Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மரத்தின் விதை வகை

Go down

மரத்தின் விதை வகை         Empty மரத்தின் விதை வகை

Post by oviya Thu Aug 27, 2015 3:40 pm

மாங்கொட்டை:
சீதபேதி, இரத்தாதிசாரம், உதிரக்கடுப்பு, மூலச்சூடு இவை அனைத்தும் அகலும்.
பலாக்கொட்டை:
கருக்கிய பலா கொட்டையினால் அள்ளு மாந்தம், குடலின் கபத்தால் மலச்சிக்கல், கள் குடியர்களுக்கு உண்டாவது போல் நெஞ்சில் புளித்த ஏப்பம் உண்டாதல். கல் போல் வயிறு கட்டிப்படுதல், வயிற்று கோளாறு ஆகியவை உண்டாகும்.
புளியங்கொட்டை:
தோலில் துவர்ப்புள்ள புளியங்கொட்டைக்கு சுக்கில மேகம், பித்தாதிசாரம், அதிவிரணம், மூத்திரக்கடுப்பு, வெள்ளைப்படுதல் ஆகியவை நீங்கும்.
தேற்றான் கொட்டை:
பிரமேகம், வெட்டை, உட்சூடு, ஜடராக்கினி, வயிற்றுக்கடுப்பு, ரணம் ஆகியவை நீங்கும். மந்தம் உண்டாகும். கண்ணுக்கு மருந்தாகும்.
எட்டிக்கொட்டை:
கருமேகம், சந்நி, விஷக்கட்டி, தோல் நோய்கள், வாத வலி, வீரிய நஷ்டம், கரப்பான், மூர்ச்சை, மனச்சோர்வு, பிடகம் ஆகியவை போகும்.
புரசங்கொட்டை:
இதை மலாசுக்கொட்டை என்றும் கூறுவர். மல பிரச்சனை, வாத வலி, சீதம், படர்தாமரை, குன்மம், வயிற்று இரைச்சல், கரப்பான் இவை நீங்கும். பித்தம் அதிகரிக்கும்.
புன்னை கொட்டை:
செவிப்புண், சந்நி, தனுர்வாதம், சூதக வாயு, உடலில் நீரை ஏற்றி அதில் அழுத்திய சீதள வாயு ஆகியவை நீங்கும்.
கிலுப்பை விதை:
பார்வைக்கு அழகாக இருக்கும். கிலுப்பை விதையினால் வாய்வு போகும். பல பூச்சி கடிகளும், விஷங்களும் நீங்கும்.
அழிஞ்சில் விதை:
நாளறிந்து காப்பிடு எடுத்த அழிஞ்சில் விதையினால் அஞ்சா மறைப்புமையும், உலக வசியமும் உண்டாகும்.
புங்கின் விதை:
கழலை, விரணம், கிரந்தி, கரப்பான், கர்ண பரிஸ் போடகம், சந்நி, கண் நோய் ஆகியவை போக்க உதவும். மலத்தை கட்டும். காட்டு புங்கன் விதைக்கு தேமலும், படையும், கீல்களை பற்றிய வாய்வும் போகும்.
மருதோன்றி விதை:
பெண்களுக்கு தேவையற்ற தொந்தரவு உண்டாகும். வெள்ளை, பெரும்பாடு முதலியவை நிவர்த்தியாகும்.
வேப்பம் விதை:
தோல் நோய்கள், சர்ப்ப விஷம், சந்நி, சொறி சிரங்கு, மூலம், ஏப்பம், மலத்திலுள்ள சிறு கிருமி முதலியவை போகும்.
கடப்பம் விதை:
இதை கடம்பு விதை என்றும் கூறுவர். விஷக்கடி, கிரஸ்தாப ரோகம், வாதம், அக்கினி மாந்த பேதங்கள் ஆகியவை நீங்கும்.
மகிழம் விதை:
கண் கலிக்கத்துகான மகிழம் விதை மலாவிருத வாதம், நேத்திர தோஷம், சர்ப்ப விஷம், சுரம் இவைகளை நீக்கும். சுக்கிலத்தையும் தேக வனப்பையும், பலத்தையும் விருத்தி செய்யும். இது சீதளம் தரக்கூடியது.
தில்லம் விதை:
கீடக விஷம், சர்ப்ப விஷம், திமிர் வாதம், இனிப்பு சுவையால் பிறந்த கபரோகம், தோல் நோய் ஆகியவை போகும்.
ஆளி விதை:
சோபை, மிகுவமனம், உடல் கடுப்பு, வாத வலி, நரம்பு சூலை, அஸ்தி சூடு, ஒக்காளம், அருசி, பீஜவாயு ஆகியவை நீங்கும்.
உருத்திராட்சம்:
அதிதாகம், திரிதோஷம், விக்கல் ரோகம், பித்த கோபம், பித்த ரோகம், சிலேஷ்மாதிக்கம் இவற்றை போக்கும்.
முருங்கை விதை:
சலரூபமாக கரைந்த விந்துவும் பிசின் போல கெட்டியாகும். உடல் பலமுடையதாகும்.
மாதுளை விதை:
இனிப்புள்ள மாதுளம் விதையானது சுக்கிலத்தை இறுக்குவதோடு, அதிலுள்ள குற்றத்தையும், பிரமேகச்சுருக்கையும் நீக்கும்.
முந்திரிப்பருப்பு:
மிகுந்த ருசியுள்ள பருப்பானது பித்த வாத தொந்தம், விந்து விருத்தி, அக்கினி மாந்தம் இவற்றை உண்டாக்கும்.
வாதுமை பருப்பு:
இதை அடப்பம் விதை என்றும் கூறுவர். வாதுமை பருப்பினால் விழிப்படலமும், விரண கொழுமையும் நீங்கும். விந்து பலம் அதிகரிக்கும்.
சாரப்பருப்பு:
சிறுநீரை பற்றிய கடுஞ்சுருக்கு. மூத்திரக்கடுப்பு, சலப்பிரமேகம் ஆகியவை நீங்கும். நீர்த்து போன விந்து இறுகும். ரசகெந்தகங்களை சாப்பிட்டவர்களுக்கு அதன் அழலையை ஆற்றும்.

oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum