உண்டால் எரிவாதம் உண்டாகும்.
வாழை பழத்தின் பொது குணம்:
உடம்பை வெளுக்க செய்கின்ற சோமரோகம், பித்த பிணிகள், மத நோய், மூர்ச்சை ஆகியவை நீங்கும்.
ரசதாளி வாழைப்பழம்:
ரசதாளி வாழைப்பழத்தை சாப்பிட்டால் நாவுக்கு இதமாக இருக்கும். அக்கினி மந்தத்தை உண்டாக்கும். வாத நோயை அதிகரிக்கும்.
கருவாழைப்பழம்:
அதிக ருசியை உடைய கருவாழைப்பழத்தால் பித்தம் தணியும். பசி அடங்கும்.
செவ்வாழைப்பழம்:
அக்கினி மந்தத்தையும், விந்து, உடல் முதலியவற்றிற்கு பலத்தையும் கொடுக்கும். வாத ரோகிகளுக்கு உதவாது. சாப்பிடுவதற்கு மிகவும் ருசியானது.
மொந்தன் வாழைப்பழம்:
அக்கினி மந்தம், உடல் வலியுடன் பாரிப்பு, இசிவு, சீதளம், திரி தோஷ தாகம் இவை உண்டாகும். மன உறுதியை விலக்குகின்ற பித்தம், காமிலம், விந்து பற்றிய வறட்சி இவை மங்கும்.
வெள் வாழைப்பழம்:
வெள் வாழைப்பழமானது அக்கினி மந்தத்தையும், வாத ரோகத்தையும் விருத்தி செய்யும்.
அடுக்கு வழைப்பழம்:
அக்கினி மந்தத்தை உண்டாக்கும். பித்த மிகுதியையும், மலம் தீய்வதையும் வெளியாக்கும். நல்ல தேக காந்தியை கொடுக்கும்.
பச்சை வாழைப்பழம்:
உடலில் உஷ்ணத்தையும், பித்தத்தையும், மல பந்தத்தையும் நீக்கும்.
மலை வாழைப்பழம்:
அதிக ருசியை உடைய மலை வாழைப்பழத்தால் மலபந்தமும், சோகை ரோகமும் நீங்கும். ஆனால் இது அக்கினி மந்தத்தை உண்டாக்கும்.
நவரை வாழைப்பழம்:
மந்தாக்கினி, தினவு, வாத தொந்தரவு, சிலேஷ்மம், கரப்பான் ஆகியவை அதிகரிக்கும்.
பேயன் வாழைப்பழம்:
மனச்சோர்வும், உட்சூடும் நீங்கும். வாதாதிக்கமும், மிகக்குளிர்ச்சியும், இலகுவாக மலம் இறங்கலும் உண்டாகும்.
மாம்பழம்:
நமைச்சலும், மார்பு எரிச்சலும், கண் வலியும், கரப்பானும், கிரந்தியும் அதிகரிக்கும். பசி நீங்கும்.
மாம்பழம் (காய் பிஞ்சு):
விந்து பெருக்கத்துக்கும், அதை கட்டுப்படுத்துவதற்கும் உதவும்.
அத்திப்பழம்:
இதை தசை அத்திப்பழம் என்றும் கூறுவர். உஷ்ண சீதளமுள்ளது. இரத்த விருத்தியும், தேக போஷனையும் தரும். சுர வெப்பமும், ஜீரண பலமும் நீங்கும்.
விதை அத்திப்பழம்:
நித்ய மலபந்தத்தையும், சரீர உஷ்ணத்தையும், பித்த வேகத்தையும் போக்கும்.
புளியம் பழம்:
அபத்தியமான புளியம் பழத்தினால் மந்த புத்தி, தேகம் தூலித்தல், சந்நிபாத சுரங்கள், அங்சலன வாதம், விந்து கட்டுப்பாடு, நரை ஆகியவை உண்டாகும். வாந்தியும், பித்த ரோகமும் விலகும்.
பழம் புளி:
பழம் புளியால் திரி தோஷம், வாத நோய், சூலை, சிலேத்ம கோபம், சூட்சை, வாந்தி, விழி நோய், மனச்சோர்வு ஆகியவை உண்டாகும்.
சரக்கொன்றைப்புளி:
வாத பிரமேகம், மலபந்தம், குடல் வலி, குடலை பற்றிய அழுக்கு, உஷ்ணம் இவை நீங்கும்.
பனம் பழம்:
பனம் பழத்தையே தினமும் உணவாக சாப்பிட்டால் கரப்பான், அழுகிய சிரங்கு, மலபந்தம், பித்த வாய்வால் பிறந்த நோய் இனங்கள் இவை உண்டாகும்.
தேற்றான் பழம்:
வாத இருமல், இரைப்பு, மலக்கட்டு, திரி தோஷங்கள் ஆகியவை போகும். வாந்தி உண்டாகும்.
நாவல் பழம்:
இதை நாகப்பழம் என்றும் கூறுவர். நாவல் பழத்தினால் அக்கினி மந்தம். உடல் வலி, கடுவான், சீதவாதம், கடுத்தல் ஆகியவை உண்டாகும். நீரிழிவும், வெப்பமும், தாகமும் நீங்கும்.
வெள்ளை நாவல் பழம்:
உள்வெப்பம் நீங்கும். விந்து விருத்தி, இரத்த தாதுவும் உண்டாகும்.
சம்பு நாவல் பழம்:
காட்டிலுள்ள சம்பு நாவல் பழத்தால் வாத உஷ்ணம், பித்த உஷ்ணம், தாக ரோகம் இவை நீங்கும்.
பாலைப்பழம்:
இதை தீம்பாலைப்பழம் என்றும் கூருவர். இதனால் கருங்கரப்பான், சிலேஷ்ம தோஷம், வெப்பத்தை உண்டாக்குகின்ற கிரந்தி ஆகியவை போகும். மிகுந்த பசி உண்டாகும்.
கொட்டை முந்திரிப்பழம்:
தாகமும், உடல் வெப்பமும் நீங்கும். கரப்பான், துஷ்ட விரணம், கிரந்தி, நெஞ்சில் கரகரப்பு இவற்றை உண்டாக்கும்.
தமரத்தம் பழம்:
இதை தந்தசடம் என்றும் கூறுவர். புளிப்புள்ள தமரத்தம் பழத்தால் வாத பித்த தொந்தரவு, வாத சிலேஷ்ம தொந்தரவு, வாந்தி, குரல் கம்மல், நேத்திரரோகம் இவை நீங்கும்.
கொய்யாப்பழம்:
கொய்யாப்பழத்தினால் முத்தோஷம், தலை மயக்கம், அரோசகம், மந்தம், வாந்தி, வயிற்று உப்பல், கரப்பான் வீரியம் உண்டாகும். மலம் கழியும்.
எலுமிச்சை பழம்:
தாகம், நகச்சுற்று, யானைக்கால் உன்மாதம், பித்தம், கண் நோய், காது வலி, வாந்தி நீங்கும்.
நாரத்தம் பழம்:
பித்த குணம், ரோகம் நீங்கும். நீங்காத ஜடராக்கினியும், விந்து விருத்தியும் உண்டாகும்.
சாதி நாரத்தம் பழம்:
தாகம், அரோசகம், வாய்க்கடுப்பு இவற்றை நீக்கும்.
கொளுஞ்சி நாரத்தம் பழம்:
பிரமேக தேகிகளின் நாவறட்சியையும் நீக்கும்.
சீத்தாப்பழம்:
பித்த சிலேஷ்ம தொந்தரவும், அக்கினி மந்தமும், மனச்சோர்வும் உண்டாகும்.
மாதுளம் பழம்:
இதை தாடிமக்கனிஎன்றும் கூறுவர். பெருமை மிகுந்த மாதுளை பழத்துக்கு சந்தேகம் நீங்க, நினைப்பையும், பேச்சையும் ஒழிக்கின்ற சந்நிபாத ரோகம், வாந்தி, கபம், மிகு தாகம், பித்த நோய் ஆகியவை விலகும். புத்திர வியாதி நீங்கும். மேலும் வாய் நீர் சுரப்பும், கசப்பும், வாந்தியும், விக்கலும், மந்தமும், அதிசுரமும், நெஞ்சு எரிச்சலும், காதடைப்பும், நீங்காத மயக்கமும் ஒழியும். வெடித்த பழத்தை உடனே பிழிந்து மெல்லிய துணியால் வடிகட்டி தகுந்த அளவு கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் உஷ்ணம் குறையும். உடல் முழுவதும் குளிர்ச்சி அடையும்.
கொமட்டி மாதுளம் பழம்:
அரோகம், பித்த கோபம், சிலேஷ்ம தோஷம் ஆகியவை உண்டாகும். ருசியை உண்டாக்கும்.
பேரீச்சம் பழம்:
இதை கர்ச்சூரப்பழம் என்றும் கூறுவர். நீரை சுரப்பிக்கின்ற பித்த நோய், மத ரோகம், மூர்ச்சை, சுரம், சிலேஷ்மம், நீர்க்கோவை, தாகம், இரத்த பித்தம், நீரிழிவு, ருசியின்மை, மலச்சிக்கல் ஆகியவை நீங்கும்.

oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum