Top posting users this month
No user |
Similar topics
விபத்தில் உயிரிழந்தும் பலரை வாழவைத்த புதுமாப்பிள்ளை
Page 1 of 1
விபத்தில் உயிரிழந்தும் பலரை வாழவைத்த புதுமாப்பிள்ளை
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த புதுமாப்பிள்ளை ஒருவர் விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்டு மரணம் அடைந்ததால் அவரது உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த குன்னலூர் ராஜா தெருவை சேர்ந்த வெங்கட்ராஜ் (37), இவர் லண்டனில் ஒரு ஹொட்டல் மேலாளராக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில், இவருக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடந்தது.
இதையடுத்து சொந்த ஊருக்கு வந்த அவர், கடந்த டிசம்பர் மாதம் குன்னூரை அடுத்த கள்ளிக்குடி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று வெங்கட்ராஜ் மீது மோதியதில் படுகாயம் அடைந்த அவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு 2 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்றுமுன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தற்போது இதுகுறித்து எடையூர் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து மூளைச்சாவு அடைந்த வெங்கட்ராஜின் உடலில் இருந்து இருதயம், கல்லீரல், கணையம், சிறுநீரகம், கண்கள் ஆகிய உறுப்புகள் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டு சென்னையில் 2 தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 5 நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த குன்னலூர் ராஜா தெருவை சேர்ந்த வெங்கட்ராஜ் (37), இவர் லண்டனில் ஒரு ஹொட்டல் மேலாளராக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில், இவருக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடந்தது.
இதையடுத்து சொந்த ஊருக்கு வந்த அவர், கடந்த டிசம்பர் மாதம் குன்னூரை அடுத்த கள்ளிக்குடி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று வெங்கட்ராஜ் மீது மோதியதில் படுகாயம் அடைந்த அவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு 2 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்றுமுன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தற்போது இதுகுறித்து எடையூர் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து மூளைச்சாவு அடைந்த வெங்கட்ராஜின் உடலில் இருந்து இருதயம், கல்லீரல், கணையம், சிறுநீரகம், கண்கள் ஆகிய உறுப்புகள் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டு சென்னையில் 2 தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 5 நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» விபத்தில் உயிரிழந்தும் 6 பேரை வாழவைத்த வாலிபர்
» மூதூர் விபத்தில் ஒருவர் மரணம்- கடந்த ஒன்பது மாதங்களில் வாகன விபத்தில் 2171 பலி
» புதுமாப்பிள்ளை தேன் நிலவுக்கு செல்வது போல் மோடி இலங்கை விஜயம்: சீமான்
» மூதூர் விபத்தில் ஒருவர் மரணம்- கடந்த ஒன்பது மாதங்களில் வாகன விபத்தில் 2171 பலி
» புதுமாப்பிள்ளை தேன் நிலவுக்கு செல்வது போல் மோடி இலங்கை விஜயம்: சீமான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum