Top posting users this month
No user |
அம்பலமாகும் மகிந்த அரசு ஊழல்: நிதிக் குற்றவியல் விசாரணை பிரிவை மேம்படுத்த நடவடிக்கை
Page 1 of 1
அம்பலமாகும் மகிந்த அரசு ஊழல்: நிதிக் குற்றவியல் விசாரணை பிரிவை மேம்படுத்த நடவடிக்கை
நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவின் நடவடிக்கைகள் அனைத்தும் விரைவில் வலுப்படுத்தப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
மகிந்த அரசாங்கத்தில் உயர் பதவிகளை வகித்த அரசியல்வாதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் தொடர்பில் நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவிற்கு பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அவர்களுக்கு எதிராக இதுவரை சுமார் 169 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இம்முறைப்பாடுகளில் 31 பேருக்கு எதிரான முறைப்பாடுகள் தொடர்பிலான அறிக்கைகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு போதியளவு அதிகாரிகள் இல்லாத காரணத்தினால் மேலும் சில பொலிஸ் அதிகாரிகள் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மேலும் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினை மூடுவதற்கு சில தரப்பினர் முனைந்து வருகின்ற போதிலும், இத்தரப்பினால் நிதி குற்றவியல் விசாரணை பிரிவை மூடிவிட முடியாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதுமாத்திரமல்லாது கடந்த அரசாங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட ஊழல் மோசடிகள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவு, கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவு மற்றும் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு ஆகியனவற்றில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டு வருவதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மகிந்த அரசாங்கத்தில் உயர் பதவிகளை வகித்த அரசியல்வாதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் தொடர்பில் நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவிற்கு பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அவர்களுக்கு எதிராக இதுவரை சுமார் 169 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இம்முறைப்பாடுகளில் 31 பேருக்கு எதிரான முறைப்பாடுகள் தொடர்பிலான அறிக்கைகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு போதியளவு அதிகாரிகள் இல்லாத காரணத்தினால் மேலும் சில பொலிஸ் அதிகாரிகள் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மேலும் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினை மூடுவதற்கு சில தரப்பினர் முனைந்து வருகின்ற போதிலும், இத்தரப்பினால் நிதி குற்றவியல் விசாரணை பிரிவை மூடிவிட முடியாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதுமாத்திரமல்லாது கடந்த அரசாங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட ஊழல் மோசடிகள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவு, கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவு மற்றும் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு ஆகியனவற்றில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டு வருவதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum