Top posting users this month
No user |
Similar topics
ஜெயலலிதா சொத்துக்களை மதிப்பிட்டவர்கள் ரசீதுகளை கிழித்தது ஏன்? நாகேஸ்வரராவ் கேள்வி
Page 1 of 1
ஜெயலலிதா சொத்துக்களை மதிப்பிட்டவர்கள் ரசீதுகளை கிழித்தது ஏன்? நாகேஸ்வரராவ் கேள்வி
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் சொத்துகளை மதிப்பீடு செய்தவர்கள் அதனை ஆதாரங்களுடன் நிரூபிக்காமல், அதன் ரசீதுகளை கிழித்துப் போட்டது ஏன் என்று அவரது வழக்கறிஞர் எல்.நாகேஸ்வர ராவ் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி முன்னி லையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
ஜெயலலிதா தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலும், உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான எல்.நாகேஸ்வர ராவ், கேரள உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், வழக்கறிஞருமான ஆர்.பசன்ட், மூத்த வழக்கறிஞர் பி.குமார் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் ஆஜராகினர்.
வழக்கறிஞர் எல்.நாகேஸ்வர ராவ் மூன்றாவது நாளாக தனது இறுதி வாதத்தை தொடர்ந்தார்.
அப்போது அவர் வாதிட்டதாவது:
சொத்துக்குவிப்பு வழக்கின் ஆரம்பகட்ட விசாரணையின் போது, ஜெயலலிதாவின் சொத்துகளை மதிப்பிட 2 குழுக்களை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை பொலிசார்அமைத்தனர்.
இந்த அதிகாரிகள் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கதவு எண் 31 மற்றும் 36 போயஸ் கார்டன் வீடு, அதிலிருந்த அலங்காரப் பொருட்கள், மின் சாதனங்கள், சலவை கற்களை மதிப்பீடு செய்தனர்.
இதேபோல ஹைதராபாத் திராட்சைத் தோட்டத்தில் உள்ள ஜி.டி.மெட்லா கட்டிடத்தையும், அங் குள்ள பொருட்களையும் மதிப்பீடு செய்தனர். இந்த இரு சொத்துகளும் சுமார் ரூ.13 கோடி மதிப்புள்ளவை என்று கூறியுள்ளனர்.
ஆனால் இதற்காக எத்தகைய ஆதாரங்களையும் தாக்கல் செய்யவில்லை. அப்போதைய சந்தை மதிப்புடன் ஒப்பிட்டு, பொருட்களின் விலைப் பட்டியலை தோராயமாக தயாரித்துள்ளனர்.
இதற்கான ஆதாரத்தை மதிப் பீட்டுக் குழுவில் இடம்பெற்ற பொறியாளர்கள் செந்தில், திருத்துவராஜ், ஜெயபால் ஆகியோரிடம் குறுக்கு விசாரணை செய்த போது, “பொருட்களின் விலை தொடர்பாக பெறப்பட்ட ரசீதுகளை கிழித்துப் போட்டதாக தெரிவித்துள்ளனர். உண்மையான ஆதாரத் துடன் மதிப்பை நிரூபிக்க வேண்டிய ரசீதுகளை கிழித்து போட்டது ஏன்?
போயஸ் கார்டன் வீடு, ஹைதாரபாத் திராட்சை தோட்டம் தொடர்பான அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் தொடர்பாக ஜெயலலிதா வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளார். அதை வருமானவரி தீர்ப்பாயம் ஏற்றுக்கொண்டு சான்று அளித்துள்ளது.
வருமானவரி தீர்ப்பாயத்தின் முடிவை எதிர்த்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்தபோது, அவர்களுடைய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதன் மூலம் ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு தொடர்பாக வருமான வரி தீர்ப்பாயத்தின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அதனை கவனத்தில் கொள்ளாதது ஏனோ தெரியவில்லை என்று வாதிட்டுள்ளார்.
ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி முன்னி லையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
ஜெயலலிதா தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலும், உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான எல்.நாகேஸ்வர ராவ், கேரள உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், வழக்கறிஞருமான ஆர்.பசன்ட், மூத்த வழக்கறிஞர் பி.குமார் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் ஆஜராகினர்.
வழக்கறிஞர் எல்.நாகேஸ்வர ராவ் மூன்றாவது நாளாக தனது இறுதி வாதத்தை தொடர்ந்தார்.
அப்போது அவர் வாதிட்டதாவது:
சொத்துக்குவிப்பு வழக்கின் ஆரம்பகட்ட விசாரணையின் போது, ஜெயலலிதாவின் சொத்துகளை மதிப்பிட 2 குழுக்களை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை பொலிசார்அமைத்தனர்.
இந்த அதிகாரிகள் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கதவு எண் 31 மற்றும் 36 போயஸ் கார்டன் வீடு, அதிலிருந்த அலங்காரப் பொருட்கள், மின் சாதனங்கள், சலவை கற்களை மதிப்பீடு செய்தனர்.
இதேபோல ஹைதராபாத் திராட்சைத் தோட்டத்தில் உள்ள ஜி.டி.மெட்லா கட்டிடத்தையும், அங் குள்ள பொருட்களையும் மதிப்பீடு செய்தனர். இந்த இரு சொத்துகளும் சுமார் ரூ.13 கோடி மதிப்புள்ளவை என்று கூறியுள்ளனர்.
ஆனால் இதற்காக எத்தகைய ஆதாரங்களையும் தாக்கல் செய்யவில்லை. அப்போதைய சந்தை மதிப்புடன் ஒப்பிட்டு, பொருட்களின் விலைப் பட்டியலை தோராயமாக தயாரித்துள்ளனர்.
இதற்கான ஆதாரத்தை மதிப் பீட்டுக் குழுவில் இடம்பெற்ற பொறியாளர்கள் செந்தில், திருத்துவராஜ், ஜெயபால் ஆகியோரிடம் குறுக்கு விசாரணை செய்த போது, “பொருட்களின் விலை தொடர்பாக பெறப்பட்ட ரசீதுகளை கிழித்துப் போட்டதாக தெரிவித்துள்ளனர். உண்மையான ஆதாரத் துடன் மதிப்பை நிரூபிக்க வேண்டிய ரசீதுகளை கிழித்து போட்டது ஏன்?
போயஸ் கார்டன் வீடு, ஹைதாரபாத் திராட்சை தோட்டம் தொடர்பான அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் தொடர்பாக ஜெயலலிதா வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளார். அதை வருமானவரி தீர்ப்பாயம் ஏற்றுக்கொண்டு சான்று அளித்துள்ளது.
வருமானவரி தீர்ப்பாயத்தின் முடிவை எதிர்த்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்தபோது, அவர்களுடைய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதன் மூலம் ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு தொடர்பாக வருமான வரி தீர்ப்பாயத்தின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அதனை கவனத்தில் கொள்ளாதது ஏனோ தெரியவில்லை என்று வாதிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஜெயலலிதா தரப்பினர் 100 மார்க் வாங்கி விட்டனரா? கருணாநிதி சரமாரி கேள்வி
» 600 கோடி சொத்துக்களை துறந்து ஜைன மதத் துறவியாக மாறிய கோடீஸ்வரர்
» சன் குழுமத்தின் ரூ.742 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்க வழக்கு.. செப்ரெம்பர் 7ல் இறுதி விசாரணை: உச்சநீதிமன்றம் அறிவிப்பு
» 600 கோடி சொத்துக்களை துறந்து ஜைன மதத் துறவியாக மாறிய கோடீஸ்வரர்
» சன் குழுமத்தின் ரூ.742 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்க வழக்கு.. செப்ரெம்பர் 7ல் இறுதி விசாரணை: உச்சநீதிமன்றம் அறிவிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum