Top posting users this month
No user |
ஜனாதிபதி மஹிந்தவை ஆதரித்து கல்பிட்டியில் பொது கூட்டம்: நூற்றுக்கும் குறைவான மக்கள் பங்கேற்பு
Page 1 of 1
ஜனாதிபதி மஹிந்தவை ஆதரித்து கல்பிட்டியில் பொது கூட்டம்: நூற்றுக்கும் குறைவான மக்கள் பங்கேற்பு
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சஷ அவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் ஆளும்கட்சியின் ஏற்பாட்டில் கல்பிட்டியில் நடைபெற்ற கூட்டத்தில் 100க்கும் குறைவானவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கல்பிட்டி பிரதேச சபை தலைவர் மின்ஹாஜ் தலைமையில் கல்பிட்டி பிரதேச சபை முன்னால் உள்ள சந்தியில் நேற்று முற்பகல் இந்தப் பொதுக் கூட்டம் இடம்பெற்றது.
இதில் விசேட அழைப்பாளராக அமைச்சர் பசில் ராஜபக்ஷ கலந்து கொண்டிருந்தார். மேலும் சிரேஷ்ட அமைச்சர் பௌசி, ஆளுங்கட்சியின் கல்பிட்டி பிரதேச அமைப்பாளரும் தெங்கு அபிவிருத்தி பிரதி அமைச்சருமான விக்டர் அன்டனி பெரேரா, பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்னாண்டோ, வடமேல் மாகாண சபை முதலைமச்சர் தயாசிறி ஜயசேகர, வடமேல் மாகாண சபை உறுப்பினர் தாஹிர் ஆகியோருடன் கல்பிட்டி பிரதேச சபையின் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
எனினும் முக்கிய அமைச்சர்கள் , அரசியல்வாதிகள் பலர் கலந்து கொண்டிருந்த இந்தக் கூட்டத்தில் நூற்றுக்கும் குறைவான பொதுமக்களே கலந்து கொண்டிருந்தனர்.
இதன் காரணமாக அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்கள் கடும் அதிருப்தியுடன் சுருக்கமாக உரையாற்றிவிட்டு கூட்டத்தை முடித்துக் கொண்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
கல்பிட்டி பிரதேச சபை தலைவர் மின்ஹாஜ் தலைமையில் கல்பிட்டி பிரதேச சபை முன்னால் உள்ள சந்தியில் நேற்று முற்பகல் இந்தப் பொதுக் கூட்டம் இடம்பெற்றது.
இதில் விசேட அழைப்பாளராக அமைச்சர் பசில் ராஜபக்ஷ கலந்து கொண்டிருந்தார். மேலும் சிரேஷ்ட அமைச்சர் பௌசி, ஆளுங்கட்சியின் கல்பிட்டி பிரதேச அமைப்பாளரும் தெங்கு அபிவிருத்தி பிரதி அமைச்சருமான விக்டர் அன்டனி பெரேரா, பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்னாண்டோ, வடமேல் மாகாண சபை முதலைமச்சர் தயாசிறி ஜயசேகர, வடமேல் மாகாண சபை உறுப்பினர் தாஹிர் ஆகியோருடன் கல்பிட்டி பிரதேச சபையின் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
எனினும் முக்கிய அமைச்சர்கள் , அரசியல்வாதிகள் பலர் கலந்து கொண்டிருந்த இந்தக் கூட்டத்தில் நூற்றுக்கும் குறைவான பொதுமக்களே கலந்து கொண்டிருந்தனர்.
இதன் காரணமாக அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்கள் கடும் அதிருப்தியுடன் சுருக்கமாக உரையாற்றிவிட்டு கூட்டத்தை முடித்துக் கொண்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum