Top posting users this month
No user |
Similar topics
தமிழக மீனவர்களை கல்லால் அடித்த இலங்கை கடற்படையினர்
Page 1 of 1
தமிழக மீனவர்களை கல்லால் அடித்த இலங்கை கடற்படையினர்
கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை பூட்ஸ் காலால் மிதித்தும், கல்லால் தாக்கியும் இலங்கை கடற்படையினர் கொடூர செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
ஒவ்வொரு முறையும் மீன்பிடிக்க செல்லும் போது எல்லை தாண்டி வந்துவிட்டார்கள், போதை பொருள் கடத்தினர் என தமிழக மீனவர்கள் மீது பொய் வழக்குகள் போட்டு இலங்கை கடற்படையினர் அட்டூழியத்தில் ஈடுபடுவது வழக்கம்.
இந்நிலையில் நேற்று ராமேஸ்வரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் 600 விசைப்படகுகளில் மீன் பிடிக்க சென்றனர்.
இவர்களில் ஒரு தரப்பினர் கச்சத்தீவு அருகே வலைகளை விரித்து மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது 6 சிறிய ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் 30 பேர், மீனவர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், விலை மதிப்புமிக்க மீன்களை கடலில் தூக்கி எறிந்துவிட்டனர்.
மேலும் இந்த பகுதியில் மீன்பிடித்தால் சிறைபிடித்து செல்வோம் என கூறி அவர்கள் கொண்டு வந்திருந்த கல், பாட்டில்களால் மீனவர்களை சரமாரியாக தாக்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து தாக்குதலுக்கு ஆளான மீனவர்கள் கூறுகையில், நாங்கள் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் இங்கு மீன்பிடிக்க கூடாது என்று கூறி வலைகளையும், மீன்களையும் தூக்கி எறிந்து சேதப்படுத்தினர்.
கற்களால் தாக்கியதில் மீனவர் ஒருவருக்கு மண்டை உடைந்தது. மேலும் அவர்கள் எங்களை பூட்ஸ் காலால் மிதித்து கொடுமைப்படுத்தினர். இதனால் நாங்கள் பாதியிலேயே கரை திரும்பினோம் என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு முறையும் மீன்பிடிக்க செல்லும் போது எல்லை தாண்டி வந்துவிட்டார்கள், போதை பொருள் கடத்தினர் என தமிழக மீனவர்கள் மீது பொய் வழக்குகள் போட்டு இலங்கை கடற்படையினர் அட்டூழியத்தில் ஈடுபடுவது வழக்கம்.
இந்நிலையில் நேற்று ராமேஸ்வரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் 600 விசைப்படகுகளில் மீன் பிடிக்க சென்றனர்.
இவர்களில் ஒரு தரப்பினர் கச்சத்தீவு அருகே வலைகளை விரித்து மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது 6 சிறிய ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் 30 பேர், மீனவர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், விலை மதிப்புமிக்க மீன்களை கடலில் தூக்கி எறிந்துவிட்டனர்.
மேலும் இந்த பகுதியில் மீன்பிடித்தால் சிறைபிடித்து செல்வோம் என கூறி அவர்கள் கொண்டு வந்திருந்த கல், பாட்டில்களால் மீனவர்களை சரமாரியாக தாக்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து தாக்குதலுக்கு ஆளான மீனவர்கள் கூறுகையில், நாங்கள் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் இங்கு மீன்பிடிக்க கூடாது என்று கூறி வலைகளையும், மீன்களையும் தூக்கி எறிந்து சேதப்படுத்தினர்.
கற்களால் தாக்கியதில் மீனவர் ஒருவருக்கு மண்டை உடைந்தது. மேலும் அவர்கள் எங்களை பூட்ஸ் காலால் மிதித்து கொடுமைப்படுத்தினர். இதனால் நாங்கள் பாதியிலேயே கரை திரும்பினோம் என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இல.கடற்படையினர் தமிழக மீனவர்களை புகைப்படம், வீடியோ எடுத்ததால் பரபரப்பு
» தமிழக மீனவர்களை துச்சமாக எண்ணும் இலங்கை தலைகள்: இராமேஸ்வர மீனவ பிரதிநிதி கண்டனம்
» 6 இலங்கை மீனவர்களை காப்பாற்றிய அமெரிக்க கடற்படை
» தமிழக மீனவர்களை துச்சமாக எண்ணும் இலங்கை தலைகள்: இராமேஸ்வர மீனவ பிரதிநிதி கண்டனம்
» 6 இலங்கை மீனவர்களை காப்பாற்றிய அமெரிக்க கடற்படை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum