Top posting users this month
No user |
Similar topics
மணமேடையில் அம்பலமான மணமகளின் காதல் ரகசியம்: விஷம் குடித்த காதலன்
Page 1 of 1
மணமேடையில் அம்பலமான மணமகளின் காதல் ரகசியம்: விஷம் குடித்த காதலன்
ஓசூர் பகுதியில் நடைபெற்ற திருமணம் ஒன்றில், திருமண மண்டபத்திலேயே மணப்பெண்ணின் காதல் அம்பலமாகியுள்ளது.
ஓசூர், சூளகிரி அருகே கொரளதொட்டி பகுதியைச் சேர்ந்த சென்னப்பா மகள் அனிதா (20) என்பவருக்கும், சூளகிரி அடுத்த பி.கொத்தப்பள்ளியைச் சேர்ந்த ரமேஷ் (24) என்பவருக்கும் சூளகிரியில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடக்க இருந்தது.
இரு வீட்டாரும் நேற்று முன்தினம்,திருமண மண்டபத்தில் திரண்டனர். இந்நிலையில், நேற்று அதிகாலை 4:00 மணிக்கு மணமகள் அறையை தட்டிய மர்ம நபர்கள் இருவரை மாப்பிள்ளை வீட்டார் பிடித்து விசாரித்த போது, அவர்களிடம் கம்பி மற்றும் மிளகாய் தூள் இருந்தது தெரிய வந்தது.
இருவரையும் சூளகிரி பொலிசில் ஒப்படைத்தனர். இருவரும் மண்டபத்திற்கு திருட வந்திருக்கலாம் என பொலிசாரும், மணமகன் வீட்டாரும் நினைத்தனர்.
விசாரணையில், இருவரும் சூளகிரி அடுத்த நல்லகானகொத்தப்பள்ளியைச் சேர்ந்த அப்பையா மகன் குமார், ஓசூர் அடுத்த நாகமலை பகுதியைச் சேர்ந்த பிரம்மதேவன் மகன் முருகேசன் என்பது தெரிய வந்தது.
இருவரும், மாதேஷ் என்பவருக்கு திருமணம் செய்து வைக்க மணமகளை கடத்திச் செல்ல வந்தது தெரிந்து பொலிசாரும், மணமகன் வீட்டாரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில், நேற்று காலை 6:45 மணிக்கு திருமண மண்டபத்திற்கு சென்ற மாதேஷ், என்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வேன் என மணப்பெண்ணிடம் கூறியுள்ளார்.
அனிதாவின் உறவினர்கள் மாதேஷை அடித்து வெளியேற்றினர். அப்போது, மறைத்து வைத்திருந்த விஷத்தை மாதேஷ் குடித்தார். இவரை பொலிசார் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர்.
பொலிசார் நடத்திய விசாரணையில், சூளகிரி அடுத்த திருமலைகோட்டா பகுதியில் உள்ள தனியார் கார்மென்ட்ஸ் நிறுவனத்தில், மாதேஷ், அனிதா வேலை செய்த போது இருவரும் காதலித்துள்ளனர்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அனைத்தையும் அறிந்து கொண்ட மணமகன் ரமேஷ், கடைசியில் அத்தை மகள் திவ்யாவை திருமணம் செய்து கொண்டார்.
ஓசூர், சூளகிரி அருகே கொரளதொட்டி பகுதியைச் சேர்ந்த சென்னப்பா மகள் அனிதா (20) என்பவருக்கும், சூளகிரி அடுத்த பி.கொத்தப்பள்ளியைச் சேர்ந்த ரமேஷ் (24) என்பவருக்கும் சூளகிரியில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடக்க இருந்தது.
இரு வீட்டாரும் நேற்று முன்தினம்,திருமண மண்டபத்தில் திரண்டனர். இந்நிலையில், நேற்று அதிகாலை 4:00 மணிக்கு மணமகள் அறையை தட்டிய மர்ம நபர்கள் இருவரை மாப்பிள்ளை வீட்டார் பிடித்து விசாரித்த போது, அவர்களிடம் கம்பி மற்றும் மிளகாய் தூள் இருந்தது தெரிய வந்தது.
இருவரையும் சூளகிரி பொலிசில் ஒப்படைத்தனர். இருவரும் மண்டபத்திற்கு திருட வந்திருக்கலாம் என பொலிசாரும், மணமகன் வீட்டாரும் நினைத்தனர்.
விசாரணையில், இருவரும் சூளகிரி அடுத்த நல்லகானகொத்தப்பள்ளியைச் சேர்ந்த அப்பையா மகன் குமார், ஓசூர் அடுத்த நாகமலை பகுதியைச் சேர்ந்த பிரம்மதேவன் மகன் முருகேசன் என்பது தெரிய வந்தது.
இருவரும், மாதேஷ் என்பவருக்கு திருமணம் செய்து வைக்க மணமகளை கடத்திச் செல்ல வந்தது தெரிந்து பொலிசாரும், மணமகன் வீட்டாரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில், நேற்று காலை 6:45 மணிக்கு திருமண மண்டபத்திற்கு சென்ற மாதேஷ், என்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வேன் என மணப்பெண்ணிடம் கூறியுள்ளார்.
அனிதாவின் உறவினர்கள் மாதேஷை அடித்து வெளியேற்றினர். அப்போது, மறைத்து வைத்திருந்த விஷத்தை மாதேஷ் குடித்தார். இவரை பொலிசார் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர்.
பொலிசார் நடத்திய விசாரணையில், சூளகிரி அடுத்த திருமலைகோட்டா பகுதியில் உள்ள தனியார் கார்மென்ட்ஸ் நிறுவனத்தில், மாதேஷ், அனிதா வேலை செய்த போது இருவரும் காதலித்துள்ளனர்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அனைத்தையும் அறிந்து கொண்ட மணமகன் ரமேஷ், கடைசியில் அத்தை மகள் திவ்யாவை திருமணம் செய்து கொண்டார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மகளை பலாத்காரம் செய்துவிட்டு விஷம் குடித்த தந்தை
» குளிர் தாங்காமல் மயங்கி விழுந்து உயிரிழந்த மணப்பெண்: மணமேடையில் நிகழ்ந்த சோகம்
» பொலிசாரின் சித்ரவதையால் தூக்கில் தொங்கிய நபர்: டைரி குறிப்பால் அம்பலமான உண்மை
» குளிர் தாங்காமல் மயங்கி விழுந்து உயிரிழந்த மணப்பெண்: மணமேடையில் நிகழ்ந்த சோகம்
» பொலிசாரின் சித்ரவதையால் தூக்கில் தொங்கிய நபர்: டைரி குறிப்பால் அம்பலமான உண்மை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum