Top posting users this month
No user |
Similar topics
நிவாரணம் என்ற பேரில் தட்டில் எஞ்சிய உணவுகளை பரிமாற வேண்டாம்: நேபாள அதிகாரிகள் சுளீர்
Page 1 of 1
நிவாரணம் என்ற பேரில் தட்டில் எஞ்சிய உணவுகளை பரிமாற வேண்டாம்: நேபாள அதிகாரிகள் சுளீர்
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்கிறோம் என்ற பெயரில் இந்தியா, பழைய துணிமணைகளை அனுப்பவேண்டாம் என்று நேபாள அதிகாரிகள் கேட்டு கொண்டுள்ளனர்.
நேபாளத்தில் கடந்த ஏப்ரல் 25ம் திகதி, 7.9 என்ற ரிக்டர் அளவுக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 7000 மக்கள் உயிரிழந்த நிலையில், பல்லாயிரம் மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.
இதையடுத்து இந்திய அரசாங்கம் தான் முதலில் நேபாளத்தில் பெரிய அளவில் நிவாரண பணிகளை மேற்கொள்ள தொடங்கியது.
இந்த நிலநடுக்கத்தால் சுமார் 90 லட்சம் மக்கள் பாதிப்படைந்துள்ள நிலையில், இந்திய அரசு மட்டுமல்லாமல், அமைப்பு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் பெருநிறுவனங்கள் முதலியன நிவாரண உதவிகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், சமீபத்தில் இந்திய-நேபாள எல்லையில் அமைந்துள்ள Raxaul நகரில் இருந்து ரயில் மூலம் நேபாளத்தின் Birgunj நகருக்கு, இந்தியாவில் இருந்து உடைகள் மற்றும் நிவாரணப் பொருட்கள் அனுப்ப பட்டுள்ளன.
இந்திய அதிகாரிகளில் ஒருவர் இதுபற்றி கூறுகையில், இந்தியா அனுப்பிய நிவாரண பொருட்கள் நேபாளம் வந்து சேர்ந்த முதல் நாளிலேயே, அவற்றில் பழைய துணிகள் வந்திருந்ததை கண்ட நேபாள அதிகாரிகள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்ததாக தெரிவித்துள்ளனர்.
அந்த உடைகளில், ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பழைய உடைகள் இருந்ததை கண்ட நேபாள அதிகாரிகள் அதனை நிராகரித்ததோடு, ”தட்டில் எஞ்சிய உணவுகளை அவர்களுக்கு பரிமாறப்பட கூடாது” என்று தங்கள் கோபத்தினை வெளிபடுத்தியுள்ளனர்.
இந்திய தூதரகத்தை சேர்ந்த அஞ்சு ரஞ்சன் கூறுகையில், இதுபற்றிய தகவலை நான் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தெரிவித்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.
இந்தியாவின் பல மாநில அரசாங்கத்திடம் இருந்தும், பல ஏஜன்சிகளிடம் இருந்தும் வரும் நிவாரண பொருட்கள் அனைத்தும் டெல்லியில் உள்ள உள்துறை அமைச்சகத்தில் இருந்து தான் நேபாளத்துக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
கடந்த மே 2ம் திகதி முதல் தொடங்கப்பட்ட ரயில் பாதை மூலமான நிவாரண பொருட்கள் அனுப்பும் சேவை மூலம், இதுவரை 171 டன் அளவிலான பொருட்கள் சென்றடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நேபாளத்தில் கடந்த மே 4ம் திகதி, சென்றடைந்த நிவாரண பொருட்கள் அடங்கிய லோடு ஒன்றில், புத்தம் புதிய துண்டுகள் அனுப்பட்டதை பார்த்த நேபாள அதிகாரிகள், மகிழ்ச்சியுடன் அதனை ஏற்று கொண்டதாக, அங்கு மேற்பார்வையில் ஈடுபட்டுள்ள இந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் கடந்த ஏப்ரல் 25ம் திகதி, 7.9 என்ற ரிக்டர் அளவுக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 7000 மக்கள் உயிரிழந்த நிலையில், பல்லாயிரம் மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.
இதையடுத்து இந்திய அரசாங்கம் தான் முதலில் நேபாளத்தில் பெரிய அளவில் நிவாரண பணிகளை மேற்கொள்ள தொடங்கியது.
இந்த நிலநடுக்கத்தால் சுமார் 90 லட்சம் மக்கள் பாதிப்படைந்துள்ள நிலையில், இந்திய அரசு மட்டுமல்லாமல், அமைப்பு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் பெருநிறுவனங்கள் முதலியன நிவாரண உதவிகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், சமீபத்தில் இந்திய-நேபாள எல்லையில் அமைந்துள்ள Raxaul நகரில் இருந்து ரயில் மூலம் நேபாளத்தின் Birgunj நகருக்கு, இந்தியாவில் இருந்து உடைகள் மற்றும் நிவாரணப் பொருட்கள் அனுப்ப பட்டுள்ளன.
இந்திய அதிகாரிகளில் ஒருவர் இதுபற்றி கூறுகையில், இந்தியா அனுப்பிய நிவாரண பொருட்கள் நேபாளம் வந்து சேர்ந்த முதல் நாளிலேயே, அவற்றில் பழைய துணிகள் வந்திருந்ததை கண்ட நேபாள அதிகாரிகள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்ததாக தெரிவித்துள்ளனர்.
அந்த உடைகளில், ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பழைய உடைகள் இருந்ததை கண்ட நேபாள அதிகாரிகள் அதனை நிராகரித்ததோடு, ”தட்டில் எஞ்சிய உணவுகளை அவர்களுக்கு பரிமாறப்பட கூடாது” என்று தங்கள் கோபத்தினை வெளிபடுத்தியுள்ளனர்.
இந்திய தூதரகத்தை சேர்ந்த அஞ்சு ரஞ்சன் கூறுகையில், இதுபற்றிய தகவலை நான் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தெரிவித்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.
இந்தியாவின் பல மாநில அரசாங்கத்திடம் இருந்தும், பல ஏஜன்சிகளிடம் இருந்தும் வரும் நிவாரண பொருட்கள் அனைத்தும் டெல்லியில் உள்ள உள்துறை அமைச்சகத்தில் இருந்து தான் நேபாளத்துக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
கடந்த மே 2ம் திகதி முதல் தொடங்கப்பட்ட ரயில் பாதை மூலமான நிவாரண பொருட்கள் அனுப்பும் சேவை மூலம், இதுவரை 171 டன் அளவிலான பொருட்கள் சென்றடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நேபாளத்தில் கடந்த மே 4ம் திகதி, சென்றடைந்த நிவாரண பொருட்கள் அடங்கிய லோடு ஒன்றில், புத்தம் புதிய துண்டுகள் அனுப்பட்டதை பார்த்த நேபாள அதிகாரிகள், மகிழ்ச்சியுடன் அதனை ஏற்று கொண்டதாக, அங்கு மேற்பார்வையில் ஈடுபட்டுள்ள இந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தயாசிறி வேண்டாம், வேண்டும் என்ற ஆர்ப்பாட்டத்தில் மோதல்
» நட்சத்திர ஓட்டல் உணவுகளை நம் வீட்டிலேயே செய்யலாம்.
» நேபாள நிலநடுக்கத்தில் சிக்கிய நடிகர் பரிதாப மரணம்
» நட்சத்திர ஓட்டல் உணவுகளை நம் வீட்டிலேயே செய்யலாம்.
» நேபாள நிலநடுக்கத்தில் சிக்கிய நடிகர் பரிதாப மரணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum