Top posting users this month
No user |
Similar topics
நுனி நாக்கில் ஆங்கிலம்…பிரியாணி விருந்து: அம்பலமான கல்யாண மன்னனின் வாழ்க்கை
Page 1 of 1
நுனி நாக்கில் ஆங்கிலம்…பிரியாணி விருந்து: அம்பலமான கல்யாண மன்னனின் வாழ்க்கை
தமிழகத்தில் நான்கு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த பொறியாளரின் வாழ்க்கை முறை குறித்த ரகசியங்கள் அம்பலமாகியுள்ளன.
சென்னை அண்ணாநகர் மேற்கு டிவிஎஸ் அவென்யூவை சேர்ந்தவர் சீனிவாசன்(38) . மென்பொருள் பொறியாளரான இவர் அண்ணாநகர் சாந்தி காலனியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ரூ.1.25 லட்சம் சம்பளத்தில் வேலை செய்கிறார்.
இவர் ஆங்கிலம், அடுக்கு வசனம், வசிய பேச்சு ஆகியவற்றை பயன்படுத்தி மாதவரத்தில் வசிக்கும் மதுரையை சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் அனிதா(37), கன்னியாகுமரியை சேர்ந்த ரோஸ்மேரி(32), கோவையை சேர்ந்த அரசு மருத்துவமனை மருத்துவர் சங்கீதா(35), சென்னைய சேர்ந்த அனுசுயா(30) ஆகியோரை ஏமாற்றி திருமணம் செய்திருப்பதும், பணம், நகைகளை ஏமாற்றி மோசடி செய்ததும் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இவரை பொலிசார் கைது செய்தனர், விசாரணையில் இவரது வாழ்க்கை முறை குறித்த ரகசியங்கள் அம்பலமாகின, சீனிவாசன் பொறியியல் முடித்துவிட்டு 2006ல் அமெரிக்கா சென்று, அங்கு 4 ஆண்டு தங்கியுள்ளார்.
சீனிவாசனுக்கு 3 சகோதரிகள், 2 பேர் அரசு பள்ளி ஆசிரியை. இவரது உறவினர்கள் அனைவரும் நல்ல வசதி படைத்தவர்கள். சீனிவாசன் குடும்பத்துக்கு சொந்தமாக ஈசிஆரில் 5 ஏக்கர் பரப்பளவில் பண்ணை வீடு உள்ளது.
பெரியபாளையம் அருகே வெங்கல் பகுதியில் 2 பண்ணை வீடுகள் உள்ளன. பிரபலமான திருமண வலைதளங்களில் சீனிவாசன் தனது பெயரை பதிவு செய்துள்ளார்.
சீனிவாசன் எப்போதும் அந்த இணையதளத்தில் உள்ள எண்களை தொடர்பு கொண்டு அவர்களியிடம் பேசுவார், எனக்கு திருமணமாகி விவாகரத்து பெற்றேன். என்னுடன் மன வளர்ச்சி குன்றிய மகனை வளர்த்து வருகிறேன். எனக்கு மனைவி முக்கியமல்ல, எனது மகனுக்கு ஒரு மிக சிறந்த தாய் வேண்டும் என்று மனதை நெகிழ வைக்கும் வகையில் பேசுவார்.
சிலரிடம் திருமணம் நடந்ததை மறைத்து வசீகரமாக பேசியுள்ளார். அதனை நம்பி பெண்கள் அவனிடம் குடும்பத்தின் அனைத்து தகவல்களையும் தெரிவிப்பார்கள்.
பெண்கள் நல்ல வசதி படைத்தவர்கள் என்று தெரிந்ததும், உடனே சீனிவாசன் தனது உறவினர்களுடன் 10 சொகுசு கார்களில் அந்த பெண் வீட்டிற்கு செல்வார். பின்னர் பெண் வீட்டாரை அழைத்துக் கொண்டு நட்சத்திர ஹொட்டலுக்கு சென்று பிரியாணி விருந்து வைப்பார்.
திருமணம் முடிந்த பிறகு, பெண் வீட்டாரிடம் வரதட்சணை கேட்க ஆரம்பிப்பார். இவ்வாறு தான் இவர் 4 பெண்களை ஏமாற்றியுள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னை அண்ணாநகர் மேற்கு டிவிஎஸ் அவென்யூவை சேர்ந்தவர் சீனிவாசன்(38) . மென்பொருள் பொறியாளரான இவர் அண்ணாநகர் சாந்தி காலனியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ரூ.1.25 லட்சம் சம்பளத்தில் வேலை செய்கிறார்.
இவர் ஆங்கிலம், அடுக்கு வசனம், வசிய பேச்சு ஆகியவற்றை பயன்படுத்தி மாதவரத்தில் வசிக்கும் மதுரையை சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் அனிதா(37), கன்னியாகுமரியை சேர்ந்த ரோஸ்மேரி(32), கோவையை சேர்ந்த அரசு மருத்துவமனை மருத்துவர் சங்கீதா(35), சென்னைய சேர்ந்த அனுசுயா(30) ஆகியோரை ஏமாற்றி திருமணம் செய்திருப்பதும், பணம், நகைகளை ஏமாற்றி மோசடி செய்ததும் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இவரை பொலிசார் கைது செய்தனர், விசாரணையில் இவரது வாழ்க்கை முறை குறித்த ரகசியங்கள் அம்பலமாகின, சீனிவாசன் பொறியியல் முடித்துவிட்டு 2006ல் அமெரிக்கா சென்று, அங்கு 4 ஆண்டு தங்கியுள்ளார்.
சீனிவாசனுக்கு 3 சகோதரிகள், 2 பேர் அரசு பள்ளி ஆசிரியை. இவரது உறவினர்கள் அனைவரும் நல்ல வசதி படைத்தவர்கள். சீனிவாசன் குடும்பத்துக்கு சொந்தமாக ஈசிஆரில் 5 ஏக்கர் பரப்பளவில் பண்ணை வீடு உள்ளது.
பெரியபாளையம் அருகே வெங்கல் பகுதியில் 2 பண்ணை வீடுகள் உள்ளன. பிரபலமான திருமண வலைதளங்களில் சீனிவாசன் தனது பெயரை பதிவு செய்துள்ளார்.
சீனிவாசன் எப்போதும் அந்த இணையதளத்தில் உள்ள எண்களை தொடர்பு கொண்டு அவர்களியிடம் பேசுவார், எனக்கு திருமணமாகி விவாகரத்து பெற்றேன். என்னுடன் மன வளர்ச்சி குன்றிய மகனை வளர்த்து வருகிறேன். எனக்கு மனைவி முக்கியமல்ல, எனது மகனுக்கு ஒரு மிக சிறந்த தாய் வேண்டும் என்று மனதை நெகிழ வைக்கும் வகையில் பேசுவார்.
சிலரிடம் திருமணம் நடந்ததை மறைத்து வசீகரமாக பேசியுள்ளார். அதனை நம்பி பெண்கள் அவனிடம் குடும்பத்தின் அனைத்து தகவல்களையும் தெரிவிப்பார்கள்.
பெண்கள் நல்ல வசதி படைத்தவர்கள் என்று தெரிந்ததும், உடனே சீனிவாசன் தனது உறவினர்களுடன் 10 சொகுசு கார்களில் அந்த பெண் வீட்டிற்கு செல்வார். பின்னர் பெண் வீட்டாரை அழைத்துக் கொண்டு நட்சத்திர ஹொட்டலுக்கு சென்று பிரியாணி விருந்து வைப்பார்.
திருமணம் முடிந்த பிறகு, பெண் வீட்டாரிடம் வரதட்சணை கேட்க ஆரம்பிப்பார். இவ்வாறு தான் இவர் 4 பெண்களை ஏமாற்றியுள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மணமேடையில் அம்பலமான மணமகளின் காதல் ரகசியம்: விஷம் குடித்த காதலன்
» பொலிசாரின் சித்ரவதையால் தூக்கில் தொங்கிய நபர்: டைரி குறிப்பால் அம்பலமான உண்மை
» ஒரு கோடி ஏழைகளுக்கு பிரியாணி தானம் செய்த “பிரியாணி பாபா”
» பொலிசாரின் சித்ரவதையால் தூக்கில் தொங்கிய நபர்: டைரி குறிப்பால் அம்பலமான உண்மை
» ஒரு கோடி ஏழைகளுக்கு பிரியாணி தானம் செய்த “பிரியாணி பாபா”
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum