Top posting users this month
No user |
கோகோ கோலா ஆலை அனுமதி அதிரடி ரத்து: விவசாயிகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி!
Page 1 of 1
கோகோ கோலா ஆலை அனுமதி அதிரடி ரத்து: விவசாயிகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி!
ஈரோடு மாவட்டத்தில் கோகோ கோலா நிறுவனம் தொழிற்சாலை அமைக்க வழங்கிய அனுமதியை தமிழக அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், சுமார் 71.3 ஏக்கர் நிலம் கோகோ கோலா நிறுவனத்துக்கு தமிழக அரசு இடம் ஒதுக்கியிருந்தது.
அங்கு ரூ.500 கோடி செலவில் ஆலையை நிறுவ அந்த நிறுவனம் திட்டமிட்டிருந்தது.
ஆனால் அந்த இடத்தில் தொழிற்சாலை அமைத்தால் ஏராளமான நிலத்தடி நீரை அந்நிறுவனம் உறிஞ்சும் என அப்பகுதி மக்களும், விவசாயிகளும் சில அரசியல்கட்சியினரும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தியுள்ளனர்.
கடந்த மார்ச் மாதத்தில் இதற்கு விளக்கம் அளித்த நிறுவனத்தினர், ஆலைக்குத் தேவையான தண்ணீரை தமிழக தொழில்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, தங்களுக்கு நிலத்தை ஒதுக்கிய சிப்காட் நிறுவனத்தின் மூலமாகப் பெற்றுக் கொள்வோம் என்று தெரிவித்திருந்தனர்.
இதற்கிடையே, தமிழக சட்டப்பேரவையிலும் சமீபத்தில் இந்த பிரச்னை எழுப்பப்பட்டது.
சிப்காட் சார்பில் நேற்று அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸில், தங்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டும் இதுவரை பணிகளைத் தொடங்கவில்லை.
உங்களுக்கு அளிக்கப்பட்ட நிலத்தை ஏன் நாங்கள் திரும்பப் பெறக்கூடாது? என்று கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து கோகோ கோலா நிறுவனம் தொழிற்சாலை அமைக்க வழங்கிய அனுமதியை தமிழக அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு, கோகோ கோலா நிறுவனத்துக்கான நில ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது என்ற அறிப்பை வெளியிட்டுள்ளதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்கிறது என்று அதன் பொதுச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், சுமார் 71.3 ஏக்கர் நிலம் கோகோ கோலா நிறுவனத்துக்கு தமிழக அரசு இடம் ஒதுக்கியிருந்தது.
அங்கு ரூ.500 கோடி செலவில் ஆலையை நிறுவ அந்த நிறுவனம் திட்டமிட்டிருந்தது.
ஆனால் அந்த இடத்தில் தொழிற்சாலை அமைத்தால் ஏராளமான நிலத்தடி நீரை அந்நிறுவனம் உறிஞ்சும் என அப்பகுதி மக்களும், விவசாயிகளும் சில அரசியல்கட்சியினரும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தியுள்ளனர்.
கடந்த மார்ச் மாதத்தில் இதற்கு விளக்கம் அளித்த நிறுவனத்தினர், ஆலைக்குத் தேவையான தண்ணீரை தமிழக தொழில்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, தங்களுக்கு நிலத்தை ஒதுக்கிய சிப்காட் நிறுவனத்தின் மூலமாகப் பெற்றுக் கொள்வோம் என்று தெரிவித்திருந்தனர்.
இதற்கிடையே, தமிழக சட்டப்பேரவையிலும் சமீபத்தில் இந்த பிரச்னை எழுப்பப்பட்டது.
சிப்காட் சார்பில் நேற்று அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸில், தங்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டும் இதுவரை பணிகளைத் தொடங்கவில்லை.
உங்களுக்கு அளிக்கப்பட்ட நிலத்தை ஏன் நாங்கள் திரும்பப் பெறக்கூடாது? என்று கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து கோகோ கோலா நிறுவனம் தொழிற்சாலை அமைக்க வழங்கிய அனுமதியை தமிழக அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு, கோகோ கோலா நிறுவனத்துக்கான நில ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது என்ற அறிப்பை வெளியிட்டுள்ளதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்கிறது என்று அதன் பொதுச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum