Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஆட்சியை தக்கவைக்கும் மகிந்தவின் சதித்திட்டம்! விசாரணை அறிக்கை தாமதமாவதன் காரணம் என்ன?

Go down

ஆட்சியை தக்கவைக்கும் மகிந்தவின் சதித்திட்டம்! விசாரணை அறிக்கை தாமதமாவதன் காரணம் என்ன? Empty ஆட்சியை தக்கவைக்கும் மகிந்தவின் சதித்திட்டம்! விசாரணை அறிக்கை தாமதமாவதன் காரணம் என்ன?

Post by oviya Fri Feb 06, 2015 1:20 pm

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருந்த கடந்த ஜனவரி மாதம் 9ம் திகதி அதிகாலை ஆட்சியை தக்கவைக்கும் நோக்கில் மகிந்த ராஜபக்ச மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சதித்திட்டம் தொடர்பான விசாரணை அறிக்கை தாமதமாவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
மகிந்தவின் சதித்திட்டம் குறித்து வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் செய்த முறைப்பாடு சம்பந்தமான ஆரம்ப விசாரணை அறிக்கை ஒரு வார காலத்திற்குள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் அந்த ஆரம்ப விசாரணை அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை என தெரியவருகிறது.

இராணுவ பலத்தை பயன்படுத்தி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சி அதிகாரத்தை தக்க வைக்கும் சதித்திட்டம் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டது.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசேட குழு ஒன்று இது சம்பந்தமான விசாரணைகளை நடத்தி வந்தது. விசாரணையின் ஆரம்ப அறிக்கை வெளியிடப்படுவது ஏன் தாமதமாகியது என்பதை ஊடகங்களுக்கு வெளியிட முடியாது என திணைக்கள வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த அறிக்கை வழங்கப்படுவது தாமதமாகி வருவது குறித்து ஆளும் கட்சியினர் பலர் உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர்.

சிரச தொலைக்காட்சிக்கு கடந்த வாரம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க வழங்கியிருந்த விசேட செவ்வியில், குறித்த சதித்திட்டம் சம்பந்தமாக உறுதிப்படுத்தக் கூடிய தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum