Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கண்ணீருடன் வெளியே வந்த நடிகை ரம்யா: எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்தபோது நடந்தது என்ன?

Go down

கண்ணீருடன் வெளியே வந்த நடிகை ரம்யா: எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்தபோது நடந்தது என்ன? Empty கண்ணீருடன் வெளியே வந்த நடிகை ரம்யா: எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்தபோது நடந்தது என்ன?

Post by oviya Tue Oct 20, 2015 3:04 pm

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நடிகை ரம்யா காங்கிரஸ் மூத்த தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்துவிட்டு அழுதபடியே வெளியே வந்த வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கடந்த 9 மற்றும் 10ம் திகதிகளில் கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் செய்த போது, மண்டியா மாவட்டத்தில் தற்கொலை செய்து கொண்ட விவசாயியின் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.

அப்போது கட்சி சார்பில் ரூ.1 லட்சம் நிவாரணத்திற்கான காசோலையை ராகுல் காந்தி வழங்கியுள்ளார்.

அந்த காசோலை ஜனதா தளம் (எஸ்) கட்சியை சேர்ந்த புட்டராஜூ எம்.பி.யின் கைக்கு சென்றதால், இதுகுறித்து காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் திக்விஜய்சிங்கிடம் நடிகை ரம்யா புகார் செய்துள்ளார்.

அமைச்சர் அம்பரீஷ் தான் அந்த காசோலையை அவரிடம் வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த குழப்பத்திற்கு நடிகை ரம்யா தான் காரணம் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஹரிபிரசாத்திடம் அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.

பின்னர், டெல்லி சென்ற நடிகை ரம்யா, காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியை நடிகை ரம்யா நேரில் சந்தித்து விளக்கமளித்துள்ளார்.

இதையடுத்து காங்கிரஸ் மூத்த தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணாவை பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் நடிகை ரம்யா சந்தித்து பேசியுள்ளார்.

அப்போது அவரிடம் நடிகை ரம்யா, விவசாயி குடும்பத்திற்கு நிவாரண காசோலை வழங்கியதில் நான் குழப்பத்தை உண்டாக்கியதாக தவறாக குற்றம் சாட்டுகிறார்கள்.

அந்த குழப்பத்திற்கு நான் காரணம் இல்லை. நான் யாருக்கு எதிராகவும் சதிதிட்டம் தீட்டவில்லை.

எதற்காக இவ்வாறு வம்புக்கு இழுக்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது அரசியலில் தொடர்ந்து இருக்க வேண்டுமா? என்று யோசிக்கிறேன். என்று கண்ணீருடன் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

பின்னர் ரம்யாவை சமாதானப்படுத்திய எஸ்.எம்.கிருஷ்ணா, அரசியலில் இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பது சகஜம் தான்.

ஒவ்வொரு அடியையும் எச்சரிக்கையாக எடுத்து வைக்க வேண்டும். அனைத்து பிரச்சனைகளையும் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறியதாக தவல்கள் தெரிவிக்கின்றன.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum