Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


19ற்கு ஸ்ரீ.சு.கவின் ஒத்துழைப்பை பெற்று தருவதாக ஜனாதிபதி பிரதமரிடம் உறுதி: அதை காலால் இழுக்கும் சட்டமா அதிபர்

Go down

19ற்கு ஸ்ரீ.சு.கவின் ஒத்துழைப்பை பெற்று தருவதாக ஜனாதிபதி பிரதமரிடம் உறுதி: அதை காலால் இழுக்கும் சட்டமா அதிபர் Empty 19ற்கு ஸ்ரீ.சு.கவின் ஒத்துழைப்பை பெற்று தருவதாக ஜனாதிபதி பிரதமரிடம் உறுதி: அதை காலால் இழுக்கும் சட்டமா அதிபர்

Post by oviya Thu Apr 16, 2015 2:36 pm

பாராளுமன்றத்தில் எதிர்வரும் 20ம் திகதி சமர்பிக்கப்படவுள்ள 19வது அரசியலமைப்பு திருத்த சட்டத்தை நிறைவேற்ற 3இல் 2 பெரும்பான்மையை பெற்றுக்கொள்வதற்காக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஒத்துழைப்பு கிடைக்கும் என ஜனாதிபதி பிரதமரிடம் தெரிவித்துள்ளார்.
சிங்கள இணையத்தளமொன்று இது தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தற்போது தேசிய அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்ட பங்காளி கட்சியாகும்.

அத்துடன் தேர்தல் முறைமையை மாற்றும் 20வது அரசியலமைப்பு ஸ்ரீ.சு.கட்சியினால் தயாரிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தொகுதிவாரி முறைமையின் ஊடாக 165 ஆசனங்களும், விகிதாசார முறைமையின்படி 60 ஆசனங்களும், தேசிய பட்டியலில் 25 ஆசனங்களும் என மொத்தமாக 250 ஆசனங்கள் பெறும் புதிய தேர்தல் முறைமையை அறிமுகப்படுத்தும் நோக்கில் 20வது அரசியலமைப்பு 19வது அரசியலமைப்பு சமர்பிக்கப்படும் போது சமர்பிக்கப்படும் என அமைச்சர் எஸ்.பீ திஸாநாயக்க தெரிவித்திருந்தார்.

மார்க்கோ கொள்கை

எவ்வாறாயினும் புதிய தேர்தல் முறை தொடர்பாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் கடந்த கட்சி தலைவர்கள் கூட்டத்தின் போது பூரண அறிக்கையொன்றை முன்வைத்திருந்தார்.

ஜாதிக ஹெல உறுமயவின் அத்துரலிய ரத்தின தேரர், லிபரல் கட்சியின் ரஜீவ விஜேசிங்க, ஆகியோர் அவ் அறிக்கைக்கு எதிர்ப்பை வெளியிட்டனர்.

கூட்டத்தின் இறுதியில் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்கட்சி தலைவர் ஆகியோர் இணைந்து தீர்மானமொன்றை மேற்கொள்வார்கள் என தெரிவித்தார்.

சிறுபான்மை கட்சி தலைவர்களை அடிப்படையாக கொள்ளாமல், பிரயோஜனமில்லாத, தன்மையற்ற யோசனைகளை கொண்டு வருதலானது தீர்மானங்களை மேற்கொள்ளும் போது பிரச்சினைகளை ஏற்படுத்தும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

ஒரு நாட்டில் வெகு விரைவாக தேர்தல் முறைமையில் மாற்றத்தை கொண்டு வர முடியாதென்பதே தேர்தல்கள் ஆணையாளரின் கருத்தாக காணப்படுகின்றது.

ஜனநாயக நாட்டில் புதிய தேர்தல் முறைமையொன்றை மக்களுக்கு அறிமுகப்படுத்தல் குறைந்த பட்சம் ஒரு வருட காலப்பகுதியாவது தேவை என தெரிவித்த தேர்தல்கள் ஆணையாளர், தனது திணைக்கள அதிகாரிகளுக்கு கூட தேர்தல் முறைமை குறித்து தெளிவுபடுத்துவதற்கு 6 மாத கால அவகாசம் தேவைப்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் இனவெறி போக்கிற்கு மக்கள் எதிர்ப்பு

இதற்கமைய 19வது அரசியலமைப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றம் முன்வைத்துள்ள கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்காத சில அரசியலமைப்புக்களை செயற்குழு கூட்டத்தின் போது கொண்டு வருவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்கம் கொண்டுவரவுள்ள உத்தேச திருத்தங்களுக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களம் காலால் இழுக்கும் நிலைமை காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போதைய சட்டமா அதிபர் யுவன்ஜன வனசுந்தர விஜயதிலக அரசியலமைப்பு தொடர்பில் எவ்வித புரிந்துணர்வும் இல்லாத நபர்.

அவர் சிவில் சட்டம் தொடர்பிலேயே அறிந்து வைத்துள்ளார்.

அப்படியெனில் அவருக்கு அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்திலுள்ள வேறு அதிகாரிகளை சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதுடன், அதற்காக பிரதி சொலிஸிடர் ஜெனரல் இந்திக்கா தேமுனி மற்றும் மெரின்புள்ளே ஆகியோரை தெரிவு செய்துள்ளார்.

இவர்கள் இருவருமே இனவாதிகள். யுவன்ஜன வெளிநாட்டு பெண்ணொருவரை திருமணம் முடித்துள்ளதினால் அதை மூடிமறைப்பதற்காக தான் ஒரு இனப்பற்றாளர் என்பதை வெளிக்காட்டும் நோக்கில் சென்று தானாகவே இனவாதி கும்பலுக்குள் விழுந்து விட்டார்.

இந்நிலையில் 19வது அரசியலமைப்பு திருத்தங்களை கொண்டு வரும் நோக்கில் முன்வைக்கப்பட்ட சட்டதிருத்தங்கள் தொடர்பில் உச்சநீதிமன்ற கொள்கைக்கு அப்பால் சென்று இனவாத பரிந்துரைகளை முன்வைத்து மக்கள் எதிர்பார்த்த வண்ணம் ஒரு நபரை மையப்படுத்தும் நிறைவேற்று அதிகாரத்தை பாராளுமன்றத்திற்கும், ஆணைக்குழுவிற்கும் வழங்கும் நடவடிக்கையின் போது காலால் இழுக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum