Top posting users this month
No user |
Similar topics
சர்க்கரைவள்ளிக் கிழங்கு அடை
Page 1 of 1
சர்க்கரைவள்ளிக் கிழங்கு அடை
புழுங்கல் அரிசி - ஒரு டம்ளர்
சர்க்கரைவள்ளிக் கிழங்கு - கால் கிலோ
சன்ன ரவை - அரை கப்
மைதா மாவு - அரை கப்
வெல்லம் - கால் கிலோ
ஏலக்காய் - 3
நெய் - 100 கிராம்
தேங்காய் துருவல் - ஒரு கப்
தேவையான பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும். அரிசியை இரவே ஊற வைத்துவிடவும்.
ஊறிய அரிசியை மறுநாள் காலையில் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும். சர்க்கரைவள்ளிக் கிழங்கை நன்றாகக் கழுவி தோல் சீவி, சிறு துண்டுகளாக்கி அரிசியுடன் சேர்த்து சற்று கெட்டியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
வெல்லத்தைத் தூளாக்கி சிறிதளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து சூடேற்றி கரையவிடவும்.
அத்துடன் பொடித்த ஏலக்காய் மற்றும் தேங்காய்த் துருவல் சேர்க்கவும்.
அரைத்து வைத்துள்ள அரிசி கிழங்கு கலவையில் ரவை, மைதா மாவு ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்துக் கலக்கவும். இறுதியாக வெல்லக் கரைசலையும் ஊற்றி நன்கு கலந்து அடை மாவு பதத்திற்கு தயார் செய்து கொள்ளவும்.
தோசைக் கல்லை அடுப்பில் வைத்து கலந்து வைத்துள்ள மாவை எடுத்து சிறு அடைகளாக தட்டி, சுற்றிலும் நெய் விட்டு குறைந்த தணலில் வேகவிடவும்.
அடிப்பக்கம் வெந்தவுடன் திருப்பிப் போட்டு சிறிது நெய்விட்டு, மறுபக்கமும் வெந்ததும் எடுக்கவும். சுவையான நெய் மணக்கும் சர்க்கரைவள்ளிக் கிழங்கு அடை ரெடி. சூடாகப் பரிமாறவும்.
சர்க்கரைவள்ளிக் கிழங்கு - கால் கிலோ
சன்ன ரவை - அரை கப்
மைதா மாவு - அரை கப்
வெல்லம் - கால் கிலோ
ஏலக்காய் - 3
நெய் - 100 கிராம்
தேங்காய் துருவல் - ஒரு கப்
தேவையான பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும். அரிசியை இரவே ஊற வைத்துவிடவும்.
ஊறிய அரிசியை மறுநாள் காலையில் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும். சர்க்கரைவள்ளிக் கிழங்கை நன்றாகக் கழுவி தோல் சீவி, சிறு துண்டுகளாக்கி அரிசியுடன் சேர்த்து சற்று கெட்டியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
வெல்லத்தைத் தூளாக்கி சிறிதளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து சூடேற்றி கரையவிடவும்.
அத்துடன் பொடித்த ஏலக்காய் மற்றும் தேங்காய்த் துருவல் சேர்க்கவும்.
அரைத்து வைத்துள்ள அரிசி கிழங்கு கலவையில் ரவை, மைதா மாவு ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்துக் கலக்கவும். இறுதியாக வெல்லக் கரைசலையும் ஊற்றி நன்கு கலந்து அடை மாவு பதத்திற்கு தயார் செய்து கொள்ளவும்.
தோசைக் கல்லை அடுப்பில் வைத்து கலந்து வைத்துள்ள மாவை எடுத்து சிறு அடைகளாக தட்டி, சுற்றிலும் நெய் விட்டு குறைந்த தணலில் வேகவிடவும்.
அடிப்பக்கம் வெந்தவுடன் திருப்பிப் போட்டு சிறிது நெய்விட்டு, மறுபக்கமும் வெந்ததும் எடுக்கவும். சுவையான நெய் மணக்கும் சர்க்கரைவள்ளிக் கிழங்கு அடை ரெடி. சூடாகப் பரிமாறவும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சர்க்கரைவள்ளிக் கிழங்கு அடை
» சர்க்கரைவள்ளிக் கிழங்கு பொரியல்
» சர்க்கரைவள்ளிக் கிழங்கு ஜாமூன் – செய்வது எப்படி?
» சர்க்கரைவள்ளிக் கிழங்கு பொரியல்
» சர்க்கரைவள்ளிக் கிழங்கு ஜாமூன் – செய்வது எப்படி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum