Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மனைவியை பிரிந்தது ஏன்? கவிஞர் தாமரையின் கணவர் தியாகு விளக்கம்

Go down

மனைவியை பிரிந்தது ஏன்? கவிஞர் தாமரையின் கணவர் தியாகு விளக்கம் Empty மனைவியை பிரிந்தது ஏன்? கவிஞர் தாமரையின் கணவர் தியாகு விளக்கம்

Post by oviya Sat Feb 28, 2015 2:05 pm

கவிஞர் தாமரையின் கணவர் தியாகு, நான் எங்கும் ஓடி ஒளியவில்லை என்று தாமரையை பிரிந்ததற்கு விளக்கமளித்துள்ளார்.
திரைப்பட பாடலாசிரியையும் கவிஞருமான தாமரை நேற்று, தன் கணவர் தியாகு தன்னை விட்டுப் பிரிந்து சென்று விட்டார் என்ற குற்றச்சாட்டுடன் உண்ணாவிரதம் இருந்தார்.

இந்நிலையில் அவரது கணவர் தியாகு இந்த விவகாரத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறுகையில், நான் எங்கும் ஓடி ஒளியவில்லை, சென்னை- வேளச்சேரியில் மகள் வீட்டில்தான் இருக்கிறேன்.

இல்லறத்தில் இருந்து பொது வாழ்க்கையில் ஈடுபடலாம். இல்லாது போன அறத்தில் இருந்து எப்படி பொதுவாழ்க்கையில் ஈடுபடுவது?

கடந்த ஐந்து வருடங்களாக எங்களுக்குள் பிரச்சினை இருந்தது உண்மைதான். அதற்கு ஒரு முடிவு வேண்டும் அல்லவா? சேர்ந்து வாழ முடியாமல் இருக்கும் போது பிரிவதுதான் ஜனநாயகத் தீர்வு

எனக்கு இன்னொரு திருமணம் செய்து கொள்ளும் விருப்பம் இல்லை. எனவே தாமரை விவாகரத்து கேட்காமல் நான் நீதிமன்றத்தை அணுக மாட்டேன்.

அவர் விவகாரத்து கேட்டால் கொடுக்க தயாராக இருக்கிறேன். அதே நேரத்தில் என் மகனிடம் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்கிறேன்.

இதில் எந்தத் தப்பும் செய்யாமல் என் மகன் வருத்தப்படுவதுதான் கஷ்டமாக இருக்கிறது.

நான் தாமரையிடம் எத்தனையோ முறை மகனை பகடைக் காயாக பயன்படுத்த வேண்டாம் என்று சொல்லியிருக்கிறேன். ஆனாலும், அவரை பகடைக் காயாக பயன்படுத்திக் கொண்டே இருக்கிறார்.

தற்போது ஏழாம் வகுப்பு படிக்கும் என் மகனை நான் வளர்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

அவன் வளர்ந்த பிறகு யாருடன் இருக்க வேண்டும் என்பதை அவரே தீர்மானிக்கட்டும். என் மகன் அம்மா மாதிரி கெட்டிக்காரன்.

மேலும், என் மகன் வளர்ந்து பெரியவன் ஆனதும், நான் பிரிந்தது நன்மைக்குதான் என்பதை உணர்ந்து கொள்வார் என்று தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum