Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இயக்குனர் கொலை வழக்கில் நடிகை சங்கீதாவுக்கு ஆயுள் தண்டனை

Go down

இயக்குனர் கொலை வழக்கில் நடிகை சங்கீதாவுக்கு ஆயுள் தண்டனை Empty இயக்குனர் கொலை வழக்கில் நடிகை சங்கீதாவுக்கு ஆயுள் தண்டனை

Post by oviya Sat Apr 25, 2015 3:11 pm

நடிகை சங்கீதாவுக்கு திரைப்பட இயக்குனர் கொலை வழக்கில், சென்னை செஷன்ஸ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
அம்பத்தூர் சூரப்பட்டைச் சேர்ந்த செல்வா (45) என்பவர், டி.ராஜேந்தரிடம் உதவி இயக்குனராக இருந்துள்ளார்.

வடபழனி 100 அடி சாலையில் ஒரு கட்டிடத்தின் மாடியை வாடகைக்கு எடுத்து சினிமா கம்பெனி நடத்தி வந்த இவர், அதே இடத்தில் 2007 மார்ச் 6ம் திகதி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

அவரது உடலில் காயம் எதுவும் இல்லாததோடு, வலது கண் அருகே, லேசான ரத்தக் கட்டு மட்டும் இருந்துள்ளது.

இதையடுத்து நடந்த பொலிஸ் விசாரணையில், கடந்த 6 மாதங்களாக, செல்வாவுடன் சங்கீதா என்ற நடிகை தங்கியிருந்தது தெரியவந்துள்ளது.

செங்குன்றத்தில் இருந்த சங்கீதாவை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.

சங்கீதாவிடம் பொலிசார் நடத்திய விசாரணையில், அவரே செல்வாவை கொலை செய்தது தெரியவந்துள்ளது.

செல்வாவிடம் சினிமா வாய்ப்பு கேட்டு வந்த சங்கீதா, ஒரு கட்டத்தில் அவரது அறையில் சேர்ந்து தங்கியுள்ளார்.

செல்வா அறைக்கு அடுத்த அறையில், காந்திராஜன் என்பவர் தங்கியுள்ளார். மூன்று பேரும் ஒன்றாக அமர்த்து குடித்த பின்னர் காந்திராஜன் அவரது அறைக்கு கிளம்பியுள்ளார்.

பின்னர் இரவு 1 மணியளவில் திடீரென எழுந்த செல்வா சங்கீதாவை உல்லாசமாக இருக்க அழைத்துள்ளார்.

இதற்கு சங்கீதா மறுத்ததால், செல்வா தகாத வார்த்தைகளால் பேசியதோடு, போதையில் சங்கீதாவை அடித்து உதைத்துள்ளார்.

இதனால் கோபமடைந்த சங்கீதா, பக்கத்தில் கிடந்த உருட்டுக்கட்டையால், செல்வாவின் தலையில் அடித்துள்ளார்.

மேலும், செல்வா நிலை தடுமாறி விழுந்ததும் அவரது கழுத்தை, ஜன்னல் திரைச்சீலையால் நெரித்த போது அவர் மயங்கியுள்ளார்.

இதனால் பயந்துபோன சங்கீதா, வெளியே வந்து அறையை வெளிப்பக்கமாக தாழ்போட்டுள்ளார்.

காலை செல்வா இறந்தது உறுதியானதும் செங்குன்றத்தில் உள்ள தனது வீட்டுக்கு சென்றுள்ளார்.

இதையடுத்து அவரை வடபழனி பொலிசார் கைது செய்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு 15வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், இவ்வழக்கில் ஜாமீன் பெற்ற சங்கீதா 7 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்துள்ளார்.

பின்னர் நீதிமன்றம் பிறப்பித்த பிடிவாரன்ட் அடிப்படையில் அவரை பொலிசார் 2014 டிசம்பரில் மீண்டும் கைது செய்தனர்.

இதையடுத்து அவர் மீதான வழக்கை 2 மாதங்களில் முடிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி சந்திரசேகர் அளித்த தீர்ப்பில், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் சங்கீதாவுக்கு ஆயுள் தண்டனையும், ரூபாய் 5000 அபராதமும் விதித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum