Top posting users this month
No user |
சென்னையில் பரவும் புதிய வகை கண் நோய்: மருத்துவர்கள் எச்சரிக்கை
Page 1 of 1
சென்னையில் பரவும் புதிய வகை கண் நோய்: மருத்துவர்கள் எச்சரிக்கை
சென்னையில் பருவநிலை மாற்றங்களால் புதிய வகை கண் நோய் பரவுவதாகவும் அதனால் மருத்துவமனையில் கூட்டம் நிரம்பி வழிவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னையில் இப்போது வைரஸ் பாதிப்பால் கண் நோய் பரவி வருகிறது. காற்றில் ஏற்படும் மாசு, சுற்றுசூழல் மாசு ஆகியவற்றால் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்படுகிறது.
இதனால் ஏற்படும் நோய் தொற்று விழி வெண்படலத்தை தாக்குகிறது. இதற்கு முறையாக சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் பார்வை இழப்பு ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இது குறித்து எழும்பூர் அரசு கண் மருத்துவமனையின் இயக்குனர் நமீதா புவனேஸ்வரி கூறுகையில், கண் நோய் பாதிப்பு சென்னையில் அதிகரித்து வருகிறது.
எழும்பூர் அரசு கண் மருத்துவமனைக்கு தினமும் 5 முதல் 10 பேர் கண் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வருகின்றனர்.
இந்த எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு, மே மாதத்தில் தொடங்கி யூன், யூலை மாதம் வரை இந்த நோயின் பாதிப்பு இருக்கும்.
சிவந்த கண்கள், கண் உறுத்தல், கண் இமையில் வீக்கம், கண்களில் எரிச்சல் ஏற்பட்டு நீர்வடிதல் போன்றவை கண் நோய்க்கான அறிகுறிகளாகும்.
நோய் அறிகுறிகள் தென்பட்டதும் உடனே கண் மருத்துவர்களை நாடவேண்டும்.
இது குறித்து நடந்த ஆய்வின் முடிவில் இந்த கண் நோய்க்கு ‘என்ட்ரோ’ எனப்படும் புதிய வகை வைரஸ் காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது என்றும் இது குறித்து மீண்டும் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த கண் நோய் பாதித்தவர்கள் தனியார் மருத்துவமனையிலும் அதிக அளவு சிகிச்சை பெற்று வரும் நிலையில், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் நோய் எதிர்ப்பு மருந்துகளை மட்டுமே எடுத்து கொள்ள வேண்டும் என எச்சரித்துள்ளனர்.
சென்னையில் இப்போது வைரஸ் பாதிப்பால் கண் நோய் பரவி வருகிறது. காற்றில் ஏற்படும் மாசு, சுற்றுசூழல் மாசு ஆகியவற்றால் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்படுகிறது.
இதனால் ஏற்படும் நோய் தொற்று விழி வெண்படலத்தை தாக்குகிறது. இதற்கு முறையாக சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் பார்வை இழப்பு ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இது குறித்து எழும்பூர் அரசு கண் மருத்துவமனையின் இயக்குனர் நமீதா புவனேஸ்வரி கூறுகையில், கண் நோய் பாதிப்பு சென்னையில் அதிகரித்து வருகிறது.
எழும்பூர் அரசு கண் மருத்துவமனைக்கு தினமும் 5 முதல் 10 பேர் கண் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வருகின்றனர்.
இந்த எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு, மே மாதத்தில் தொடங்கி யூன், யூலை மாதம் வரை இந்த நோயின் பாதிப்பு இருக்கும்.
சிவந்த கண்கள், கண் உறுத்தல், கண் இமையில் வீக்கம், கண்களில் எரிச்சல் ஏற்பட்டு நீர்வடிதல் போன்றவை கண் நோய்க்கான அறிகுறிகளாகும்.
நோய் அறிகுறிகள் தென்பட்டதும் உடனே கண் மருத்துவர்களை நாடவேண்டும்.
இது குறித்து நடந்த ஆய்வின் முடிவில் இந்த கண் நோய்க்கு ‘என்ட்ரோ’ எனப்படும் புதிய வகை வைரஸ் காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது என்றும் இது குறித்து மீண்டும் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த கண் நோய் பாதித்தவர்கள் தனியார் மருத்துவமனையிலும் அதிக அளவு சிகிச்சை பெற்று வரும் நிலையில், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் நோய் எதிர்ப்பு மருந்துகளை மட்டுமே எடுத்து கொள்ள வேண்டும் என எச்சரித்துள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum