Top posting users this month
No user |
Similar topics
ரயிலில் திடீரென தோன்றி பாட்டு பாடிய பாலிவுட் சூப்பர்ஸ்டார்
Page 1 of 1
ரயிலில் திடீரென தோன்றி பாட்டு பாடிய பாலிவுட் சூப்பர்ஸ்டார்
நடிகர் அமிதாப் பச்சன் புற்றுநோயாளிகளுக்கு நிதி திரட்டும் வகையில் மும்பை புறநகர் ரயிலில் பயணம் செய்து பாட்டு பாடியுள்ளார்.
மும்பையைச் சேர்ந்த சவுரவ், மும்பை புறநகர் ரயில்களில் பாடல்கள் பாடி புற்றுநோயாளிகளுக்கு நிதி திரட்டி வருகிறார்.
இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றில் சவுரவ் பற்றிய நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளதால், விக்டோரியா முனையத்திலிருந்து பாண்டுப் செல்லும் ரயிலில் சவுரவுடன் இணைந்து அமிதாப் பச்சனும் பயணம் செய்துள்ளார்.
யாரும் எதிர்பாராத வகையில் பயணிகள் மத்தியில் திடீரென அமிதாப் பாடியதால் பயணிகள் அனைவரும் ஆச்சர்யமடைந்துள்ளனர்.
அமிதாப் பச்சன் ட்விட்டரில் இதுதொடர்பாக கூறுகையில், சவுரவ் ரயில் பயணம் செய்து கிதார் இசைத்தபடி பாடுகிறார்.
அவரது பாடலை கேட்டு பயணிகள் கொடுக்கும் நிதியை மும்பையில் உள்ள புற்றுநோயாளிகளுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் வழங்குகிறார்.
அவரது எண்ணம் மலைப்பில் ஆழ்த்துகிறது. இதயத்தை தொடுகிறது. அவர் செல்லும் தொலைவு வரை கூடவே அமர்ந்து பயணம் செய்ய வேண்டும் என்பது எனது விருப்பம்.
புற்றுநோயாளிகளுக்கான நற்பணியில் தனி ஆளாக இருப்பதாக சவுரவ் நினைத்திடக்கூடாது. அதனால் என்னையும் இதில் இணைத்துக் கொண்டுள்ளேன்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி முடிந்த பிறகும் எனது ஆதரவு இருக்கும். இதனால் பிறரும் இதேபோல் செய்ய முன்வருவார்கள் என நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மும்பையைச் சேர்ந்த சவுரவ், மும்பை புறநகர் ரயில்களில் பாடல்கள் பாடி புற்றுநோயாளிகளுக்கு நிதி திரட்டி வருகிறார்.
இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றில் சவுரவ் பற்றிய நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளதால், விக்டோரியா முனையத்திலிருந்து பாண்டுப் செல்லும் ரயிலில் சவுரவுடன் இணைந்து அமிதாப் பச்சனும் பயணம் செய்துள்ளார்.
யாரும் எதிர்பாராத வகையில் பயணிகள் மத்தியில் திடீரென அமிதாப் பாடியதால் பயணிகள் அனைவரும் ஆச்சர்யமடைந்துள்ளனர்.
அமிதாப் பச்சன் ட்விட்டரில் இதுதொடர்பாக கூறுகையில், சவுரவ் ரயில் பயணம் செய்து கிதார் இசைத்தபடி பாடுகிறார்.
அவரது பாடலை கேட்டு பயணிகள் கொடுக்கும் நிதியை மும்பையில் உள்ள புற்றுநோயாளிகளுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் வழங்குகிறார்.
அவரது எண்ணம் மலைப்பில் ஆழ்த்துகிறது. இதயத்தை தொடுகிறது. அவர் செல்லும் தொலைவு வரை கூடவே அமர்ந்து பயணம் செய்ய வேண்டும் என்பது எனது விருப்பம்.
புற்றுநோயாளிகளுக்கான நற்பணியில் தனி ஆளாக இருப்பதாக சவுரவ் நினைத்திடக்கூடாது. அதனால் என்னையும் இதில் இணைத்துக் கொண்டுள்ளேன்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி முடிந்த பிறகும் எனது ஆதரவு இருக்கும். இதனால் பிறரும் இதேபோல் செய்ய முன்வருவார்கள் என நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மனிதன் தோன்றி வளர்ந்த கதை
» தீட்சிதர் பாடிய திருத்தலங்கள்
» திடீரென காற்றில் மறையும் மனிதர்கள்...அமானுஷ்யத்தின் தலைநகரம்!
» தீட்சிதர் பாடிய திருத்தலங்கள்
» திடீரென காற்றில் மறையும் மனிதர்கள்...அமானுஷ்யத்தின் தலைநகரம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum