Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஜெயலலிதா மற்றும் பன்னீர்செல்வம் படங்களுக்கு திதி கொடுத்த கன்னட அமைப்பினர்: நூதன போராட்டம்

Go down

ஜெயலலிதா மற்றும் பன்னீர்செல்வம் படங்களுக்கு திதி கொடுத்த கன்னட அமைப்பினர்: நூதன போராட்டம் Empty ஜெயலலிதா மற்றும் பன்னீர்செல்வம் படங்களுக்கு திதி கொடுத்த கன்னட அமைப்பினர்: நூதன போராட்டம்

Post by oviya Sat Apr 18, 2015 2:34 pm

மேகேதாது பகுதியில் காவிரிக்கு குறுக்கே அணை கட்டுவதை தமிழக அரசு எதிர்ப்பதை கண்டிக்கும் விதமாக கன்னட அமைப்பினர் ஜெயலலிதா மற்றும் முதல்வர் பன்னீர்செல்வம் படங்களை வைத்து திதி கொடுத்துள்ளனர்.
கர்நாடகாவில் மேகதாது பகுதியில் காவிரிக்கு குறுக்கே அணை கட்டுவதை தமிழக அரசு எதிர்ப்பதை கண்டித்து கன்னட அமைப்பினர் இன்று பந்த் அறிவித்துள்ளனர்.

காவிரிக்கு குறுக்கே மேகதாது என்றபகுதியில் கர்நாடக அணை கட்ட திட்டமிட்டுள்ளதோடு இதற்காக நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில் ரூ.25 கோடி ஒதுக்கியுள்ளது.

இதனால், தமிழகத்துக்கு செல்லும் காவிரி நீர் தடுக்கப்படும் அபாயம் இருப்பதால் தமிழகத்தில் அனைத்து கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்கள் சார்பில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற்றது.

இந்நிலையில் தமிழகத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சுமார் 500 கன்னட அமைப்புகள் பந்த் நடத்துகின்றனர்.

இன்று காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த பந்த் மாலை 6 மணி வரை நடக்கும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த 12 மணி நேர பந்த் அறிவிப்பு காரணமாக போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த பந்த்தால் தென் கர்நாடகாவில், குறிப்பாக, பெங்களூரு, மைசூரு மண்டலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் இணைப்பு:

பெங்களூரு டவுன்ஹால் பகுதியில், சத்தியநாராயணா என்பவர் தலைமையில் ஒன்று கூடிய பல்வேறு கன்னட அமைப்புகள் நூதன முறையில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

அவர்கள் அமாவாசை தினமான இன்று ஜெயலலிதா மற்றும் பன்னீர்செல்வம் படங்களை வைத்து வாழைப்பழம், ஊதுபத்தி, தேங்காய் ஆகியவற்றை வைத்து, பிண்டம் கொடுத்து, ஜெயலலிதா மற்றும், பன்னீர்செல்வம் உருவ படங்களுக்கு திதி கொடுத்துள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum