Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


புதைக்கப்பட்ட புலியை எழுந்திருக்கச் செய்ய முயற்சி: பீ. ஹெரிசன்

Go down

புதைக்கப்பட்ட புலியை எழுந்திருக்கச் செய்ய முயற்சி: பீ. ஹெரிசன் Empty புதைக்கப்பட்ட புலியை எழுந்திருக்கச் செய்ய முயற்சி: பீ. ஹெரிசன்

Post by oviya Sun Jun 21, 2015 2:02 pm

புலிகள் மீண்டும் எழுச்சி பெற்று விட்டனர் எனக் கூறி மகிந்த ராஜபக்சவை எழுந்திருக்க செய்ய திருடர்கள் முயற்சிப்பதாக அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.
தலாவ பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

சமூக இணையத்தளங்கள் மூலம் நாட்டில் மீண்டும் பயங்கரவாத்தை ஆரம்பிக்க முயற்சிக்கின்றனர்.

புதைக்கப்பட்ட புலியை எழுந்திருக்க செய்து நாட்டில் மீண்டும் பயங்கரவாதத்தை ஆரம்பிக்க இவர்கள் முயற்சித்து வருகின்றனர்.

விடுதலைப் புலிகள் மீண்டும் எழுச்சி பெற்று விட்டனர் என்று கூறி மகிந்த ராஜபக்ச ஆதரவு இணையத்தளங்கள் மக்களை அச்சுறுத்தி வருகின்றன.

இலங்கையில் மீண்டும் பயங்கரவாதம் எழுச்சி பெற இடமில்லை. நிலைமை இப்படி இருக்கும் போது மகிந்தவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர முயற்சிக்கும் நரிகள் கூட்டம், புலிகளுக்கு மீண்டும் உயிரூட்ட முயற்சித்து வருகிறது.

தலதா மாளிகை மீது குண்டு தாக்குதல் நடத்திய கருணாவுக்கு மகிந்த பால் ஊட்டினார். அது மாத்திரமல்லாமல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் பதவியையும் வழங்கினார்.

கே.பியை அரவணைத்து கொண்டு கே.பியின் கப்பல்கள், புலிகள் அமைப்பிடம் இருந்த தங்கம் என்பவற்றை மகிந்தவே கொள்ளையிட்டார்.

கொரக்கா புளியை வேட்டை இறைச்சியாகவும் வேட்டை இறைச்சியை கொரக்கா புளியாகவும் மாற்ற மகிந்த திறமைப்படைத்தவர்.

நாட்டுக்கு மக்களுக்கு நினைவிருக்குமோ தெரியவில்லை, ரத்துபஸ்வலயில் தண்ணீர் கேட்ட மக்களுக்கு தோட்டக்களை கொடுத்தனர்.

சுதந்திர வர்த்தக வலயத்தில் பணியாற்றும் இளைஞர், யுவதிகளின் உரிமைகளுக்கு பதிலாக தோட்டக்களினால் பதிலளித்தனர் எனவும் அமைச்சர் பீ. ஹெரிசன் குறிப்பிட்டுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum