Top posting users this month
No user |
Similar topics
ஜெயலலிதா சொன்னதோ, கடல் அளவு; செய்ததோ, கை அளவுதான்: கருணாநிதி குற்றச்சாட்டு
Page 1 of 1
ஜெயலலிதா சொன்னதோ, கடல் அளவு; செய்ததோ, கை அளவுதான்: கருணாநிதி குற்றச்சாட்டு
ஜெயலலிதா 110 விதியின் கீழ் படித்த திட்டங்கள் கடந்த 4 ஆண்டுகளில் என்னவாயின என தி.மு.க தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த நான்காண்டு காலத்தில் எந்தத் துறை அமைச்சருக்கும் வாய்ப்பே கொடுக்காமல், முதலமைச்சர் ஒருவர் மட்டுமே தமிழகச் சட்டமன்றத்தில் 110வது விதியின் கீழ் அத்தனை அறிக்கைகளையும் படித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் கடந்த நான்காண்டு காலத்தில் ஜெயலலிதா 110வது விதியின் கீழ் படித்த அறிக்கைகளிலே கூறப்பட்ட திட்டங்கள் என்னவாயின? நிறைவேறி விட்டனவா? அல்லது ஏட்டளவிலேயே நின்று போய் விட்டனவா?
2011ஆம் ஆண்டு 8-6-2011 முதல் 13-9-2011 அன்று வரை முதலமைச்சர் ஜெயலலிதா 110வது விதியின் கீழ் 19 அறிக்கைகளைப் படித்தார். அந்த 19 அறிக்கைகளிலும் 54 அறிவிப்புகள் இருந்தன.
2012ஆம் ஆண்டு 29-3-2012 முதல் 2-11-2012 அன்று வரை முதலமைச்சர் ஜெயலலிதா 61 அறிக்கைகளைப் படித்தார். இந்த 61 அறிக்கைகளில் 99 அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன.
2013ஆம் ஆண்டு 1-4-2013 முதல் 15-5-2013 அன்று வரை முதலமைச்சர் ஜெயலலிதா 46 அறிக்கைகளைப் படித்திருக்கிறார். இந்த 46 அறிக்கைகளில் 189 அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன.
2014ஆம் ஆண்டு 14-7-2014 முதல் 12-8-2014 அன்று வரை முதலமைச்சர் 39 அறிக்கைகளைப் படித்திருக்கிறார். இந்த 39 அறிக்கைகளில் 235 அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன.
ஆக மொத்தம், 110வது விதியின் கீழ் கடந்த நான்காண்டுகளில் 165 அறிக்கைகளைப் படித்திருக்கிறார். ஒவ்வொரு அறிக்கையிலும் ஒன்றுக்கு மேற்பட்ட அறிவிப்புகளை செய்திருப்பதால், 165 அறிக்கைகளிலும், மொத்தம் 577 அறிவிப்புகளை முதலமைச்சர் ஜெயலலிதா செய்திருக்கிறார்.
இந்த 577 அறிவிப்புகளில் எத்தனை அறிவிப்புகளுக்கான திட்டங்கள் முடிந்து முழுமை பெற்றுள்ளன? எத்தனை திட்டங்கள் பாதியிலே நின்று கொண்டுள்ளன? எத்தனைத் திட்டங்கள் இன்னும் தொடங்கப்படாமலேயே உள்ளன? என்ன காரணத்தால்? என்பது பற்றிய விளக்கங்களை அ.தி.மு.க. அரசு மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்; அது அரசின் கடமையும்கூட. ஏனென்றால் சட்டமன்றத்தில் முதல்வராக இருந்த போது, ஓ.பன்னீர்செல்வம் 2013-2014ஆம் ஆண்டு விதி 110இன் கீழ் ஜெயலலிதா 235 திட்டங்களை அறிவித்ததாகவும், அதில் 116 திட்டங்களுக்கு அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார். நான் அப்போதே எஞ்சிய 120 திட்டங்களுக்கு அரசாணை ஏன் பிறப்பிக்கப்படவில்லை என்றே கேட்டிருந்தேன்.
முதல் அமைச்சர் 110வது விதியின் கீழ் படித்த அறிவிப்புகளுக்கான மொத்த மதிப்பீட்டுத் தொகை 84 ஆயிரத்து 374 கோடி ரூபாயாகும். இதில் செலவு செய்யப்பட்டதோ 12 ஆயிரத்து 733.60 கோடி ரூபாய்தான். 12.09 சதவிகிதம் தான். 110வது விதியின் கீழ் முதலமைச்சர் சொன்னதோ, கடல் அளவு; செய்ததோ, கை அளவுதான். இதுதான் 110வது விதியின் கீழ் படித்த அறிக்கைகளின் கதி. இதையெல்லாம் தமிழ் மக்கள் கேட்டுக் கொள்ள வேண்டும், அதுதான் அவர்களின் தலை விதி'' எனக் கூறியுள்ளார்.
கடந்த நான்காண்டு காலத்தில் எந்தத் துறை அமைச்சருக்கும் வாய்ப்பே கொடுக்காமல், முதலமைச்சர் ஒருவர் மட்டுமே தமிழகச் சட்டமன்றத்தில் 110வது விதியின் கீழ் அத்தனை அறிக்கைகளையும் படித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் கடந்த நான்காண்டு காலத்தில் ஜெயலலிதா 110வது விதியின் கீழ் படித்த அறிக்கைகளிலே கூறப்பட்ட திட்டங்கள் என்னவாயின? நிறைவேறி விட்டனவா? அல்லது ஏட்டளவிலேயே நின்று போய் விட்டனவா?
2011ஆம் ஆண்டு 8-6-2011 முதல் 13-9-2011 அன்று வரை முதலமைச்சர் ஜெயலலிதா 110வது விதியின் கீழ் 19 அறிக்கைகளைப் படித்தார். அந்த 19 அறிக்கைகளிலும் 54 அறிவிப்புகள் இருந்தன.
2012ஆம் ஆண்டு 29-3-2012 முதல் 2-11-2012 அன்று வரை முதலமைச்சர் ஜெயலலிதா 61 அறிக்கைகளைப் படித்தார். இந்த 61 அறிக்கைகளில் 99 அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன.
2013ஆம் ஆண்டு 1-4-2013 முதல் 15-5-2013 அன்று வரை முதலமைச்சர் ஜெயலலிதா 46 அறிக்கைகளைப் படித்திருக்கிறார். இந்த 46 அறிக்கைகளில் 189 அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன.
2014ஆம் ஆண்டு 14-7-2014 முதல் 12-8-2014 அன்று வரை முதலமைச்சர் 39 அறிக்கைகளைப் படித்திருக்கிறார். இந்த 39 அறிக்கைகளில் 235 அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன.
ஆக மொத்தம், 110வது விதியின் கீழ் கடந்த நான்காண்டுகளில் 165 அறிக்கைகளைப் படித்திருக்கிறார். ஒவ்வொரு அறிக்கையிலும் ஒன்றுக்கு மேற்பட்ட அறிவிப்புகளை செய்திருப்பதால், 165 அறிக்கைகளிலும், மொத்தம் 577 அறிவிப்புகளை முதலமைச்சர் ஜெயலலிதா செய்திருக்கிறார்.
இந்த 577 அறிவிப்புகளில் எத்தனை அறிவிப்புகளுக்கான திட்டங்கள் முடிந்து முழுமை பெற்றுள்ளன? எத்தனை திட்டங்கள் பாதியிலே நின்று கொண்டுள்ளன? எத்தனைத் திட்டங்கள் இன்னும் தொடங்கப்படாமலேயே உள்ளன? என்ன காரணத்தால்? என்பது பற்றிய விளக்கங்களை அ.தி.மு.க. அரசு மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்; அது அரசின் கடமையும்கூட. ஏனென்றால் சட்டமன்றத்தில் முதல்வராக இருந்த போது, ஓ.பன்னீர்செல்வம் 2013-2014ஆம் ஆண்டு விதி 110இன் கீழ் ஜெயலலிதா 235 திட்டங்களை அறிவித்ததாகவும், அதில் 116 திட்டங்களுக்கு அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார். நான் அப்போதே எஞ்சிய 120 திட்டங்களுக்கு அரசாணை ஏன் பிறப்பிக்கப்படவில்லை என்றே கேட்டிருந்தேன்.
முதல் அமைச்சர் 110வது விதியின் கீழ் படித்த அறிவிப்புகளுக்கான மொத்த மதிப்பீட்டுத் தொகை 84 ஆயிரத்து 374 கோடி ரூபாயாகும். இதில் செலவு செய்யப்பட்டதோ 12 ஆயிரத்து 733.60 கோடி ரூபாய்தான். 12.09 சதவிகிதம் தான். 110வது விதியின் கீழ் முதலமைச்சர் சொன்னதோ, கடல் அளவு; செய்ததோ, கை அளவுதான். இதுதான் 110வது விதியின் கீழ் படித்த அறிக்கைகளின் கதி. இதையெல்லாம் தமிழ் மக்கள் கேட்டுக் கொள்ள வேண்டும், அதுதான் அவர்களின் தலை விதி'' எனக் கூறியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தூக்கிவீசப்பட்ட ஜெயலலிதா, கருணாநிதி: நகராட்சி கூட்ட ரகளை
» ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு செய்வது மகிழ்ச்சியான செய்தி: கருணாநிதி
» ஜெயலலிதா விடுதலைக்காக நடத்தப்படும் பூஜைகளில் கலந்து கொள்வதா? கருணாநிதி எச்சரிக்கை
» ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு செய்வது மகிழ்ச்சியான செய்தி: கருணாநிதி
» ஜெயலலிதா விடுதலைக்காக நடத்தப்படும் பூஜைகளில் கலந்து கொள்வதா? கருணாநிதி எச்சரிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum