Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


எறும்பு கடித்து பலியான 12 வயது சிறுவன்: அரசு மருத்துவமனையில் பரபரப்பு

Go down

எறும்பு கடித்து பலியான 12 வயது சிறுவன்: அரசு மருத்துவமனையில் பரபரப்பு Empty எறும்பு கடித்து பலியான 12 வயது சிறுவன்: அரசு மருத்துவமனையில் பரபரப்பு

Post by oviya Wed May 13, 2015 12:43 pm

சென்னையில் எறும்பு கடித்து சிகிசைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொடுங்கையூரை சேர்ந்த மணிகண்டன், அமுலு தம்பதியர் நடைபாதையில் வசித்து வருகின்றனர்.

இவர்களின் மகன் சுதாகரை (12) வளர்க்கவும், படிக்க வைக்கவும் வசதி இல்லாததால், ராயபுரத்தில் உள்ள தனியார் இல்லம் ஒன்றில் தங்க வைத்து தனியார் பள்ளியில் படிக்க வைத்துள்ளனர்.

5ம் வகுப்பு படித்து வந்த சுதாகர் கடந்த 10ம் திகதி குளித்துவிட்டு துண்டால் முகத்தை துடைத்தபோது, துண்டில் இருந்த கட்டெறும்பு சிறுவனின் கன்னம் மற்றும் கண்களில் கடித்துள்ளது.

சிறுவனுக்கு எறும்பு கடித்த இடங்களில் வீக்கம் ஏற்பட்டதால், இல்ல நிர்வாகிகள் உடனடியாக சிறுவனை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இந்நிலையில் சிறுவன் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு இறந்துள்ளார்.

பின்னர் மருத்துவமனைக்கு வந்த உறவினர்கள், எறும்பு கடித்து யாராவது உயிரிழப்பார்களா? என்று உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து பொலிசார் வந்த நடத்திய பேச்சு வார்த்தையை அடுத்து, உடலை வாங்கிச் சென்றுள்ளனர்.

மருத்துவர்கள் கூறுகையில், எறும்பு கடித்ததாகத்தான் சிறுவன் அனுமதிக்கப்பட்டான் ஆனால் சிறுவனின் உடலில் பல இடங்கள் வீங்கிவிட்டன.

சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.

மேலும், எறும்பு கடித்ததா அல்லது வேறு ஏதாவது பூச்சி கடித்ததா என்பதை அறிய சிறுவனின் உடலில் இருந்து தோல் மற்றும் சதைகளை பரிசோதனைக்கு அனுப்பி இருக்கிறோம் என்றும் அதன் முடிவு வந்தால்தான் எதுவும் சொல்ல முடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum