Top posting users this month
No user |
Similar topics
மரத்தின் பூ வகை
Page 1 of 1
மரத்தின் பூ வகை
குங்குமப்பூ:
நீரேற்றம், நாசி பிரச்சனை, செவி பிரச்சனை, மனச்சோர்வு ஆகியவை குறையும்.
கொன்றைப்பூ:
இதனை சரக்கொன்றை என்றும் கூறுவர். கொன்றைப்பூவால் மது மேகம், கடல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஆகியவை குறையும்.
மைக்கொன்றைப்பூ:
இதை மயிர் கொன்றைப்பூ என்றும் கூறுவர். இவற்றால் பிரமேகமும், சல மேகமும் நீங்கும்.
காட்டாத்திப்பூ:
கடுப்பு, இரத்த பிரச்சனை, வெண்மையான மலக்கழிச்சல், பிரமேகம் ஆகியவை போகும்.
செண்பகப்பூ:
வாத பித்த தொந்தரவு, சுரம், பிரமேகம், தேவையில்லாமல் விந்து வெளியேறுதல் ஆகியவை குறையும். மனம் களிப்பு அடையும்.
பாதிரிப்பூ:
தீச்சுரமும், மேகமும் நீங்கும்.
மந்தாரைப்பூ:
விழிக்கு குளிர்ச்சியை தரும். உடல் வெப்பத்தை நீக்கும்.
புன்னை பூ:
நீங்காத மேகம், கரப்பான், மனஅழுத்தம் ஆகியவை குறையும்.மயக்கம் உண்டாகும். பித்தம் என்பர்.
மகிழம் பூ:
உடல் வெப்பமும், இதை முகர்ந்தால் அரோக ரோகம் குறையும்.
பன்னீர் பூ:
வாந்தி, ருசியின்மை, நாவறட்சி, பித்த கோபம் ஆகியவை நீங்கும்.
குருக்கத்திப்பூ:
இதனை மாதவிப்பூ என்று கூறுவர்.அதிக தாகம், பித்த கோபம், பல விதமான விஷங்கள் ஆகியவற்ரை நீக்கும்.
செந்தாழம் பூ:
சிரஸ்தாப ரோகம், நீரேற்றம், நெஞ்சில் கபம், இருமல், வாத கோபம் இவற்றை குறைக்கும். உடலில் வனப்பை உண்டாக்கும்.
முருங்கைப்பூ:
பித்த தோஷம், அரோசகமும் நீங்கும். கண் குளிர்ச்சியும், விந்து விருத்தியும் உண்டாகும்.
அகத்திப்பூ:
சுருட்டு முதலிய புகையினாலும், வெயில் ஆதிக்க உஷ்ணத்தாலும் ஏற்படும் பித்தமும், உடல் அழலையும் நீங்கும்.
செவ்வகத்திப்பூ:
பார்கின்ற போது பயங்கரத்தை கொடுகின்ற நாசியால் விழுகின்ற இரத்த பெருக்கை விரைவில் நிறுத்துவதோடு, உள் வெப்பத்தையும் நீக்கும்.
வேப்பம் பூ:
சந்தி, மூர்ச்சை, தோஷம், வாந்தி, அரோகம், நீடித்த வாதம், ஏப்பம், மலக்கிருமி இவற்றை போக்கும்.
மாதுளம் பூ:
பித்தம், வாந்தி, வயிறு உளைச்சல், ஏப்பம், இரத்த மூலம் இவற்றை போக்கும். இரத்தம் பெருகும். உடலுக்கு பலத்தை உண்டாக்கும்.
புளியம் பூ:
பித்த கோபமும், ருசியின்மையும், அதிமான வாந்தியும் நீங்கும்.
இலுப்பை பூ:
பித்த சுரமும், தாக சுரமும் நீங்கும். அதிக பித்தமும், மனச்சோர்வும் நீங்கும்.
வாகைப்பூ:
வாத தோஷங்களும், சிறு விஷத்தையும், கோபத்தையும் கொடுக்கும்.
முள் முருங்கைப்பூ:
இதனை கல்யாண முருங்கை என்றும் கூறுவர். இது கருப்பப்பை பிரச்சனை, வாந்தி, வயிற்று வலி, பித்த சுரம் முதலியவற்றை குறைக்கும்.
தென்னம் பூ:
பிரமேகம், உட்காய்ச்சல், இரத்த பித்தம், சுரம், ஒழுக்கு பிரமியம், விஷபாத ரோகம் ஆகியவற்றை நீக்கும்.
பனம் பூ:
பனம் பூவானது வாதம், சிறுநீர் சிக்கல், ரோகம், சுரம் ஆகியவற்றை போக்கும்.
வாழைப்பூ:
வாழைப்பூ இரத்த மூலம், பிரமேகம், வெள்ளைப்படுதல், மனசோர்வு, கபம், உதிரக்கடுப்பு, இருமல், கை, கால் எரிச்சல் இவற்றை நீக்கும். விந்து விருத்தி உண்டாகும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum