Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


600 கோடி சொத்துக்களை துறந்து ஜைன மதத் துறவியாக மாறிய கோடீஸ்வரர்

Go down

600 கோடி சொத்துக்களை துறந்து ஜைன மதத் துறவியாக மாறிய கோடீஸ்வரர் Empty 600 கோடி சொத்துக்களை துறந்து ஜைன மதத் துறவியாக மாறிய கோடீஸ்வரர்

Post by oviya Wed Jun 03, 2015 3:40 pm

டெல்லியில் 600 கோடிக்கு அதிபதியான கோடீஸ்வரர் ஒருவர், தனது சொத்துக்கள் அனைத்தையும் துறந்து ஜைன மதத் துறவியாகியுள்ளார்.
டெல்லியில் உள்ள பிரபல பிளாஸ்டிக் வியாபாரியான பன்வர்லால் ரகுநாத் தோஷி. சுமார் ரூ.600 கோடிக்கு அதிபதியான இவருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.

தனது தந்தையிடம் ரூ.30 ஆயிரம் கடனாகப் பெற்று பிளாஸ்டிக் வர்த்தகத்தில் இறங்கிய இவர், போராட்டத்தை சந்தித்த போதிலும், அவரது வர்த்தக மதிப்பு உயர்ந்து ரூ.600 கோடியைத் தாண்டியுள்ளது.

ஜைன மத பிரச்சாரங்களால், 1982-ம் ஆண்டு முதன்முறையாக ஈர்க்கப்பட்ட அவர் ஜைன மதத் துறவியாக விரும்பினார்.

இதற்கு இவரது குடும்பத்தாரிடம் பலத்த எதிர்ப்பு இருந்த நிலையில், இவர் கடந்த ஆண்டு தனது குடும்பத்தை சமாதானப்படுத்தி துறவறத்துக்கு அனுமதி வாங்கியதுடன் அதனை ஒரு விழாவாக கொண்டாடியுள்ளார்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமையன்று `வர்சி தான்' எனும் ஜைன மத ஊர்வலம் நடைபெற்றது.

சுமார் 7 கி.மீ. தூரம் வரை நீண்ட இந்த ஊர்வலத்தில் ஆயிரம் ஜைன துறவிகள், 12 தேர்கள், 9 யானைகள், 9 ஒட்டக வண்டிகள் மற்றும் பாரம்பரிய இசைக் கலைஞர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை அன்று, இவர் ஜைன மதத் தலைவர் ஸ்ரீ குணரத்ன சுரீஷ்வர்ஜி மகராஜின் கீழ் சீடராக தன்னை இணைத்துக்கொண்டார்.

அகமதாபாத் கல்வி மைதானத்தில் நடந்த இந்த விழாவில், ஜைன மத அமைப்புகளுக்கு ரூ.25 கோடி மதிப்புள்ள‌ நன்கொடைகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியைக் காண சுமார் ஆயிரம் சாதுக்கள் தவிர, 1.5 லட்சம் மக்கள் கூடியுள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum