Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


400 அடி ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு

Go down

400 அடி ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு Empty 400 அடி ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு

Post by oviya Sun Apr 12, 2015 3:44 pm

ஆற்காடு அருகே 400 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 ½ வயது குழந்தை, பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டும், சிகிச்சை பலனளிக்காமல் மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்துள்ளது.

ஆற்காடு அடுத்த சாம்பவ சிவபுரம் பகுதியை சேர்ந்த குட்டி என்பவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

இவரது மனைவி கீதா, இவர்களது மகன் தமிழரசன் (வயது 2½) ஆற்காடில் வசித்து வருகின்றனர்.

கூராம்பாடி பகுதியில் உள்ள தமிழரசனின் தாத்தா கனகசபை வீட்டிற்கு, கீதா சென்றுள்ளார்.

இன்று காலை 8.30 மணிளவில் வீட்டு முன்பு தமிழரசன் விளையாடி கொண்டிருந்த போது அங்குள்ள விளை நிலங்களுக்கு முன்பு மூடப்படாமல் வைத்திருந்த ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்து விட்டான்.

விளையாடி கொண்டிருந்த குழந்தையை காணவில்லை என்று தாய் கீதா மற்றும் பாட்டி தேடியபோது, அங்குள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து குழந்தையின் அழுகுரலை கேட்டுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த குழந்தையின் தாய் மற்றும் பாட்டி கதறி அழுததால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு திரண்டனர்.

இதுகுறித்து ஆற்காடு தீயணைப்பு துறையினர் மற்றும் பொலிசாருக்கு தகவல் தெரிவித்ததால் அவர்கள் விரைந்து சென்று குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மீட்பு பணியில், 400 அடி ஆழ்துளை கிணற்றில் குழந்தை 40 அடி ஆழத்தில் சிக்கியுள்ளது தெரியவந்துள்ளது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு ஜேசிபி எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு அருகில் குழி தோண்டப்பட்டு வருகிறது.

மூச்சு திணறல் ஏற்பாடாமல் இருக்க குழந்தைக்கு ஆக்சிஜன் செலுத்த ஏற்பாடு செய்துள்ளனர். மருத்துவ குழுவினரும் ஆம்புலன்ஸ் வாகனமும் தயார் நிலையில் உள்ளது.

மேலும், இந்த சம்பவத்தினால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இரண்டாம் இணைப்பு

ஆற்காடு தீயணைப்பு துறையினர் மற்றும் பொலிசார் குழந்தையை பல மணி நேர போராட்டத்திற்கு மீட்ட‌னர்.

மீட்கப்பட்ட குழந்தையை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் குழந்தை உயிரிழந்தது. மூச்சு திணறல் காரணமாக குழந்தை உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ள‌னர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum