Top posting users this month
No user |
Similar topics
இன்று இந்தியாவில் முழு சந்திர கிரகணம்: பொதுமக்கள் பார்க்க ஏற்பாடு
Page 1 of 1
இன்று இந்தியாவில் முழு சந்திர கிரகணம்: பொதுமக்கள் பார்க்க ஏற்பாடு
இந்தியாவில் இன்று(ஏப்ரல் 4ம் திகதி) முழுச் சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
சந்திர கிரகணம் இன்று மதியம் 3.45 மணி முதல் தொடங்கி இரவு 7.15 வரை நிகழ்கிறது.
இந்திய நேரப்படி சந்திர கிரகணம் மதியம் 3.15 மணிக்கே ஏற்பட்டாலும், சென்னைவாசிகள் மாலை 6.30 மணிக்கு மேலே தான் காண முடியும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னையில் மாலை 6.30 மணி அளவிலேயே சந்திரன் தோன்ற ஆரம்பிக்கும் என்றும், அவ்வாறு தோன்றும் போது பகுதி கிரகணம் (partially eclipsed moon) ஏற்பட்ட சந்திரனாக தோற்றமளிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த பகுதி கிரகணம் மாலை 7.15 மணிவரை தொடரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அறிவியல் மையத்தில், மாலை 6.30 மணிமுதல் 7.30 மணிவரையில் 4 தொலைநோக்கிகள் மூலம் பொதுமக்கள் பகுதி சந்திர கிரகணத்தை காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளில் தான் முழு சந்திர கிரகணம் தெரியும் என்றும் அங்கு தான் பூமியின் நிழலில் சந்திரன் முற்றிலுமாக மறைந்து காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரகணம் பிடித்திருக்கும் காலத்தில் உணவு உண்பது கூடாது, கிரகணம் ஏற்படும் நாளில் தாய், தந்தை மற்றும் மூதாதையருக்கு திதி கொடுக்க கூடாது, மறுநாளே இதை செய்ய வேண்டும். கர்ப்பிணி பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் சாஸ்திரம் கூறுகிறது.
இதனை யொட்டி, நாடு முழுவதிலும் உள்ள அனைத்து கோயில்களும் மூடப் படுகின்றன.
திருப்பதி ஏழுமலையான் கோயில், 6 மணி நேரம் முன்னதாகவே, அதாவது காலை 9 மணி முதலே மூடப்படுகிறது.
பின்னர் இரவு 8.30 மணிக்கு மேல் கோயில் நடை திறக்கப்பட்டு, நடை சுத்தம் செய்யப்பட்ட பின்னர் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
ஆனால், பஞ்ச பூத தலங்களில் வாயு தலமாக விளங்கும் காளஹஸ்தி சிவன் கோயில் மட்டும், நவக்கிரக கவசம் உள்ளதால், கிரகண கால அபிஷேகம் நடைபெற உள்ளது.
இதனால் இக்கோயில் சூரிய, சந்திர கிரகணங்களின் போது நடை சாத்தப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சந்திர கிரகணம் இன்று மதியம் 3.45 மணி முதல் தொடங்கி இரவு 7.15 வரை நிகழ்கிறது.
இந்திய நேரப்படி சந்திர கிரகணம் மதியம் 3.15 மணிக்கே ஏற்பட்டாலும், சென்னைவாசிகள் மாலை 6.30 மணிக்கு மேலே தான் காண முடியும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னையில் மாலை 6.30 மணி அளவிலேயே சந்திரன் தோன்ற ஆரம்பிக்கும் என்றும், அவ்வாறு தோன்றும் போது பகுதி கிரகணம் (partially eclipsed moon) ஏற்பட்ட சந்திரனாக தோற்றமளிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த பகுதி கிரகணம் மாலை 7.15 மணிவரை தொடரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அறிவியல் மையத்தில், மாலை 6.30 மணிமுதல் 7.30 மணிவரையில் 4 தொலைநோக்கிகள் மூலம் பொதுமக்கள் பகுதி சந்திர கிரகணத்தை காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளில் தான் முழு சந்திர கிரகணம் தெரியும் என்றும் அங்கு தான் பூமியின் நிழலில் சந்திரன் முற்றிலுமாக மறைந்து காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரகணம் பிடித்திருக்கும் காலத்தில் உணவு உண்பது கூடாது, கிரகணம் ஏற்படும் நாளில் தாய், தந்தை மற்றும் மூதாதையருக்கு திதி கொடுக்க கூடாது, மறுநாளே இதை செய்ய வேண்டும். கர்ப்பிணி பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் சாஸ்திரம் கூறுகிறது.
இதனை யொட்டி, நாடு முழுவதிலும் உள்ள அனைத்து கோயில்களும் மூடப் படுகின்றன.
திருப்பதி ஏழுமலையான் கோயில், 6 மணி நேரம் முன்னதாகவே, அதாவது காலை 9 மணி முதலே மூடப்படுகிறது.
பின்னர் இரவு 8.30 மணிக்கு மேல் கோயில் நடை திறக்கப்பட்டு, நடை சுத்தம் செய்யப்பட்ட பின்னர் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
ஆனால், பஞ்ச பூத தலங்களில் வாயு தலமாக விளங்கும் காளஹஸ்தி சிவன் கோயில் மட்டும், நவக்கிரக கவசம் உள்ளதால், கிரகண கால அபிஷேகம் நடைபெற உள்ளது.
இதனால் இக்கோயில் சூரிய, சந்திர கிரகணங்களின் போது நடை சாத்தப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வட, கிழக்கை மாத்திரமின்றி முழு நாட்டையும், இந்தியா பார்க்க வேண்டும்: சம்பிக்க ரணவக்க
» சந்திர கலா
» சூரிய-சந்திர புஷ்கரணிகள்
» சந்திர கலா
» சூரிய-சந்திர புஷ்கரணிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum