Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பொலிசாரின் சித்ரவதையால் தூக்கில் தொங்கிய நபர்: டைரி குறிப்பால் அம்பலமான உண்மை

Go down

பொலிசாரின் சித்ரவதையால் தூக்கில் தொங்கிய நபர்: டைரி குறிப்பால் அம்பலமான உண்மை Empty பொலிசாரின் சித்ரவதையால் தூக்கில் தொங்கிய நபர்: டைரி குறிப்பால் அம்பலமான உண்மை

Post by oviya Mon Jun 15, 2015 2:36 pm

புதுக்கோட்டையில் பொலிசாரின் சித்ரவதையால் நபர் ஒருவர் இறந்தது, அவரது டைரி குறிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் பனையபட்டியை சேர்ந்த மீனாள் ஆச்சி (70) என்பவரை கடந்த 4ம் திகதி கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு 20 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

இதையடுத்து பொலிசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பனையபட்டியில் மளிகை கடை நடத்தி வந்த கணேசன் (30) மீது ஏற்பட்ட சந்தேகத்தால் பொலிசார் கொலை குறித்து அடிக்கடி விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் கணேசன் நேற்று முன்தினம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்போது அவர் தற்கொலைக்கான காரணத்தை எழுதி வைத்த டைரி கிடைத்துள்ளது.

அதில், பக்கத்து வீட்டில் நடந்த கொலைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இருந்தும் பொலிசார் என்னை அடிக்கடி அழைத்து சித்ரவதை செய்கின்றனர்.

இதனால் என்னால் தூங்க முடியவில்லை, சாப்பிட முடியவில்லை எனவே நான் தற்கொலை செய்து கொள்கிறேன். காவல் துறையினர் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும்.

எனக்கு ஏற்பட்ட இது போன்ற நிலை யாருக்கும் ஏற்பட கூடாது என்றும் இதில் எழுதியுள்ள தகவல்கள் அனைத்தும் உண்மை, அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள் எனவும் எழுதியுள்ளார்.

தற்கொலை செய்து கொண்ட கணேசனின் உடலை கைப்பற்றிய பொலிசார் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனைக்கு பின்னர் உடலை வாங்க மறுத்து கணேசனின் உறவினர்கள் மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களுடன் ஆர்.டி.ஓ. ஜோதிலிங்கம் நடத்திய பேச்சுவார்த்தையில், கணேசனின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும், குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும், பனையப்பட்டி காவல்துறை ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், அந்த கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக ஆர்.டி.ஓ. கூறியதை தொடர்ந்து கணேசனின் உடலை உறவினர்கள் வாங்கி சென்றுள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum